news-details
சிறப்புக்கட்டுரை
250 ஆண்டுகள்: தியாகத்தின் சிகரம்! பணியின் மைல்கள்!

அன்புநிறை சகோதரிகளுக்கும், பிரான்சிஸ்குவின் குடும்பத்தினருக்கும், விழாவில் கலந்துகொண்டிருக்கும் அனைவருக்கும் வாழ்த்துகள்! இந்த இனியதொரு நாள், நமது பிரான்சிஸ்கன் சகோதரிகள் 250 ஆண்டுகாலத் தன்னலமற்ற சேவைப் பணியை நிறைவுசெய்து, ஆண்டவருக்கு நன்றி செலுத்தும் யூபிலி நிகழ்வாக அமைவதில் எல்லையற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில் நானும் ஒரு பிரான்சிஸ்கனாகக் கலந்துகொள்வது மிகுந்த பெருமையைத் தருகிறது. சபை அன்னை மோ. திரேசா ஞானமணி, மாநிலத் தலைவிகள் உள்பட அனைத்துக் குழுவினரின் அர்ப்பணிப்பும், அரும்பணியும் போற்றுதலுக்குரியவை. உங்களுடைய பணிக்கு எனது உளமார்ந்த வாழ்த்துகளையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

தியாக வாழ்வின் சுவடுகள் 250 ஆண்டுகள் என்பது வெறும் கால அளவு அல்ல. அது தொடர்ச்சியான தியாகத்தின் சிகரம். இது நமது சபையின் பணியானது ஒருபோதும் தொய்ந்துவிடக்கூடாது என்பதற்கான உத்வேகத்தை அளிக்கும் ஒரு பெரிய மைல்கல் ஆகும். பணியின் தொடக்கம் மட்டுமல்ல, எதிர்காலச் சிந்தனை என்ற இலக்கோடு இந்த விழா அமைந்திருப்பது மிகவும் சிறப்பு.

ஏழைகளுக்கான நற்செய்திமறைவானவை வீட்டின் மேற்கூறையிலிருந்து அறிவிக்கப்படும்என்ற இறைவாக்குக்கு ஏற்ப, நீங்கள் மறைவாகச் செய்த பணி இன்று வெளிச்சத்திற்குக் கொண்டுவரப்படுகிறது என்பதைக் காணும் போது மெய்சிலிர்க்கிறது. ‘Gospel To The Poor(ஏழைகளுக்கு நற்செய்தி) என்ற உன்னத நோக்கத்தை, நீங்கள் மிகச் சிறப்பாக நிறைவேற்றி வருகிறீர்கள். 1775 - இல் கொன்சாகா இல்லமாகத் தொடங்கி, 1886-இல்பிரான்சிஸ்கள் சிஸ்டர்ஸ் ஆப் செயின்ட் அலோசியஸ் கொன்சாகாஎன்ற பெயரில் திரு அவையின் வடிவம் பெற்றது, உங்கள் சபையின் வளர்ச்சியைப் பறைசாற்றுகிறது. புனித அசிசியார் தன் போதனைகளால் அல்லாமல், எடுத்துக்காட்டான வாழ்வுமுறையால் பலரைப் பின்பற்றுமாறு செய்தார். அவர் காட்டிய வழியில், மைக்கேல் அன்சால்தோ அவர்களால் உருவாக்கப்பட்ட சகோதரிகளாகிய நீங்கள், திருத்தந்தை லியோ XIV  கூறியதுபோல, “Poor church For The Poorஎன்ற இலக்குக்கேற்பpoor Gonzaga for the poorஆகச் சேவை செய்கிறீர்கள். கல்விப்பணி, சமூகப்பணி, சட்டப்பணிகள் என உங்கள் சேவையின் அனைத்துத் துறைகளிலும் நீங்கள் தொடர்ந்து சிறந்து விளங்க உளமார வாழ்த்துகிறேன். இறைப்பணி மென்மேலும் தொடரட்டும்! நற்செய்தி ஏழைகளைச் சென்றடையட்டும்! உங்கள் பணிக்கு இறைவன் எப்போதும் பரிசளிக்கட்டும்!