news-details
ஆன்மிகம்
ஒரு தொடர் சவால்! (A Constant Challenge)

திரு அவையின் கடந்தகால வரலாற்றிலிருந்து இன்றுவரை ஏழைகள் மீதான அன்பும் அக்கறையும் ஒரு முகாமையான தொடர் கதையாகவே இருந்து வந்திருக்கிறது. இது நிறுவனங்களின் வெறும் மனிதாபிமான செயல்பாடுகளிலிருந்து வேறுபட்டு நிற்கிறது.

மீண்டும்நல்ல சமாரியர்உவமை - இந்த உவமையில்யாரோடு உங்களை இணைத்துப் பார்க்கிறீர்கள்?’ என்ற வினாவைத் திருத்தந்தை எழுப்புகிறார். இன்றும் இந்த உவமை அதிகம் அர்த்தமுடையதாகவே இருக்கிறது.

நமது பல முன்னேற்றம், வளர்ச்சியின் மத்தியில் ஏழைகளைப் பொறுத்தமட்டில் நாம் படிப்பற்ற அறிவிலிகளாகவே (illiterate) இருக்கிறோம்.

ஏழைகளைச் சமுதாயப் பிரச்சினைகளாக, நமக்குத் தொந்தரவு தருகிறவர்களாகப் பார்க்கிறோமா? அப்படியானால் நம் சமுதாயம் ஒரு சீக்குப் பிடித்த சமுதாயம் அல்லது கிறித்தவ நம்பிக்கையில், ஏழைகளை என்னைப் போல ஒருவராக, கடவுளின் சாயலாக, மனித மாண்பு கொண்டவர்களாக, இயேசுவால் மீட்கப்பட்டவர்களாக, கடவுளால் தொடர்ந்து அன்பு செய்யப்படுகிறவர்களாகப் பார்க்கிறோமா? ‘நீரும் போய் அவ்வாறே செய்யும்என்பது (லூக் 10:37), இயேசுவிடமிருந்து உரிமையுடன் எழும் அன்புக் கட்டளை என்பதைத் தினமும் நாம் நினைவுகூரவேண்டும்.

இன்றைய திரு அவையின் தவிர்க்க முடியாத சவால்

ஏழைகளின் இன்றைய நிலைக்கு அவர்களே காரணம் என்பதைத் திருத்தந்தை புனித பெரிய கிரகோரியார் துணிச்சலோடு கண்டனம் செய்கிறார்.

நற்செய்தியின் கடமைகள் பற்றி ஏழைகள் நமக்குக் கற்றுத்தர அதிகம் இருக்கிறது.

செல்வச் செழிப்பில் வாழ்ந்த செல்வந்தன், ஏழை இலாசருக்கு நீதி வழங்கவில்லை, அவனுக்குப் பரிவு காட்டவில்லை. எனவே, அவன் இறந்த பின்பு பாதாளத்தில் புதைக்கப்பட்டான் (லூக் 16: 19-31).

கிறித்தவர்களாகிய நமக்கு ஏழைகள் ஒரு சமுதாய வகை (Sociological Category) அல்ல; மாறாக, கிறிஸ்துவின் சதை (Body of Christ).

கிறித்தவச் சமயத்தைத் தனிமனிதருக்கானது என்ற சுருக்கிய தளத்தோடு முடக்கிவிடக்கூடாது. குடிமைச் சமூகத்தில் எழும் மக்களுடைய பிரச்சினைகளில் சமயம் ஈடுபட வேண்டும். ஏழைகளுடைய வாழ்வாதாரப் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பது அரசின் கடமை அல்லது சந்தைப் பொருளாதாரம் கவனித்துக்கொள்ளும் என ஒதுங்கிவிடக் கூடாது.

இன்று தர்மம் செய்வது...

எனது ஊக்க உரையை நிறைவு செய்வதற்கு முன், தர்மம் செய்வது குறித்து ஒன்று சொல்ல விழைகிறேன். தர்மம் உலக ஏழ்மையைத் தீர்க்காது; ஆயினும், தர்மம் செய்வது தற்போது ஏழைகளோடு தொடர்புகொள்ள, அவர்களைச் சந்திக்க, அவர்கள் நிலைக்கு இறங்கிவர ஒரு வாய்ப்பைத் தரும்.

ஏழைகளுக்கு முன்னால் சற்று நேரம் நிற்க, அவர்களது கண்களைப் பார்க்க, அவர்களைத் தொட, நம்மை அவர்களோடு பகிர்ந்துகொள்ள வாய்ப்புத் தருவது தர்மம். தர்மம் கடினமான இதயத்தை மென்மையாக்கும்.

தர்மம் இறைவேண்டலின் இறக்கை. உனது இறைவேண்டல் இறக்கையோடு இணைத்துச் செய்யப்படவில்லையெனில், அது பறப்பது அரிதாகிவிடும்என்கிறார் ஜான் கிறிஸ்சோஸ்தம்.

கருணை நிறைந்தவர் தம் உணவை ஏழைகளோடு பகிர்ந்து உண்பர். அவரே ஆசி பெற்றவர் (நீமொ 22:9).

கிறித்தவர்கள் தர்மம் செய்வதை நிறுத்திவிடக் கூடாது. ஒன்றும் செய்யாமல் இருப்பதைவிட தர்மம் செய்வது சிறந்தது.

ஏழைகளுக்கு நீங்கள் செய்யும் மிகச் சிறிய உதவிகளால்நான் உன் மீது அன்பு செலுத்தி வருகிறேன் (திவெ 3:9) என்று இயேசு சொல்வதை ஏழைகள் உணர்வார்கள்.