எண்ம (டிஜிட்டல்) தனிநபர் பாதுகாப்புச் சட்ட விதிமுறைகள் 2025-ஐ மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
தங்கள்
தரவுகளைக் குடிமக்கள் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கவும், அந்தத் தரவுகள் தவறாகப் பயன்படுத்தாமல் இருப்பதை உறுதி செய்யவும் இந்த விதிமுறைகள் வழிவகை செய்கின்றன. அத்துடன் இணையத்தில் அவர்களின் தன்மறைப்பு நிலையைக் (பிரைவசி) காக்க வேண்டும் என்பதும் இந்த விதிமுறைகளின் நோக்கமாக உள்ளது.
தனிநபர்
தரவுகள் தொடர்பாக நிறுவனங்கள் கடுமையாகப் பின்பற்றவேண்டிய கால அட்டவணையையும் இந்த விதிமுறைகள் தெளிவாக வரையறுத்துள்ளன. இந்த விதிமுறைகள் 12 முதல் 18 மாதங்களுக்குப் பிறகு முழுமையாக நடைமுறைக்கு வரும்.
இது
தொடர்பாக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
2023-ஆம் ஆண்டின்
தனிநபர் தரவுப் பாதுகாப்புச் சட்ட விதிமுறைகள் அறிவிக்கப்படுகின்றன. இந்த விதிமுறைகளின்படி, ஒருவரின் தனிப்பட்ட தரவுகள் எதற்காகத் திரட்டப்பட்டுப் பயன்படுத்தப்படுகின்றன என்பது குறித்து வெளிப்படையாக விளக்கி, அதற்குச் சம்பந்தப்பட்ட நபரிடமிருந்து எளிமையான முறையில் ஒப்புதல் பெறுவதற்கான நோட்டீசைத் தரவு நிர்வாகப் பொறுப்பாளர்கள் (ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடகத் தளங்கள், கூகுள், விளையாட்டுச் செயலி நிறுவனங்கள் போன்றவை) வெளியிடவேண்டும்.
தனிநபர்
ஒருவரின் தரவு கசிந்தால், அது குறித்து அந்த நபருக்குத் தரவு நிர்வாகப் பொறுப்பாளர்கள் முறைப்படி எளிமையான மொழியில் தெரியப்படுத்த வேண்டும். அந்தத் தரவு கசிவு தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள், உதவிக்குத் தொடர்புகொள்ள வேண்டியவரின் விவரங்களுக்கும் தெரிவிக்கப்பட வேண்டும்.
இந்தத்
தரவுகளைக் கையாள்வது தொடர்பான சந்தேகங்கள் குறித்து, தனிநபர்கள் கேள்வி எழுப்புவதில் உதவ, தரவுப் பாதுகாப்பு அதிகாரி அல்லது பிரத்யேக அதிகாரியைத் தொடர்பு கொள்வதற்கான விவரத்தைத் தரவு நிர்வாகப் பொறுப்பாளர்கள் தெளிவாகத் தெரியப்படுத்தவேண்டும்.
90 நாள்களில் பதில்: தங்களைப் பற்றிய தரவுகளைத் தனிநபர்கள் அணுகுதல், பிழைகளைத் திருத்துதல், புதுப்பித்தல் அல்லது அளிக்கும் உரிமை, அந்த உரிமையைத் தங்கள் சார்பாகப் பயன்படுத்த மற்றொருவரை தனிநபர்கள் நியமித்தல் போன்ற கோரிக்கைகளுக்கு அதிகபட்சமாக 90 நாள்களுக்குள் தரவு நிர்வாகப் பொறுப்பாளர்கள் பதிலளிக்கவேண்டும்.
தரவுப் பாதுகாப்பு
வாரியம்:
இணைய வழியில் பிரத்யேக தளம், கைப்பேசி செயலி மூலம் தங்கள் தரவுகள் தொடர்பான புகார்களைப் பொதுமக்கள் அளிக்கவும், அந்தப் புகார்கள் மீதான நடவடிக்கை இந்தக் கட்டத்தில் உள்ளது என்பதைப் பின்தொடர உதவும் வகையிலும், முழுமையான எண்ம நிறுவனமாகத் தரவுப் பாதுகாப்பு வாரியம் செயல்படும். இந்தப் புகார்கள் தொடர்பான முடிவுகளுக்கு எதிராகத் தொலைத்தொடர்பு சச்சரவுக்கான தீர்வு மற்றும் மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தில் (டி.டி.எஸ்.ஏ.டி.) மேல்முறையீடு
செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த
விதிமுறைகள் மூலம், தங்கள் தரவுகளைப் பயன்படுத்துவதற்கான ஒப்புதலை எந்த நேரத்திலும் இரத்து செய்யும் அதிகாரம் தனிநபர்களுக்குக் கிடைக்கும். விளம்பரம் அல்லது மோசடி செய்யும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படும் அமைப்புகளைப் பொதுமக்கள் தவிர்க்கவும், எந்தவோர் எண்ம வழியிலும் அவர்களின் தனிநபர் தரவு, காணொளி மற்றும் குரல் பதிவை அனுமதியின்றிப் பெறுவதைத் தடுக்கவும் இந்த விதிமுறைகள் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தனிநபர் தரவு கசிவின் தன்மையைப் பொறுத்து அதற்குத் தரவுப் பாதுகாப்பு வாரியம் அபராதம் வசூலிக்கவும் இந்த விதிமுறைகள் வழிவகுக்கின்றன.
சட்ட நடவடிக்கை:
தனிநபரின் அனுமதியில்லாமல் அவரின் கைப்பேசி எண் கசிந்து தேவையற்ற அழைப்புகள் வந்தால், அந்த எண்ணை எந்த நிறுவனம் கசியவிட்டது என்பது குறித்து விசாரணை நடத்தி, அது குறித்துச் சட்ட நடவடிக்கை மேற்கொள்ள இந்த விதிமுறைகள் உதவும்.
நீதிமன்ற உத்தரவுகளை
நடைமுறைப்படுத்துதல்:
ஏதேனும் குற்றம் நிகழ்ந்தால் அதற்கு எதிரான விசாரணை மற்றும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுதல் போன்ற சூழல்களில் பொதுமக்களுக்கு உள்ள உரிமையை இந்த விதிமுறைகள் கட்டுப்படுத்துகின்றன.
மூன்று ஆண்டுகள்
பயன்படுத்தாமல்
இருந்தால்:
பயநராக உள்ள தனிநபர்கள் தங்கள் கணக்கை மூன்று ஆண்டுகளாகப் பயன்படுத்தாமல் இருந்தால், அவர்களின் தனிப்பட்ட தரவை இணையவழி வர்த்தக நிறுவனங்கள், இணையவழி விளையாட்டு நிறுவனங்கள் மற்றும் சமூக ஊடகத்தளங்கள் அளிக்கவேண்டும் என்று விதிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.