news-details
திருத்தந்தையின் முழக்கம்
திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள் (08.03.2026)

கிறிஸ்துவில் ஒன்றுபட்டு, புனித வாழ்வும் சகோதரத்துவ உறவும் வழியாக நற்செய்திப் பணியாற்றுவோம்.”

பிப். 09 - அருள்பணியாளர்களின் ஒன்றிப்புச் செய்தி

அமைதி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சமூக நலனில் திரு அவையின் பங்களிப்பை உறுதிப்படுத்துவதே திருத்தூதுப் பயணத்தின் நோக்கமாகும்.”

பிப். 10 - மொனாக்கோவிற்கான திருத்தந்தையின் முதல் பயணம்

இறைவார்த்தையைத் திரு அவையின் நம்பிக்கையின் ஆதாரமாகவும், கிறிஸ்துவின் உயிருள்ள உறவாகவும் போற்றிப் புனிதமாக வாழ்வோம்.”

பிப். 11 - புதன்கிழமை பொது மறைக்கல்வி உரை

இறைவார்த்தை, நோன்பு மற்றும் சமூக நீதி வழியாக மனமாற்றம் பெற்று, அன்பின் பாதையில் நாகரிகத்தை உருவாக்குவோம்.”

பிப். 13 -  இவ்வாண்டிற்கான தவக்காலச் செய்தி

திருப்பீட நிர்வாகத்தில் பெண்களின் பங்களிப்பை உறுதிப்படுத்தும் அருள்சகோதரி சிமோனா பிரம்பில்லாவின் புதிய நியமனம் திரு அவையின் வளர்ச்சியை வெளிப்படுத்துகிறது.”

பிப். 14 - அருள்சகோதரி சிமோனா பிரம்பில்லா புதிய உறுப்பினராக நியமனம்

வெளிப்புறச் சடங்குகளைத் தாண்டி, அன்பு நிறைந்த நேர்மையான இதயத்துடன் இறைநீதியையும் சகோதரத்துவத்தையும் கடைப்பிடிப்போம்.”

பிப். 15 - மூவேளைச் செபவுரை