“அனைத்தும் கடவுளாலேயே உண்டாயின. அனைத்தும் கடவுளுக்காகவே இருக்கின்றன. அந்தக் கடவுளுக்கே புகழும் மாட்சியும் உரித்தாகுக” (உரோ 11:36). இவ்வசனம் இப்போது மிகப் பொருத்தமாக இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. தலைமை அன்னை கூறியது போன்று 250 ஆண்டுகளுக்கு முன்பாக மடம் என்ற நிலையில் இருந்த ஓர் அமைப்பு இன்று பெரும் குடும்பமாக இருக்கிறது.
இப்படிப்பட்ட
விருட்சத்தன்மை என்பது கடவுளால் மட்டுமல்லாமல், வேறு யாராலும் நமக்குக் கிடைத்திருக்காது. அலோசியஸ் கொன்சாகா சபை கடவுளால் தரப்பட்டது.
சத்தம்
இல்லாமல் சாதனை புரிகின்ற அற்புதமான அருள்சகோதரிகளால் சபை இன்று வளர்ந்து நிற்கின்றது. கடவுளுக்கு மட்டுமே இந்தச் சபை பணிபுரிந்து கொண்டிருக்கிறது.
தொடக்க
காலத்திலிருந்து இயேசு சபைக்கும் கொன்சாகா சபைக்கும் நெருங்கிய உறவு இருக்கிறது. மைக்கேல் அன்சால்தோ என்ற இறை ஊழியர் மட்டுமல்ல, ஞானப்பிரகாசியார் என்ற பாதுகாவலர் மட்டுமல்ல, அன்று தொடங்கி இன்றுவரை உள்ள இயேசு சபையினர் எல்லாருக்கும் பங்களிப்பு புரிவதற்கான வாய்ப்பைக் கொன்சாகா சபை எங்களுக்குத் தந்திருக்கிறது.
நவதுறவு
நிலை கல்லூரிகளிலும், இன்னும் பல துறைகளிலும் பொறுப்பேற்று
இயேசு சபையினர் கொன்சாகா சபைக்கு உதவி புரிந்திருக்கின்றார்கள். ஆன்மிக ரீதியாக, சட்ட ரீதியாக, சமூக ரீதியாக, பண்பாட்டு ரீதியாகத் தெளிவுகளைத் தந்திருக்கின்றார்கள். இயேசு சபையினரோடு உறவினை உருவாக்கிக்கொள்வதற்கான வாய்ப்பினைக் கொன்சாகா சபை தந்திருக்கின்றது. எனவே, சிரம் தாழ்த்தி, கரம் கூப்பி நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இயேசு
சபை என்ன பணிகளைச் செய்து கொண்டிருக்கின்றதோ அந்தப் பணிகளிலும் கொன்சாகா சபை பங்காளிகளாக இருக்கின்றார்கள்.
1986-ஆம் ஆண்டில்
வீதி நாடகம் வழியாக மக்களுக்குச் சமூக சேவை புரியும் நிலையில் நாங்கள் இருந்தபொழுது, சகோதரி அல்போன்சா அவர்கள் எங்களுடன் வந்து மக்களுக்கு உதவி செய்ய முன் வந்தார். கரிசல் என்ற பகுதியிலே துப்புரவு தொழிலைச் செய்கின்ற மக்களைக் கண்டு உருவாக்கப்பட்ட அந்தப் பணியில், பணியின் தோழர்களாகக் கொன்சாகா சபையினர் பணிபுரிந்து இருக்கின்றார்கள்.
பல
துறைகளில் பண்டித்துவமும் தெளிவும் பெற்றிருந்தாலும், சத்தம் இல்லாமல் சாதனை புரிகின்ற சபையாகக் கொன்சாகா சபை இருக்கின்றது. இதைத்தான் சபையின் பெரும் வரமாக நாங்கள் பார்க்கின்றோம்.
ஏழையாகத்
தாழ்ச்சி நிறைந்த இயேசுதாம் நம்மை ஏழைகள் வாழும் தெருக்களில் நடக்க வைக்கின்றார். ஏழ்மையும் தாழ்ச்சியுமான இயேசு நம் ஒவ்வொருவருக்கும் தூண்டுதலாக இருந்து நாம் பணியாற்ற உதவி செய்வாராக!
தாழ்ச்சியால்
நிறைந்திருந்த இயேசு பல சகாப்தங்களைக் காண
உங்களுக்கு அருள்புரிய வேண்டும். சகாப்தங்களைப் படைக்கின்ற காட்சிகளில் நாங்களும் உங்களுடைய சாட்சிகளாக இருப்போம். எனவே, இவ்வேளையிலே உங்களை வாழ்த்துகின்றோம்; உங்களுக்காகச் செபிக்கின்றோம்!