news-details
திருத்தந்தையின் முழக்கம்
திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள் (15.03.2026)

இலாபத்தைவிட சமத்துவம் மற்றும் பொதுநலனை முன்னிறுத்தி, அனைவருக்கும் உலகளாவிய நலவாழ்வு உரிமை கிடைப்பதை அரசுகள் உறுதி செய்யவேண்டும்.”

பிப். 16, பாப்பிறை வாழ்வுக் கழக உறுப்பினர்கள் சந்திப்பு

திரு அவை என்பது இறைவனோடும் மக்களோடும் அனைவரையும் ஒன்றிணைக்கும் மீட்பின் உலகளாவிய அருளடையாளமாகவும், ஒப்புரவின் கருவியாகவும் திகழ்கிறது.”

பிப். 18, புதன் மறைக்கல்வி உரை

பணிவு, வெளிப்படைத்தன்மை மற்றும் கூட்டுப் பொறுப்புடன் கூடிய அதிகாரமே, கிறிஸ்துவை நோக்கிச் சமூகத்தை வழிநடத்தும் உண்மையான ஆன்மிகப் பணியாகும்.”

பிப். 19, கிறிஸ்துவின் சேனை - துறவறச் சபையினர் சந்திப்பு

உண்மைக்கான விருப்பத்தைத் தூண்டி, இயேசுவின் அன்பு மற்றும் திருநற்கருணை வழியாக மாணவர்களை ஆன்மிக வளர்ச்சியில் வழிநடத்துவதே ஓர் ஆசிரியரின் கடமையாகும்.”

பிப். 20, திருத்தூது மடலின் சிறப்புச் செய்தி

அன்னை மரியாவின் வழியில் ஏழைகளுக்கு நற்செய்தி அறிவித்து, அமைதியின் சாட்சிகளாகத் திகழ அன்புடன் அழைக்கிறேன்.”

பிப். 21, அமலமரி அர்ப்பணத் துறவு, திருத்தூதர்களின் அன்னை சபையினர் சந்திப்பில்...

தவக்காலத்தின் வழியாகப் பாவங்களை நீக்கி, இறைவேண்டல் மற்றும் இரக்கச் செயல்களால் கடவுளின் அன்பிலும் உண்மையான மகிழ்ச்சியிலும் நிலைத்திருப்போம்.”

பிப். 22, மூவேளைச் செப உரை