அன்பின் ஒளியாம் அவனியில் வந்தீர்;
அருளின்
வடிவாய் எளியோரைக் கண்டீர்
இன்பம்
தனைநீர் என்றும் பாராமல்
துன்பம்
துடைப்பதே பணியெனக் கொண்டீர்!
கல்விக்
கண்திறக்கும் கருணையின் கரங்கள்
இல்லாமை
போக்கும் இறைவனின் வரங்கள்
பெண்களின்
வாழ்வுயரப் பெரும்பாடுபட்டீர்
மண்ணில்
மாந்தர்க்கு மறுவாழ்வு தந்தீர்!
ஆதரவு
அற்றவருக்கு அன்னையாய் திகழ்ந்தீர்
ஆறுதால்
மொழியாய் ஆனந்தம் தந்தீர்
சாதிகள்
பாராமல் சேவையைச் செய்தீர்
சமூக
நீதிக்காய் சளைக்காமல் நின்றீர்!
தங்கள்
நலமே ஒருபோதும் கருதா
தருமம்
ஒன்றே தலைசிறந்த தென்றீர்
எங்கும்
நிறைந்திடும் இறைவனின் ஒளியாய்
கொன்சாகா
அன்னையே வாழ்க நீர் என்றுமே!
நற்செய்தி
கல்வி சமூகப்பணி வழியிலே
நலிந்தோருக்கு
தந்தீர் நலமான வாழ்வையே
ஐந்தைம்பது
ஆண்டுகளாய் ஆற்றிய பணிகளை
அகிலமும்
போற்றுமே! சேவை தொடர என்றும் வாழ்த்துமே!