உலகில் பனிப்போர் (1991) காலத்திற்குப் பின், மக்களாட்சி அலை பன்மடங்கு அதிகரித்து, பல நாடுகள் மக்கள் அரசியல் அமைப்புகளை ஏற்படுத்தி, அரசியல் கட்சிகளும் வாக்களிப்பு முறை மூலம் தேர்தலைச் சந்தித்து ஆட்சி அமைத்தன. என்றாலும், சர்வாதிகாரத்தின் சாயல் இல்லாத ஆட்சி அமைப்புகள் வெகு சிலவென்றே கூறலாம். மக்களாட்சிக்கும் மக்களாட்சி அல்லாதவைக்கும் உள்ள வேறுபாடின்மை அல்லது தெளிவற்ற நிலைக்கு இந்நூற்றாண்டின் அரசியல் நிகழ்வுகளே சான்று பகர்கின்றன.
சுதந்திரத்தோடு,
வெளிப்படையான தேர்தல்கள், அதற்கு மேலாக மக்கள் உரிமைகளைப் பாதுகாக்கும் அமைப்பாக மக்களாட்சி முறையிருக்க வேண்டுமென்ற எதிர்பார்ப்பு இருந்தாலும், உலக அளவில் ‘ஹைபிரிட்’
அரசுகளுக்கும்
(Hybrid regime
என்பது - மக்களாட்சி மற்றும் சர்வாதிகார ஆட்சி இரண்டும் கலந்த ஆட்சி முறை சாயல்களைப் பெற்றிருத்தல்) சர்வாதிகார அரசுகளுக்கும் குறைவில்லை என்பதுதான் இன்றைய நிலை. இச்சூழல் உலக அளவில் மக்களாட்சிமுறை (Democracy) பலவீனமான நிலையில் இருப்பதைப் (fragile)
பிரதிபலிக்கிறதென்கிறது
ஓர் ஆய்வு.
மக்களாட்சி என்பது தனிமனிதனின் குரல் அல்லது பெரும்பான்மையோரின் முடிவென்பதில்லை. இது சட்டத்திற்கான ஒழுங்கு முறை, மக்களுக்கான ஆட்சியின் உதாரணம். மனித அதிகார எல்லையின் வரையறை, சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாத்தல் என்பவைகளைப் பிரதிபலிக்கும் அடையாளமாகும். உலகளவில் இன்று மிகப்பெரிய அளவில் உருவெடுத்துள்ள மக்களாட்சி சமுதாயம், அரசியல் தேவைகளான உரையாடல், தகவல் பரிமாற்றம் என்பவைகளுக்கு டிஜிட்டல் முறை, ஏ.ஐ.யின்
தொழில்நுட்பம் போன்றவற்றைச் சார்ந்திருக்கவேண்டிய கட்டாயத்தைத் தவிர்க்க இயலாமலிருக்கிறது.
மக்களாட்சியில்
ஏ.ஐ.யின்
பங்கு
நவீன
அரசியல் உலகில் ஏ.ஐ. மக்களாட்சி
முறை (AI and Democracy) சந்திப்பு
என்பது ஒரு திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது. கடந்த 70 ஆண்டுகளின் ஏ.ஐ.யின்
ஆராய்ச்சி, 21-ஆம் நூற்றாண்டில் கற்கும் இயந்திர (Machine Learning)
முறை மூலம் தரவுகள் அடிப்படையில் முன்கணிக்கும் திறனைப்பெற்றது. மேலும் வளர்ந்து, நரம்பு வலை (சூநரசயட நேவறடிசம) தொழில் நுட்பம், அதாவது ஏராளமான தரவுகளைக் கொண்டு பயின்று, கற்கும் முறையான, இயந்திரச் சிந்தனை (Neural network)
நிலையை அடைந்தது. 2017-இல் நரம்பு வலைக்கு ஈடாக ட்ரான்ஸ்ஃபார்மர்களை அறிமுகப்படுத்தியதன் மூலம் இயந்திரச் செயலாற்றலில் இணைச் சொற்கள், வாக்கியங்கள் அமைவது சுலபமும் சாத்தியமுமானது. இதுவே 2022-இல் இன்றைய நவீன மொழி பேசும் இயந்திரங்கள் (LLMs) உருவெடுக்கவும் வழியமைத்தது. இந்த வரலாற்று மைல்கற்களைக் கடந்த ஏ.ஐ. பல
புதுமைகளையும் நன்மைகளையும் உலகிற்கு அளித்தாலும், இதனால் சூழலியல், சமுதாயம் (ecology,
society), இதற்கு
மேல் மக்களாட்சித் தத்துவத்திற்கான விளைவுகளைக் குறித்தும் சிந்திக்க வேண்டியுள்ளது.
மக்களாட்சியும்
மக்களவையும் ஏ.ஐ. பயன்பாட்டினால்
ஏற்படும் நெறிமுறை மற்றும் அரசியல் சவால்களை மேற்கொள்ளும் மக்களாட்சி முறையில் அரசு தலைவரைக் (Presidential) கொண்டுள்ள
நாடுகளைவிட, மிக வலிமையான பாராளுமன்ற-அரசியல் அமைப்பு (Parliamentary) பெற்ற
நாடுகளே ஏ.ஐ.யின்
சவால்களைச் சமாளிக்கும் திறன் பெற்றவைகளாக இருக்கிறதென்பது நடைமுறை.
ஏ.ஐ. ஒரு சிக்கலான
மற்றும் சவால்களைக் கொண்ட தொழில்நுட்பம். இதனைச் சமுதாயம் ஏற்று மாற்றியமைத்துக்கொள்கிறது. இதற்கு
அப்பால் இத்தொழில்நுட்பத்தின் விளைவுகளுக்குப் பொறுப்பேற்றல் (adaptable and accountable) என்ற அனைத்தையும் சமாளிக்கக்கூடிய அமைப்பு மக்களாட்சி முறையான நாடாளுமன்றமாகத்தான் இருக்கும் என்கிறது ஓர் ஆய்வு.
ஒரு
சந்தேகம் எழலாம்; ஏ.ஐ. அல்லது
அரசியல், இதில் எது மக்களாட்சி முறைக்கு ஏற்புடையது அல்லது வசப்படுத்தும் தன்மை வாய்ந்ததென்று, பல நாடுகளில் ஏ.ஐ. மக்களாட்சியின் செயல்பாடுகளைக்
குறித்து ஆய்வும் நடத்தப்பட்டது. அதனடிப்படையில், அரசியலே முக்கியப் பங்கு வைக்கிறதென்று அறியப்பட்டது. இதற்குப் பல காரணங்கள் கூறப்படுகின்றன.
ஏ.ஐ. தொழில்நுட்பம் என்பது
கருவி மட்டுமல்ல, நாளுக்கு நாள் புதிய அவதாரமெடுக்கும் திறன் பெற்றதும்கூட. பாராளுமன்ற ஆட்சிமுறையில் அரசு கட்டுப்பாட்டிலுள்ள நிறுவனங்கள் மூலம் பொருளாதாரம் மற்றும் சமுதாயத்தில் ஏற்படும் விளைவுகளை அறியும் வாய்ப்பும் கண்காணிப்பும் உள்ளதென்பதை அறிவோம். இந்நிலையில், ஆட்சி அதிகாரத்திலிருப்போர் அரசியல் அமைப்புகளை மறைமுகமாகக் கண்காணிக்கவும், தரவுகளைச் சேகரிக்கவும் ஏ.ஐ. தொழில்நுட்பத்தைப்
பயன்படுத்துவது, குடியாட்சித் தத்துவத்திற்கு எவ்வாறு ஏற்புடையதாயிருக்கும்? என்ற எண்ணம் பரவலாக உள்ளது.
மக்களாட்சியில்
தனிமனிதச் சுதந்திரம் மற்றும் சட்டப் பாதுகாப்பு (civil liberties) என்பவை அடிப்படை உரிமைகள். வலிமையிழந்த பாராளுமன்றங்களைப் பயன்படுத்தி, அதிகாரத்திலிருப்போர் தங்களுக்குச் சாதகமாக ஏ.ஐ.-யை
வளைத்துக்கொள்ள வாய்ப்பு இருக்கிறதென்பதும் மற்றொரு பார்வை. பொதுவாக, பொருளாதார முன்னேற்றம் (GDP) என்பது,
மக்களாட்சியின் உயர் நிலையைக் காட்டுகிறதென்பதை அறிவோம். ஆனால், வளமான பொருளாதாரம் மட்டுமே மக்களாட்சி முறை அல்லது அதைச் சார்ந்த குடியாட்சி நிறுவனங்களுக்கு ஏ.ஐ.யின்
விளைவுகளிலிருந்து பாதுகாப்பு அளிக்குமா? என்ற கூற்றும் நிலவுகிறது. ஏ.ஐ. ஒவ்வொரு
நாளும் புதிய உருவையும் வலிமையையும் பெற்று வரும் நுட்பமென்பதால், குடியாட்சிக் கண்காணிப்பு நிறுவனங்களின் திறனும் அதற்கு இணையாகவும் இருக்க எதிர்பார்க்கப்படுகிறது.
தகவல் உலகில்
ஏ.ஐ.
நாளுக்கு
நாள் குவிந்து வரும் தரவுகள், இயல்பாக ஏ.ஐ.யின்
பயன்பாட்டிற்குப் பணிக்கப்படுகின்றன. இவ்வாறு, தகவல்கள் ஒரு சிலரிடம் அல்லது அமைப்புகளிடம் சிக்கியிருப்பது மக்களாட்சிக்கு ஆபத்தானதென்பதும், அதிகாரத்தைத் தவறுதலாகப் பயன்படுத்துதலைத் தவிர்க்க தகவல் பரவலாக்கம் அவசியமென்பதும் பொதுவான கருத்து. கடந்த கால ஆட்சி அமைப்புகள் முன்பு சந்தித்த தொழில் புரட்சிகளால், தங்களை மாற்றி அமைத்துப் பயணித்தன என்பது வரலாறு.
இ-(டிஜிட்டல்)
மக்களாட்சி
(Digital Democracy- e Democracy)
மக்களாட்சி
வழியைப் பின்பற்றவும் நடைமுறைப்படுத்தவும் அரசியல் தேவைக்கு ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் டிஜிட்டல் ஊடகம் மூலம் தொலைத்தொடர்பைப் பயன்படுத்துவது ‘டிஜிட்டல் மக்களாட்சி முறை’ எனப்படுகிறது. 1980-1990 காலகட்டத்தில் தனி கணினி, இணையதளம் என்பவை ஊடகம் மற்றும் அரசியல் துறைகளை மாற்றியமைத்து, அதற்கு மேலாகச் சமுதாயத்தில் மாற்றங்களையும் விளைவுகளையும் ஏற்படுத்தின. அவ்வாறே, இன்று நாம் காணும் இத்தொழில்நுட்பம் மக்கள் பரவலாக அரசியலில் பங்கேற்க உதவுகிறதென்பதில் ஐயமில்லை.
இ-மக்களாட்சி என்பது ஒரு வழிமுறையாகத்தானிருக்க முடியும். மக்களாட்சி முறை சீர்திருத்தங்களைச் செய்து முடிப்பதாய் இருக்க இயலாது. எனவே, இது நூதன டிஜிட்டல் மக்களாட்சி மாடல்களுக்கு வழிவகுக்காமல், தொழில்நுட்ப மாற்றத்திற்கேற்ப, அடிப்படை மக்களாட்சித் தத்துவங்களுக்கு ஆதாரமாயிருக்கவே எதிர்பார்க்கப்படுகிறது.
நாம்
புதுமையான தொழில் புரட்சியைச் சந்தித்துக் கொண்டிருக்கிறோம். சுதந்திரமான மக்களாட்சி முறைகள் நிலவவும், அதனைக் காத்திடவும் வளமான சமுதாயமே பெரிய மூலதானமாக இருக்கமுடியும்.