(பெயர்)
மழலை
மொழிக்கிள்ளாய்! அண்ணலாரின் தூய
பழம்பெரும்
பேர்புகழைக்கூறு! - நலம் காண
வேண்டினாலும்
வண்ணத் தமிழாலே பாடினாலும்
யாண்டும்
‘லெவே’ யென்றே
கூறு.
(நாடு)
இன்பத்
தமிழ்க் கிளியே! நம் தாத்தா சாமியின்
அன்னைத்
திருநாட்டைச் சாற்றிடு - தொன்மை
தகவுரு
தேசமும் பக்தி ‘பிரான்சும் இராசி
முகவைகண்
சீமையென்று ஓது!
(நகர்)
கூவும்
கருங்குயிலே! நற்செய்தி வித்தகரின்
மேவும்சீர்
ஊரெதுவோ? சாற்றுக - பூவேந்தும்
மாஞ்சோலைச்
சிட்டுகள், பண்ணிசைக்கும்
‘சர்வகாணி’
தீஞ்சொல்
ஞானிஊர் சாற்று!
(ஆறு)
பஞ்சவர்ணம்
பைங்கிளியே! வாழ்வில் ஒளியேற்றும்
பிஞ்சுமணச்
சாமியின் ஆறு என்ன? - கொஞ்சும்
தமிழ்பேசி
நற்செய்தி வாழ்வாக்கும் தந்தை
அமைதியுற்ற
‘ரோகினி’யே
கூறு.
(மலை)
பைந்தமிழ்
பேசும் கிளியே! வான் தேவபுறா
நம்தேயம்
வாழும் ‘மலை’சொல்வாய் - மஞ்சுசூழ்
‘ஆண்டாவூரணி’ - நல்முகவை
‘சருகணி’யும்
யாண்டும்
புகழும் மலை.
(தேர்-ஊர்தி)
பேர்பாடும்
மாங்குயிலே ஓரியூர் ஒண்கதிரின்
சீர்மிகு
தேர்எது? சொல்வாய்நீ - பார்மிசை
‘கால்நடை’யும் ‘காளைமாட்டு’ வண்டியும்
அஞ்சாமல்
தாளாற்றி
வந்தசாமி தேர்.
(படை)
முத்துமணிக்
கிள்ளாய்! கருணை உருவான
சித்தர்
‘படை’யென்ன
சொல்லு - கத்தும்
குயிலோசைப்
‘பீடச்சிறுவர்கள்’ செம்மண்
புவனம்
புகழ் ‘படை’ சாற்று
(முரசு)
செம்பவள
வாய்க்கிளியே! யேசுபடை வீரரின்
அன்பென்று
கொட்டும் ‘முர’செது? - இன்பங்கள்
யாவும்
பெருக்கெடுக்க மக்களெல்லாம் ஒன்றெனக்
கூவும்
‘நற்செய்தி’ போற்று.
(மாலை-தார்)
பாடும்
தமிழ்க்கிளியே! ஏழைநம் பங்காளர்
நாடுபோற்றும்
சாது லெவே ‘தார்’ என்ன? - நீடு
துயிலினை
நீக்கவந்த ஆன்மிகச் சூரியனின்
திருச்
‘செபமாலை’ யென்றே
கூறு!
(கொடி)
சந்தக்கவிக்கிளியே!
‘சர்வகாணி’த்
தென்றலவர்
சிந்தைமிகு
ஞானி ‘கொடி’யென்ன? -விந்தை மிகு
மாசுதன்
ஆட்சியை (இ) ‘ராசி’யில் ஏற்றிவைத்த
(ஓ)
யேசுவின்... நற்கொடியே பேசு!
இ
‘ராசி’ - இராமநாதபுரம்,
சிவகங்கை பகுதி.
குறிப்பு:
ஒரு மன்னரை, அரசியை, தெய்வீகக்
குழந்தையை,
ஞானியை, சித்தரை, சான்றோரை,
மகான்களை,
அரசனாக எண்ணிப் போற்றி,
மன்னர்க்குரிய
பத்து உறுப்புகள்கொண்டு பாடுவது
கவிதை
இலக்கண மரபு - திருத்தசாங்கம் 10
உறுப்புகள்)
அவ்வாறு இறையடியார் லூயி மரி லெவே
அடிகளைப்பற்றிப்
பாடப்பட்டது.