news-details
சிறப்புக்கட்டுரை
அரசியலில் A.I.-யின் தந்திரங்கள் (உலகம் உன் கையில் – 14)

மனிதத் தேவைகள் அதிகரித்துக் கொண்டே போகும் போக்கில், விஞ்ஞானம் (Science) மனிதனைத் தன் திசைக்கே அழைத்துச் சென்று கொண்டிருக்கிறது.

விஞ்ஞானம் ஆட்சியாளர்களுக்குத் தேவையான தகவல்களையும் கருவிகளையும் புதிய அணுகுமுறைகளையும் வழங்கி ஆட்சி அமைப்பிற்கு உதவுவது மட்டுமன்றி, ஆட்சியாளர்கள் தகுந்த கொள்கைகளை உருவாக்கவும் முடிவுகளை எடுக்கவும் முக்கியக் கருவியாக விளங்குகிறது.

புதிய தொழில்நுட்பங்களும் கண்டுபிடிப்புகளும் உற்பத்தித்திறனை அதிகரிக்கவும், புதிய தொழில்களை உருவாக்கவும், பொருளாதார வளர்ச்சியைத் தூண்டவும் உதவுகின்றன. சமுதாயமும் சுற்றுச்சூழலும் (Society and environment) ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்து செயல்படுவதையும், விஞ்ஞானம் மனித வாழ்க்கையில் பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வருவதையும், இம்மாற்றங்கள் பொருளாதாரத்தில் பிரதிபலிப்பதையும் நாம் கண்கூடாகக் காண்கிறோம்.

இன்று உலக மக்கள் அனைவரும் ஒரே தரமான வாழ்க்கையைப் பெறாவிட்டாலும், பெரும்பாலானோர் விஞ்ஞான-தொழில்நுட்ப வளர்ச்சியின் பலன்களை அனுபவித்து வருகின்றனர் என்பது உண்மை. விஞ்ஞானமும் தொழில்நுட்ப வளர்ச்சியும் தானாக  வளரவில்லை. நாம் வாழும் பூமியின் இயற்கை வளங்களையும் செல்வங்களையும் முதலீடாக வைத்து அல்லது சில சமயங்களில் அவற்றைச் சிதைத்தும்தான் இந்த முன்னேற்றம் சாத்தியமாகியுள்ளது. இதற்கு நாம் இப்போது சந்தித்துக் கொண்டிருக்கும் காலநிலைமாற்றமே ஒரு சிறந்த சான்று. புவி வெப்பமடைதல், காலநிலை மாற்றம் போன்ற பிரச்சினைகள் இயற்கை வளங்களை அளவுக்கு அதிகமாகவும், அதிகாரத்தில் இருந்தோர் அறிந்தோ அறியாமலோ பின்பற்றிய முறையின் விளைவுகள் என்பதை மறுக்கமுடியுமா?

ஒரு காலத்திலிருந்த மன்னராட்சி (Monarchy) முடிந்து, இப்போது பெரும்பாலும் உலகளவில் குடியரசு (Democracy) முறையே நடைமுறையில் உள்ளது. இதனை எவ்வகையில் நாடுகள் செயல்படுத்தி வருகின்றன என்பது ஒருபுறமிருக்க, விஞ்ஞான வளர்ச்சி அரசியலை மாற்றி வருகின்றதைக் காணமுடிகிறது.

நாம் வாழும் உலகம் கடந்த 100 ஆண்டுகளில் மிகச் சிறியதாகிவிட்டதுபோல் தெரிவதற்கு முக்கியக் காரணங்களில் ஒன்று விஞ்ஞான வளர்ச்சியினால் ஏற்பட்ட தொலைத்தொடர்பு (Communication), ஊடகம் (Media), வான்வழிப் பயணம் (Air travel) எனலாம்.

சென்ற நூற்றாண்டின் கடைசியில் (1980), .. உருவெடுத்தாலும் அடுத்த பத்து ஆண்டுகளில் இறங்குமுகத்தைக் கண்டது. ஆனால், இந்த நூற்றாண்டின் (2000) தொடக்கத்தில் புதிய திறனுடன் .. தொழில்நுட்பம் இன்று உலகளவிலும், நாடுகளின் ஆட்சி அமைப்பிலும், அரசியல் தேவைகளிலும் பெரும் பங்கு வகிக்கிறது.

ஆட்சிப்பீடத்தைப் பிடிக்க அரசமைப்புகள் எவ்வித உத்திகளையும் கையாளத் தயாராகிவிட்ட நிலையில், இன்றைய வியத்தகு விஞ்ஞான சாதனங்களும் அமைப்புகளும் பழம் நழுவி பாலில் விழுந்தாற்போலக் கிடைத்திருக்கின்றன.

சமூக ஊடகங்கள் (Social media)

பொதுவாக ஊடகங்களும், .. தொழில்நுட்பமும் இணைந்து செயல்படுவதைக் காண்கிறோம். இன்ஸ்டாகிராம், டுவிட்டர், முகநூல், ரெடிட், டிக்டாக் (Instagram, Twitter, Facebook, Reddit, Tik Tok, YouTube, Linked in) என்று பல சமூக வலையமைப்புகள்! தவிர அரசு, தனியார் சார்ந்த தொலைக்காட்சி நிறுவனங்கள், செய்தித்தளங்கள் இவையனைத்தும் செய்தியைப் பகிர்வதும், ஒளிபரப்புவதும் நடைமுறையில் உள்ளன. அரசியல் கட்சிகளும் வேட்பாளர்களும் சமூக ஊடக வலையமைப்புகள், தளங்களைத் தங்கள் அரசியல் தேவைக்குப் பயன்படுத்துவது வாடிக்கையாகிவிட்டது. இதன் மூலம் குடிமக்கள் பல்வேறு அரசியல் பிரச்சினைகள் குறித்துத் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் விவாதிக்கவும், குறுகிய காலத்தில் ஏராளமான மக்களைத் தொடர்பு கொள்ளவும், மக்கள் தங்கள் பிரச்சினைகளை ஆட்சியாளர்கள் கவனத்திற்குக் கொண்டு செல்லவும், பொது கருத்துகளை உருவாக்கவும் முடிகிறது.

 இவ்வாறு ஊடகங்கள் ஆட்சியமைப்பில் முக்கியப் பங்காற்றும் (Participationபெரும் சக்திகளாக உருவெடுத்துவிட்டன. சில தொலைக்காட்சிச் சேனல்களை (Channels), அரசியல் கட்சிகளும், தனிமனிதரும் தங்களுக்கென்று சொந்தமாக வைத்திருப்பது நடைமுறையாகிவிட்டது. அரசியல் தேவைக்காகச் செய்திகளை அவர்களாகவே தயாரித்து ஒளிபரப்புவதும், அதில் பிறர் தலையிடமுடியாத நிலையும் இன்றுள்ளது.

வலிமையான சில அரசியல் கட்சிகள், பல தொலைக்காட்சிச் சேனல்களை வசப்படுத்தி அரசியல் செய்திகளைத் தங்கள் கட்சிக்குச் சாதகமாக ஒளிபரப்புவதை மக்களும் பார்த்துப் பழகிக்கொண்டனர்.

தேர்தல் யூகங்கள், முன்கணிப்புகள் என்று கூறி சில ஊடகங்கள் கட்சிகளுக்குச் சாதகமாகப் புள்ளி விவரங்களைச் செய்திகளாக ஒளிபரப்புவது அன்றாட நிகழ்வாகிவிட்டதற்குக் காரணம் தொழில்நுட்பமா? கட்சிகளா? அல்லது கண்டும் காணாமலிருக்கும் பொதுமக்களா? என்ற வினாவிற்குப் பதில் இல்லாத நூற்றாண்டில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

இன்றைய சமூக ஊடகங்கள்போலியில் போலி (Deep Fake) என்னும் கடலில் மூழ்கிவிடும் சூழலில், அரசியல் களத்தில் இத்தொழில்நுட்பம் ஒருபுறம் கவரும்படியான செய்திகள்; மறுபுறம் ஜோடித்த உண்மையற்றவைகளைப் (Misinformationபரப்ப உதவுகின்றன. இதன் விளைவாக, குடியரசுக் கட்டமைப்பில் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதில் மக்கள் குழப்பநிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.

ஓர் ஆராய்ச்சியாளர், இன்றைய .தொழில்நுட்ப சமூக ஊடகத்தை அணு தொழில்நுட்பத்துடன் ஒப்பிடுகிறார். எவ்வாறு அணு தொழில்நுட்பம் மின்சக்தி உற்பத்திக்கு நன்மைபயக்கும் அதே வேளையில், அணு ஆயுத உற்பத்தியால் மனிதகுலத்திற்கே ஆபத்தாகவும் அமைந்திருக்கிறதோ, அதேபோன்று ..-க்கும் இரட்டை வேடம் தரித்து அதில் ஆதாயம் தேடப்படுகிறதோ? என்ற கேள்வி எழுவதாகக் கூறுகிறார்.

(தொடரும்)