news-details
கவிதை
தாயாய் அரவணைக்கும் கொன்சாகா!

துறவியாக வாழ ஆசை கொண்ட தருணம்

ஆர்வமாய் அரவணைத்த கொன்சாகா தாய்

வழிநடத்திய பாதைகள்தந்த அனுபவங்கள்.

கற்றுக் கொடுத்த பாடங்கள்ஏராளம்ஏராளம்!

 

பிறந்த மண்ணை விட்டு வட மாநிலத்தில்

பணியாற்ற - அதுவும் முதன்முறை

மூன்று சகோதரிகளுடன் பயணித்த

இரயில் பயணம்

நிறைத்தது கண்களை கண்ணீரால்

அந்தக் கண்ணீரும் ஆனந்த கண்ணீரானது

பெற்ற அனுவங்களால்...

செப்பனிடப்பட்ட தருணங்களால்!

 

புது இடம் புது மொழி

புதுக் கலாச்சாரம் புது உணர்வு

மத மொழி இன வேறுபாடு இருப்பினும்

இறைவனின் அன்பை

குழந்கைகளுக்கு எடுத்துரைக்க

பெரியவர்களை அனுபவித்து உணர வைக்க!

 

இறைவனே இல்லை என்றவர்களின் நம்பிக்கையைத் தட்டியெழுப்ப

வாய்ப்பு மனவலிமை விசுவாசம் - இவற்றை

கற்றுத் தந்தது

எம் கொன்சாகா சபை!

 

இயேசுவை அறிவித்தால் தண்டனை ஒருபுறம்;

இயேசுவை அறியத் துடிக்கும் மக்கள் மறுபுறம்;

இரண்டின் மத்தியில் இறையரசைப் பரப்ப

எம் சபை ஊட்டியது வலுவை

இவ்வலுவுடன் ஆற்றினேன் நற்செய்திப்பணி!

கல்விப்பணியிலும் குழந்தைகளின்

மனத்தில் நற்பண்புகளை விதைத்து

இறை விழுமியங்களை மலரச் செய்து

உண்மையின் பிரதிபலிப்பாக மாற்ற

வாய்ப்பு தந்த எம் கொன்சாகா சபைக்கு

250-ஆம் ஆண்டு கொண்டாடும் இத்தருணத்தில்

எம் சபையை வாழ்த்தி - இன்னும்

பல பணிகளைச் சிறப்பாக செய்ய

இறையருள் வேண்டி இறைஞ்சுகிறேன்!