news-details
உலக செய்திகள்
“விமானங்கள் அமைதியைக் கொண்டுவரட்டும்” - திருத்தந்தை

இத்தாலியின்.டி.. ஏர்வேஸ் (ITA Airways) நிறுவனத்தின் நிர்வாகிகளைச் சந்தித்த திருத்தந்தை லியோ, தனது திருத்தூதுப் பயணங்களுக்கு உதவும் அந்நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்தார். அப்போது, நவீன உலகில் விமானங்கள் மரணத்தையும் அழிவையும் சுமந்து செல்லும் கருவிகளாக மாற்றப்படுவது குறித்து மிகுந்த வேதனையைப் பதிவுசெய்தார். “விமானங்கள் எப்போதும் அமைதியின் தூதுவர்களாகவும், உரையாடல் மற்றும் சகோதரத்துவத்தை இணைக்கும் பாலங்களாகவுமே இருக்க வேண்டும்; அவை ஒருபோதும் போருக்கானதாக இருக்கக்கூடாது. இருபதாம் நூற்றாண்டின் உலகப் போர்களில் நிகழ்ந்த வான்வழிக் குண்டுவீச்சுகள் இனியாவது முடிவுக்கு வந்திருக்கவேண்டும்என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், “தொழில்நுட்ப வளர்ச்சியைப் போருக்காகப் பயன்படுத்தப்படுவது என்பது முன்னேற்றம் அல்ல; மாறாக, அது ஒரு பின்னோக்கிய நகர்வுஎன்று தெரிவித்துள்ளார்.