news-details
சிறப்புக்கட்டுரை
இஸ்திரிப் பெட்டி (வலையும் வாழ்வும் – 34)

அது ஓர் அடுக்குமாடிக் குடியிருப்புகள் கொண்ட பகுதி. வானுயர வீடுகள் இல்லையென்றாலும், இரண்டு மூன்று மாடிகளில் வீடுகள் அட்டைப் பெட்டிகளைப்போல அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு வீடும் ஒவ்வொரு கதையைக் கூறும் வகையில் கவித்துவமாகக் காட்சியளித்தன.

துள்ளியோடும் மான்குட்டியைப்போல பாவாடைச் சட்டையோடு ஏழு வயது ஜாஸ்பின் குதூகலமாக அந்தஅமேஃயீங்அப்பார்ட்மெண்ட் தெருக்களில் தினமும் ஓடித்திரிவாள். ஜாஸ்பினுடைய பெற்றோர் அந்த அப்பார்ட்மெண்ட்காரர்களின் துணிகளுக்கு இஸ்திரிப் போட்டுத் தருபவர்கள். தினமும் வீட்டிலிருந்து குடும்பத்தோடு தங்கள் மூன்று சக்கர சைக்கிளில் வந்துவிடுவார்கள். அந்த மூன்று சக்கர சைக்கிள் இஸ்திரிப் போடுவதற்காகவே நடுவில் பலகை அடிக்கப்பட்டுப் பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டிருந்தது.

ஜாஸ்பினும், அவளுடைய தாயும் பின்பக்கமாக அமர்ந்துகொள்ள, அந்த மூன்று சக்கர சைக்கிளை அவளுடைய தந்தை, ஒரு தேரை இழுத்து வருவதைப்போல இழுத்து வருவார். அந்தச் சைக்கிள் ஓட்டிச்செல்வதற்கு ஏற்றதாக இல்லை. ‘அமேஃயீங்அப்பார்ட்மெண்ட் தெருக்களில் செல்வதற்கு ஜாஸ்பினுக்கு ஆர்வமாக இருக்கும். தினமும் வருகிறபோதும் போகிறபோதும், அத்தெருவில் ஓடியாடி விளையாடுகிறபோதும், இஸ்திரி போடப்பட்ட துணிகளை வீடுகளுக்குச் சென்று கொடுத்துவரப் போகிறபோதும் அந்த வீடுகள் அவளுக்குப் பிரமிப்பை ஏற்படுத்தும்.

மஞ்சள் பெயிண்ட் அடித்த வீட்டிற்குமஞ்சணத்திஎன்று பெயர் வைத்தாள். வெள்ளை நிற வீட்டிற்குவெளுப்பி.’ வீட்டின் முன்பாகக் கொடிகள் படர்ந்திருந்த வீட்டின் பெயர்பூங்கொடி. இப்படி ஒவ்வொரு வீட்டிற்கும் அவள் பெயர் வைத்திருந்தாள். சில வீட்டுச் சன்னல்கள் அவளைப் பார்த்துக் கண்ணடிக்கும்; வீட்டு மாடியில் காய்ந்துகொண்டிருக்கும் துணிகள் அவளைப் பார்த்துக் கையசைத்து அழைக்கும். சிலசமயம் அந்த வீடுகளோடு அவள் பேசுவதும் உண்டு. அந்த அப்பார்ட்மெண்ட் தெருக்களில் அவளைத் தெரியாத யாரும் இல்லை, எந்த வீடும் இல்லை.

ஒருநாள் காலைஅமேஃயீங்அப்பார்ட்மெண்ட் எதிர்புறம் இருந்த குடிசை வீடுகளை இடித்துப் போட புல்டோசர் வண்டி ஒன்று வந்து நின்றது. அந்தச் சேரிப்பகுதியில் வாழ்கின்ற மக்கள் எல்லாரும் தங்கள் தலையிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு அழுதனர். சாலையில் அமர்ந்து போராட்டம் செய்தனர். அவர்களுள் ஜாஸ்பினும் ஒருவர்.

அதிகாரிகள் பின்வாங்குவதாக இல்லை. ‘நீங்க இருக்கிறது புறம்போக்கு நிலம்; பிரச்சினை பண்ணாமல் உடனே காலி செய்யுங்கள்என்று அதிகாரி ஒருவர் ஒலிப்பெருக்கியில் கூறிக் கொண்டிருந்தார்.

எங்க வீடுகளை இடித்தால் நாங்கள் எங்கே சாமி போவோம்?’ என்று மூதாட்டி ஒருத்தி அதிகாரி ஒருவரிடம் மன்றாடிக் கொண்டிருந்தார். செவிடன் காதில் ஊதப்பட்ட சங்கு சத்தம் போல, வந்திருந்த அதிகாரிகளுக்கு அங்கிருந்த யார் சொல்லும் கேட்கவில்லை.

வீடுகள் அனைத்தும் தரைமட்டமாக்கப்பட்டன. குழந்தைகள் கட்டிய கடற்கரை மாளிகையை ஏதோ பெருத்த கால்கள் மிதித்துச் செல்வதைப் போல, அந்தப் புல்டோசர் இயந்திரம் அந்த ஏழைக் குடில்களை இடித்துப்போட்டுச் சென்றது. மழைக்காலத்தில் முட்டைகளையும் தானியங்களையும் சுமந்து தப்பிச்செல்லும் எறும்புகளைப்போல, ஒவ்வொருவரும் அவரவர் வீட்டின் எச்சங்களைச் சுமந்து கொண்டு புறம்போக்கு நிலம் தேடிச்சென்றனர்.

சில நாள்கள் கழித்து, ‘அமேஃயீங்அப்பார்ட்மெண்டிற்கு வழக்கம்போல ஜாஸ்பினும் அவளுடைய குடும்பமும் மூன்று சக்கர சைக்கிளில் வந்தனர். எப்போதும் துள்ளித்திரியும் ஜாஸ்பின் அன்று பெரும் கவலையில் இருந்தாள். எல்லாரிடமும், ‘இனி நாங்கள் இங்கு வரமாட்டோம்; வேறு இடத்திற்குச் சென்றுவிட்டோம்என்று கூறவும், ‘அமேஃயீங்அப்பார்ட்மெண்டிலிருந்து பெறவேண்டிய பாக்கி ரூபாயைப் பெற்றுக்கொள்ள வந்திருப்பதாகவும் அந்தக் குடும்பம் கூறியது.

அங்குக் குடியிருந்தவர்களில் யாரும் அவர்களைப் பார்த்து, ‘இங்கேயே கொஞ்ச நாள் தங்கிக்கொள்ளுங்கள்; உங்களுக்குச் சிறு இடத்தை ஏற்பாடு செய்து தருகிறோம்என்று ஒரு வார்த்தை கூடச் சொல்லவில்லை. பணத்தைக் கூட யாரும் கூடுதலாகக் கொடுக்கவில்லை.

பத்து ஆண்டுகள் இந்த அப்பார்ட்மெண்டில் உள்ளவர்களுக்குத் துணி இஸ்திரி பண்ணிக் கொடுத்தும் கொஞ்சம்கூட இவர்களுக்கு நன்றியுணர்வு இல்லையேஎன்று அவளுக்குத் தோன்றியது. அங்கிருந்த ஒவ்வொரு வீடும் ஜாஸ்பினுடன் ஏதோ பேச முயற்சித்தன. ஆனால், அவளுக்கு இப்போதெல்லாம் அந்த வீடுகளையும், வீட்டில் உள்ளவர்களையும் பிடிக்கவே இல்லை. அவற்றையெல்லாம் வில்லன்கள் போலவே பார்த்தாள். ‘வெளுப்பிகைகொட்டிச் சிரிப்பதைப் போலிருந்தது. ‘மஞ்சணத்திநக்கலடிப்பதைப் போலிருந்தது. ‘பூங்கொடிஏளனச் சைகை காட்டினாள் என்றே அவளுக்குத் தோன்றியது. ‘இஸ்திரிப்பெட்டி ஒன்றைக் கொண்டு இந்தப் பூமியையே சமப்படுத்திவிட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்!’ என்று எண்ணிக்கொண்டாள். சைக்கிளின் பின்புறத்தில் உட்கார்ந்து அழுதுகொண்டே அந்தஅமேஃயீங்அப்பார்ட்மெண்ட் வீடுகளை ஏக்கத்தோடு பார்த்தவாறே கடந்து சென்றாள் ஜாஸ்பின்.

ஜாஸ்பினைப்போல சமத்துவத்திற்காகவும் சமூக நீதிக்காகவும் மக்களின் பாதுகாப்பிற்காகவும் ஏங்கக்கூடிய ஏராளமான சிறுமிகள் இவ்வுலகில் உள்ளனர். அதிலும் குறிப்பாக, இணையப் பாதுகாப்பு பற்றித் தொடர்ந்து பேசிவருகின்ற அமெரிக்காவைச் சார்ந்த தேஜஸ்வியைப் பற்றிக் கூறலாம். சைபர் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை தேஜஸ்வி தொடர்ந்து வழங்கி வருவதால்டைம் (Time) பத்திரிகை அச்சிறுமியின் புகைப்படத்தை 2025, செப்டம்பர் மாத இதழின் அட்டைப்படத்தில் வெளியிட்டுக் கௌரவித்தது.

ஒருமுறை தேஜஸ்வியின் தாத்தாவிற்கு ஈமெயில் ஒன்று அவளுடைய மாமாவிடமிருந்து வந்திருந்தது. அதில், ‘ஏற்கெனவே எனக்குக் கொடுக்கவேண்டிய இரண்டாயிரம் டாலர் பணத்தை உடனடியாகக் கொடுக்கவேண்டும்என்று குறிப்பிட்டிருந்தது. எண்பத்தைந்து வயதான தேஜஸ்வியின் தாத்தாவும், ஏதாவது அவசரத் தேவையாக இருக்கும் என்று நினைத்துக்கொண்டு அவசரம் அவசரமாக இரண்டாயிரம் டாலர் பணத்தை ஏற்பாடு செய்தார். பணத்தைத் தயார் செய்துவிட்டு அந்த ஈமெயிலில் குறிப்பிடப்பட்டிருந்த வங்கிக்கணக்கிற்கு அனுப்புவதற்கு முன்பாக தன் மகனிடம் ஒரு வார்த்தைக் கேட்டுவிடலாமே என்று எண்ணி தேஜஸ்வியின் அப்பாவிற்குத் தொலைப்பேசி செய்திருக்கிறார். இது ஏமாற்றுவேலையாக இருக்குமோ என்று நினைத்த தேஜஸ்வி அவளுடைய தாத்தாவிடம் பணம் அனுப்புவதைத் தற்காலிகமாக நிறுத்துமாறு கேட்டுக்கொண்டு, தன் மாமாவிற்குக்கால்செய்து பேசும்போது அவர், ‘அப்படிப் பணம் கேட்கவே இல்லை; சில நாள்களுக்கு முன்பாக என் ஈமெயிலை யாரோஹேக்செய்துவிட்டார்கள்என்று கூறியிருக்கிறார். கடைசியாக இது சைபர் கிரிமினல்களின் வேலை என்பது உறுதியானது.

இந்த நிகழ்விற்குப் பிறகு தேஜஸ்வி இதனைப் பற்றி பல ஆய்வுகளை மேற்கொள்கிறாள். அதில், ‘குறிப்பாக 2024-ஆம் ஆண்டில் மட்டும் அமெரிக்காவில் 8,60,000 சைபர் குற்றங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றனஎன்றும், அதில் பெரும்பான்மையான குற்றங்கள் அறுபது வயதிற்கு மேற்பட்ட முதியவர்களைக் குறிவைத்தே நடைபெறுவதாகத் தன் ஆய்வில் தேஜஸ்வி அறிந்துகொண்டாள்.

இருளைப் பழிப்பதைவிட, ஒளியேற்றுவது மேல்என்ற கூற்றிற்கேற்ப, தேஜஸ்விqield Seniorsஎன்னும் இணையத்தளம் மூலம் பெரியவர்களுக்கான சிறப்பு வகுப்புகளை நடத்தினாள். தேஜஸ்வியுடைய இந்த முயற்சி சைபர் குற்றங்களிலிருந்து பலரைக் காப்பாற்றியதோடு, பலருக்கும் சைபர் கிரைம் பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்தியது.

பெரியவர்களிடமிருந்து சிறியவர்கள் கற்றுக்கொள்கின்ற சூழல் மாறி, சிறியவர்களிடமிருந்து பெரியவர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய சூழல் இன்று உருவாகிக் கொண்டிருக்கின்றது என்பதை எல்லாரும் ஏற்றுக்கொள்ளதான் வேண்டும்.