யூபிலி ஆண்டின் (Jubilee Year) நிறைவை முன்னிட்டு, வத்திக்கான் புனித பேதுரு பேராலயத்தில் 5,000-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் பங்கேற்ற புனிதக் கதவு நோக்கிய இறுதிப் பயணம் உணர்ச்சிகரமாக நடைபெற்றது. ஓராண்டு காலமாக 33 மில் லியனுக்கும் அதிகமான புனிதப் பயணிகளுக்குப் பணியாற்றிய தன்னார்வலர்கள், பச்சை நிற மேலங்கி அணிந்து பாடல்கள் மற்றும் செபங்களுடன் புனிதக் கதவைக் கடந்தனர். இந்தச் சேவை பாதுகாப்பான மற்றும் சகோதரத்துவமான சூழலில் நடைபெற்றதாகப் பேராயர் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
திருத்தந்தை
லியோ இந்தக் கதவுகளை மூடிய பிறகு, மீண்டும் 2033-ஆம் ஆண்டு மீட்பின் யூபிலிக்காகவே இவை திறக்கப்படும் எனக் கூறப்பட்டது. பேராலயத்தின் மையத்தில் நடைபெற்ற நிறைவு வழிபாட்டில் பேசிய பேராயர், “நம்பிக்கை ஒருபோதும் ஏமாற்றாது; நீங்கள் திரு அவையின் வாழும் கற்களாகத் திகழவேண்டும்” எனத்
தன்னார்வலர்களை ஊக்கப்படுத்தினார்.