news-details
சிறப்புக்கட்டுரை
‘காட்டில் ஊழியம் செய்யும்’ கொன்சாகா

அருள்தந்தையர்களுக்கும், அருள்சகோதரிகளுக்கும் எம் இதயப்பூர்வமான யூபிலி விழா வாழ்த்துகள்!

1977-ஆம் ஆண்டு மேல்நிலைப் பள்ளி மாணவனாக இருந்தபோது, நான் நெல்லூர் மறைமாவட்டக் குருமடத்தில் இணைந்தேன். அந்த நாளிலிருந்து இன்றுவரை, கொன்சாகா சகோதரிகள் உண்மையாகவேகாட்டில் ஊழியம் செய்யும்சபையாகத் திகழ்ந்து வருகின்றனர் என்பதற்கு நான் முதல் சாட்சி.

அவர்கள் தங்கள் முதல் மிஷன் நிலையத்தை இராப்பூரில் தொடங்கினர் - அது ஒரு காட்டுப் பகுதியில் தொழுநோயாளர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட பணி. அதிலிருந்து பொதலக்கூர், தக்கிளி, சி.எஸ்.புரம் போன்ற இடங்களிலும் தங்கள் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தினர். அங்கிருந்து அவர்கள் விஜயவாடா, மங்கினபுடி, மோட்ட, குண்டூர், சின்னபுரி, மயிலவரம், மேலும் ஹைதராபாத் வரை தங்கள் சேவையை விரிவுபடுத்தினர். நற்செய்தியை அறிவிப்பதில் மட்டுமல்ல - அதை வாழ்ந்து காட்டும் சகோதரிகள் இவர்கள். மொழி தெரியாமல் இருந்தாலும், அன்பும் அர்ப்பணிப்பும் என்ற சர்வமொழி வழியாக இயேசுவின் அன்பை வெளிப்படுத்தியவர்கள்.

அருள்பணி. விக்டர்தாஸ், நெல்லூர்

இதோ எங்களுடைய ஆயர் அவர்களின் மடல், சபைத் தலைவி சகோதரி தெரேசா ஞானமணி அவர்களுக்கு எழுதியதின் சுருக்கம்:

இந்த 250 ஆண்டுகள் யூபிலியை முன்னிட்டு, இது நன்றி செலுத்தும் நேரமாக இருக்கட்டும். கடந்த காலத்தின் ஆசிர்வாதங்களை நினைவுகூரவும், வருங்காலத்தின் நோக்கங்களைப் புதுப்பிக்கவும். உங்களில் இந்த நற்செயலைத் தொடங்கிய ஆண்டவர், உங்களுடைய சபையைப் புனிதம், ஒற்றுமை மற்றும் உண்மையான விசுவாசத்துடன் தொடர்ந்து ஆசிர்வதிக்கட்டும்.

இராப்பூரில் முதல் மிஷன் நிலையத்தைத் தொடங்கிய தியாக மனப்பான்மைக்கும், நெல்லூர் மறைமாவட்டத்தில் காட்டிய தாராளப்பணிக்கும் நன்றி. தொழுநோயாளர்களின் மத்தியில் உருவாக்கிய வரவேற்கத்தக்க சூழ்நிலை, நெல்லூர் மறைமாவட்ட வரலாற்றில் பொன்னெழுத்துகளால் எழுதப்பட வேண்டியதாகும்.

சகோதரிகளே, உங்களை வாழ்த்துகிறேன், நன்றி கூறுகிறேன், பாராட்டுகிறேன். பரலோகத்தில் உங்கள் வெகுமதி பெரியதாக இருக்கும்.

மேலும், எங்களுடைய கோரிக்கையின் பேரில், சகோதரி அகஸ்டின் சகாயம் அவர்களை அனுப்பி, குழந்தை இயேசுவின் சகோதரிகளுக்கு (Sisters of Infant Jesus) உதவிய உங்களின் கருணையும் தாராளத்தையும் நினைவுகூர்கிறேன். அவர் சிறப்பாகச் சேவை செய்து வருகிறார் என்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

இந்த 250-வது யூபிலி மகிழ்ச்சியான கொண்டாட்டத்திற்காக எம் இதயப்பூர்வ வாழ்த்துகளும், தொடர்ந்த வளர்ச்சிக்கும் ஆசிர்வாதங்களும் உங்களுடன் இருக்கட்டும்.

மேதகு ஆயர் மோசஸ் டி. பிரகாசம்

மேதகு ஆண்டனிதாஸ் சி., துணை ஆயர், நெல்லூர் மறைமாவட்டம்