“மலிவான இணையக் கட்டணங்களால் ஏழைகளும் சமூக ஊடகங்களை அணுக முடிவதாக பிரதமர் கூறுகிறார். ஆனால், தொலைத்தொடர்பு துறையில் ஒரேயொரு நிறுவனத்தின் ஏகபோகத்தை அனுமதிப்பது குறித்துப் பதில்கூற மறுக்கிறார். ரீல்ஸ், இன்ஸ்டாகிராமுக்கு மக்கள் அடிமையாக வேண்டும் என்பதே அவரது விருப்பம். அப்படி அடிமையாகிவிட்டால், மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டியிருக்காது. மகாராஷ்டிரம், ஹரியானாவைப் போல பீகாரிலும் வாக்குகளைத் திருட பா.ச.க. முயற்சிக்கிறது. வாக்குத் திருட்டு என்பது அம்பேத்கரின் அரசமைப்புச் சட்டத்தின் மீதான தாக்குதலாகும்.”
திரு. இராகுல்காந்தி,
காங்கிரஸ்
எம்.பி.
எதிர்க்கட்சித்
தலைவர்
“வெனிசுலாவின்
சோசலிச சர்வாதிகார ஆட்சியை எதிர்த்துத் தொடர்ந்து போராடி வரும் மச்சாடோ, தனியார்மயப்படுத்தப்பட்ட சந்தை, வெளிநாட்டு முதலீடுகள், அமெரிக்கா உள்ளிட்ட ஜனநாயக நாடுகளுடன் நல்லுறவு ஆகியவற்றை ஆதரிக்கிறார். ஆயுதப் போராட்டங்கள் இல்லாமல், அச்சத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தங்கள் உரிமைகளுக்காகப் போராடும் உலகெங்கிலும் இருக்கிற மக்களுக்குக் கிடைத்த மகத்தான அங்கீகாரமாக நோபல் பரிசுக்கு அறிவிக்கப்பட்டுள்ள மச்சாடோவைப் பார்க்கலாம். சர்வாதிகாரத்தை அசைத்துப் பார்க்கும் ஜனநாயகத்தின் புன்னகையாகவே மச்சாடோவின் கரங்களில் தவிழ்கிறது இந்த நோபல் பரிசு.”
முனைவர் திரு.
வைகைச்செல்வன்,
மேனாள்
அமைச்சர்
“மனித
நுண்ணறிவு கடந்த நூற்றாண்டில் பல அதிசயங்களை உருவாக்கியது.
ஆனால் இப்பொழுது, மனிதநேயம் உருவாக்கிய செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) அந்த
மனித நுண்ணறிவுக்கே சவால் விடும் நிலையை அடைந்துள்ளது. செயற்கை நுண்ணறிவு மருத்துவ உலகில் புரட்சிகரமான மாற்றங்களைக் கொண்டுவரும் ஆற்றலைக் கொண்டுள்ளது. ஆனால், அது இலாபத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட வணிகமாக மாறும்போது, அதன் அதீதமான நன்மைகள் சாதாரண மக்கள் அனைவருக்கும் சமமாகக் கிடைப்பதை உறுதி செய்வது மிகப்பெரிய சவாலாக அமையும்.”
திரு. எஸ்.எஸ்.
ஜவஹர்,
ஐ.ஏ.எஸ்.
அதிகாரி
(ஓய்வு)