இயேசு கருவாக உருவானது அவர் இறைமகன் என்பதற்கான ஓர் இறையியல் விளக்கம் என்பது மட்டுமல்ல, அது தூய ஆவியாரின் செயலுமாகும் என்பதை நற்செய்தி நூல்கள் தெளிவாகக் கற்பிக்கின்றன.
1. லூக்கா,
மத்தேயு மற்றும் யோவான் நற்செய்திகளின் சாட்சியங்களைப் பெற்று அதைத் தியானித்தத் திரு அவையானது மரியாவின் கன்னித்தன்மையானது ஒரு நம்பிக்கையின் மறையுண்மை என்ற கருத்தை எப்பொழுதுமே கொண்டிருந்தது.
வானதூதர்
மரியாவுக்கு மங்கள வார்த்தை அறிவிக்கும் நிகழ்வில் கன்னித்தன்மையில் நிலைத்திருப்பதற்கான அவரின் எண்ணத்தையும், அந்த எண்ணத்தோடு ஒத்துப்போகின்ற இறைவனின் திட்டமான அவரின் வியக்கத்தக்க தாய்மையையும் சுட்டிக்காட்டி நற்செய்தியாளர் லூக்கா, மரியாவை ‘கன்னி’ என்று அழைக்கின்றார். தூய
ஆவியாரின் செயலினால் கன்னித்தன்மையில் கருத்தரித்தார் என்ற நிலைப்பாடானது, இயற்கையான பாலினச் சேர்க்கையற்ற இனப்பெருக்கத்திற்கான (partheno genesis)
ஒவ்வொரு கருதுகோளையும் தவிர்க்கின்றது. லூக்காவின் விவரிப்பை யூதர்களின் (மதம் அல்லது கலாச்சாரம் சார்ந்த) கருத்து அல்லது பிற இனத்தவர்களின் புராணக்கதைகளின் தொடர்ச்சி என்று விளக்குவதற்கான முயற்சிகளையும் மறுக்கின்றது.
லூக்கா
நற்செய்தியின் அமைப்பானது (ஒப்பிடுக. லூக், 1:26-38; 2:19,51) இக்கருத்தின் மீதான எந்தவொரு குறைத்துக் கூறும் விளக்கத்தையும் தடுக்கின்றது. இந்த இறைவார்த்தைகளின் இசைவு ‘கன்னி’ என்ற சொல்லாடலின் மாற்றத்தையோ அல்லது தூய ஆவியாரினால் கன்னிமை நிலையில் மரியா கருத்தரித்தார் என்பதை உறுதி செய்கின்ற சொல்லாடல்களையோ உரிய வகையில் ஆதரிக்கவில்லை.
2. வானதூதரின்
அறிவிப்பை யோசேப்புவிடம் தெரிவிக்கின்ற நற்செய்தியாளர் மத்தேயுவும், நற்செய்தியாளர் லூக்காவைப் போன்றே மரியா கருத்தரித்தலில் தூய ஆவியாரின் செயலை உறுதிப்படுத்தி, திருமண உறவிற்கான கருதுகோள்களைப் புறந்தள்ளுகின்றார்.
மேலும்,
மரியா இயேசுவைக் கன்னித்தன்மையில் கருத்தரித்த செய்தியானது பிறகுதான் யோசேப்பிற்கு அறிவிக்கப்படுகின்றது. இயற்கைக்கு அப்பாற்பட்ட தூய ஆவியாரின் ஈடுபாட்டின் விளைவு (fruit of the
supernatural intervention of the Holy Spirit) மற்றும் இயேசுவின்
தாயான மரியாவின் ஒத்துழைப்பு இவற்றினால் மட்டுமே நிகழ்ந்த இயேசுவைக் கருத்தரிக்கும் நிகழ்வில் மரியா அதற்கு முன்பாக யோசேப்புவின் அனுமதி பெறவேண்டுமே என்ற கேள்வி நற்செய்தியாளர்களுக்கு எழவில்லை. கன்னியின் கணவராகவும், அந்தக் குழந்தையைப் பொருத்தவரை அதன் தந்தை என்ற வகையில் அவரின் பணியைச் செய்வதற்குமான பொறுப்பை ஒரு சுதந்திரமான மனப்பான்மையோடு ஏற்றுக்கொள்வதற்கே யோசேப்பு வானதூதரால் கேட்கப்படுகின்றார்.
மத்தேயு
நற்செய்தியாளர் இயேசுவின் கன்னி கருத்தரிப்பை இறைவாக்கினர் எசாயாவின் முன்னறிவிப்பாகவே காட்டுகின்றார்: “இதோ! கன்னி கருவுற்று ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார். அக்குழந்தைக்கு இம்மானுவேல் எனப் பெயரிடுவர்” (மத்
1:23; எசா 7:14). இவ்வகையில், கன்னி கருத்தரிப்பானது மீட்பின் இறைத்திட்டத்திற்கான ‘கடவுள் நம்மோடு’ என்ற வார்த்தைகளில் கிறிஸ்துவை அடையாளம் காட்டுகின்ற அதன் தொடர்பைப் பற்றிச் சிந்திப்பதற்கு மத்தேயு நற்செய்தியாளர் நம்மை அழைத்துச் செல்கின்றார்.
தொடக்க காலத்
திரு
அவையானது
கன்னி
கருத்தரித்தலை
உறுதியாக
நம்பியது
3. லூக்கா
மற்றும் மத்தேயு நற்செய்திகள் போன்றல்லாமல், மாற்கு நற்செய்தியானது இயேசுவின் கருத்தரிப்பு மற்றும் பிறப்பு பற்றிக் குறிப்பிடவில்லை. இருப்பினும், மாற்கு நற்செய்தியாளர் யோசேப்புவை மரியாவின் கணவர்
என்று ஒருபோதும் குறிப்பிடாதது கவனிக்க வேண்டியதொன்றாகும். நாசரேத்து மக்களால் இயேசு ‘மரியாவின் மகன்’ என்றும் மற்றொரு சூழலில் ‘கடவுளின் மகன்’ என்றும் அழைக்கப்படுகிறார் (மாற் 3:11; 5:7; ஒப்பிடுக.1:11;9:14, 61-62;
15:39). இந்த விசயங்கள் மரியா அவரின் கன்னிமையில் கருத்தரித்தார் என்ற மறைபொருளின் நம்பிக்கையோடு ஒத்துப் போகின்றன. இந்த உண்மை, அண்மையில் செய்த திருவிவிலிய ஆய்வு முடிவுகளின்படி எரோணிமுஸ் மற்றும் தெர்த்தூலியன் போன்ற திரு அவைத் தந்தையர்கள் கூறுகின்றவாறு, கருத்தரிப்பு பற்றிய அந்த வார்த்தையானது வழக்கமான பன்மையில் இல்லாமல் ஒருமையில் உள்ளதாக, யோவான் நற்செய்தியின் முன்னுரையில் 13-வது இறைவார்த்தையானது வெளிப்படையாக இக்கருத்தைக் கூறுகின்றது: “அவர்கள் இரத்தத்தினாலோ உடல் இச்சையினாலோ அல்ல; மாறாக, கடவுளால் பிறந்தவர்கள்.” இயேசுவினுடைய மனுவுருவாதலின் மறைபொருளை விவரிக்கும் இடமான யோவான் நற்செய்தியின் முகவுரையில் ஒருமையில் இருக்கும் இந்த வார்த்தையானது, அவரின் கன்னிமையில் கருத்தரித்தலுக்கான முக்கியமான சான்றாக இருக்கின்றது. “காலம் நிறைவேறியபோது திருச்சட்டத்திற்கு உட்பட்டிருந்த நம்மை மீட்டுத் தம் பிள்ளைகள் ஆக்குமாறு கடவுள் தம் மகனைப் பெண்ணிடம் பிறந்தவராகவும் திருச்சட்டத்திற்கு உட்பட்டவராகவும் அனுப்பினார்” (கலா
4:4-5) என்று கூறும் புனித பவுல் அடியாரின் இந்த முரண்பாடான உறுதிப்பாடு (paradoxical affirmation) இறைமகனின் மனிதத்தன்மை மற்றும் கன்னித்தன்மையில் பிறந்தது பற்றிய கேள்விக்கு வழிவகுக்கின்றது.
தொடக்க
காலத் திரு அவையின் பல்வேறு சூழல்களில் இயேசுவின் கன்னி கருத்தரிப்பில் உள்ள நம்பிக்கையானது எப்படிப்பட்டதாக இருந்தது என்று ஒத்தமைவு நற்செய்தியானது சான்று கூறுகின்றது. இந்த விளக்கமானது, கன்னிமையில் கருத்தரித்தலை வெறுமனே உடல் அல்லது உயிரியல் கண்ணோட்டத்தில் இல்லாமல் குறியீட்டு மற்றும் உவமானத்தால் மட்டுமே (only as symbolic and metaphorical) புரிந்துகொள்ளும்
தற்காலத்திய விளக்க உரைகளுக்கான எந்த அடிப்படையையும் மறுக்கின்றது. இவ்வாறு இது இயேசுவை மனுக்குலத்திற்கான கடவுளின் கொடையாக நிறுவுகின்றது. இதே வாதத்தை, கன்னிப் பெண் கருத்தரித்தல் என்பது இயேசு இறைமகன் என்கிற இறையியல் கோட்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் கூறப்பட்ட அதிகாரப் பூர்வமற்ற (theologoumenon) அல்லது அவரைப் பற்றிய புராணச் சித்தரிப்புக்கான (mythological
portrayal) ஒரு வழியாக இருக்கலாம் என்று
வேறு சிலரால் முன்வைக்கப்பட்ட கருத்தாகவும் நாம் கூறலாம்.
நாம்
மேலே கண்டவாறு, தூய ஆவியாரின் உதவியினால் உயிரியல் அடிப்படையிலான கன்னிமைக் கருத்தரித்தலுக்கான தெளிவான உறுதிப்பாட்டை நற்செய்தி நூல்கள் கொண்டுள்ளன. நம்பிக்கை அறிக்கை உருவாக்கத்தின் தொடக்கத்திலிருந்தே திரு அவையானது இந்த உண்மையைத் தனதாக்கிக் கொண்டது (ஒப்பிடுக. Catechism of the Catholic Church, n. 496).
4. நற்செய்தி
நூல்களில் கூறப்பட்ட இந்த நம்பிக்கையானது எந்தவித மாற்றுக் கருத்துமின்றி பின்னாளில் திரு அவையின் பாரம்பரியத்தினால் உறுதி செய்யப்பட்டது. முதல் கிறித்தவ அறிஞர்களின் நம்பிக்கை அறிக்கைகள் கன்னிமையில் கருத்தரித்தலின் உறுதிப்பாட்டை முன்னதாகவே கணிக்கின்றன. அரிஸ்திதேஸ், ஜஸ்டின், எரோணிமுஸ் மற்றும் தெர்த்தூலியன் போன்றவர்கள் ‘இயேசு உண்மையில் கன்னியிடமிருந்து பிறந்தவர்’
என்று அறிவிக்கும் அந்தியோக்கு நகர் புனித இஞ்ஞாசியாரின் கருத்தை ஒத்துக்கொள்கின்றனர் (Smyrn. 1,2). இந்த
அறிஞர்கள் ஒழுக்கம் அல்லது அந்தக் குழந்தையின் பிறப்பில் வெளிப்படுத்தப்படும் உறுதியற்ற அருளின் கொடையை மட்டும் உறுதி செய்வதிலிருந்து விலகி, இயேசு கன்னிமையில் கருத்தரிக்கப்பட்ட நிகழ்வை உண்மையான மற்றும் வரலாற்றுப்பூர்வமானதொரு நிகழ்வாகவே அர்த்தம் கொள்கின்றனர்.
முதல்
சுருக்கமான நம்பிக்கை அறிக்கையும், அதைத் தொடர்ந்து வந்த
திருச்சங்கத்தின் இறுதியான நம்பிக்கை அறிக்கை (definitions of faith) மற்றும் திருத்தந்தையின்
ஆசிரியமும் இந்த உண்மையோடு முற்றிலும் ஒத்துப்போகின்றன. கால்சேதேயன் திருச்சங்கம் (451), அதனுடைய நம்பிக்கை அறிக்கையை மிக கவனமுடன் எழுதி, தனது தவறிழைக்காத தன்மையினால் (infallibility) அதன் சாராம்சத்தை வரையறுத்து,
“கிறிஸ்துவை இந்த இறுதி நாள்களில் அவரின் மனுக்குலத்திற்கும் நமக்கும் நமது மீட்பிற்கும் இறைவனின் தாயாகிய கன்னி மரியா ஈன்றெடுத்தார்” (DS 301) என்பதை உறுதிப்படுத்துகின்றது.
இதே வகையில் மூன்றாவது கான்ஸ்டான்டிநோபிள் திருச்சங்கமானது (681) “இயேசு கிறிஸ்து அவருடைய மனுக்குலத்திற்காக, தூய ஆவி முறையான மற்றும் உண்மையில் கடவுளின் தாயாகிய கன்னி மரியா வழியாகப் பிறந்தார்”
(DS 555) என்று
அறிக்கையிடுகின்றது. மற்றத் திருச்சங்கங்களும் (இரண்டாவது கான்ஸ்டான்டைன் திருச்சங்கம், நான்காவது இலாத்தரன் திருச்சங்கம் மற்றும் இரண்டாவது லியோன் திருச்சங்கம்) மரியாவின் என்றைக்குமான கன்னித்தன்மையை அடிக்கோடிட்டு அவரை ‘என்றும் கன்னி’
(ever-virgin) என்று அறிவித்தது (DS 423, 801, 852).
மரியாவைப் பற்றிய
இந்த உண்மைகளை வெளிச்சமிட்டுக் காட்டிய இரண்டாம் வத்திக்கான் சங்கமானது அதைப் பின்வரும் வார்த்தைகளால் உறுதிப்படுத்தியது: “கணவரையே அறியாத அவர் தூய ஆவியார் நிழலிடத் தன் நம்பிக்கையாலும் கீழ்ப்படிதலாலும் தந்தையின் மகனையே உலகில் பெற்றெடுத்தார். புதிய ஏவாளாகிய அவர் ஆதி பாம்பாகிய அலகைக்குச் செவிமடுக்கவில்லை; மாறாக, கடவுளின் தூதுவரிடம் ஐயமற்ற நம்பிக்கை கொண்டார். பல சகோதரர்-சகோதரிகளிடையே...
அதாவது நம்பிக்கை கொண்டோரிடையே தலைப் பேறாக (உரோ 8:29) கடவுளால் நியமிக்கப்பட்ட மகனையே அவர் பெற்றெடுத்தார். இவர்களை நம்பிக்கை கொண்டோராகப் பெற்றெடுத்து வளர்ப்பதில் மரியா தாய்க்குரிய அன்போடு ஒத்துழைக்கிறார்” (இன்றைய உலகில் திரு அவை, எண். 63).
மரியாவைப்
பற்றிய இந்த வரையறையைத் தவிர, திரு அவையின் ஆசிரியம் ‘ஆசிர்வதிக்கப்பட்ட கன்னி மரியா’ என்ற அமல உற்பவக் கோட்பாட்டையும் (DS 2803) மற்றும்
‘அமல உற்பவி மற்றும் என்றும் கன்னியான இறைவனின் தாய்’ என்ற விண்ணேற்புக் கோட்பாட்டையும் வரையறுக்கின்றது (DS 3903).
மரியாவின் புனிதத்துவமும் கன்னித்தன்மையும்
மிகவும்
நெருக்கமான
தொடர்புடையவை
5. திருத்தந்தை
முதலாம் மார்ட்டினால் விரும்பப்பட்ட 649-ஆம் ஆண்டு நடைபெற்ற இலாத்தரன் சங்கத்தைத் தவிர மற்ற எல்லாத் திரு அவையின் போதனைகளும் ‘கன்னி’ என்ற சொல்லாடலுக்கான அர்த்தத்தை விளக்கவில்லை. இதிலிருந்து இந்தச் சொல்லாடலானது, அதன் வழக்கத்திலிருந்த அர்த்தத்தில்தான் பயன்படுத்தப்பட்டது என்பது தெளிவாகிறது. பாலுறவிலிருந்து மனமுவந்து விலகியிருந்தது மற்றும் உடல் ஒழுக்கத்தைக் காத்தது. இருப்பினும், உடல் ஒழுக்கமானது இயேசுவின் கன்னி கருத்தரித்தலினுடைய நம்பிக்கையின் முக்கியமானதோர் அம்சமாகக் கருதப்படுகிறது (ஒப்பிடுக. Catechism of the Catholic Church,
n.
496). ‘என்றும்
தூய கன்னி, அமல உற்பவி’ போன்ற விவரிப்பானது தூய்மை மற்றும் கன்னிமைக்கிடையே உள்ள தொடர்பை நோக்கி நம் கவனத்தை ஈர்க்கின்றது. கடவுளிடம் அவரின் முழு இதயத்தையும் ஒப்படைப்பதற்கு விரும்பியதனால் அதை மையப்படுத்தியே தன் வாழ்வை அமைத்துக் கொண்டதனால் அவர் ஒரு கன்னிமை வாழ்வு வாழ விரும்பினார்.
மரியாவின் விண்ணேற்புக்
கோட்பாட்டு வரையறையில் பயன்படுத்தப்பட்ட, ‘அமல உற்பவி’,
‘இறைவனின் தாயான என்றும் கன்னி’ போன்ற சொல்லாடல்களும், மரியாவின் தாய்மைக்கும் கன்னிமைக்கும் இடையேயான தொடர்பையே குறிப்பதாகும். இந்தச் சிறப்புரிமையானது அற்புதமான வகையில் உண்மையான கடவுளும் மனிதருமான இயேசுவின் கருத்தரிப்பில் அற்புதமான வகையில் இணைகின்றது. இவ்வாறு மரியாவின் கன்னிமையில்
அவரின் தெய்வீகத் தாய்மையும், முழுமையான புனிதத்துவமும் நெருக்கமான வகையில் இணைக்கப்பட்டுள்ளன.
மூலம்:
Pope John Paul II, Virginal conception is biological fact, in
«L’Osservatore Romano», Weekly Edition in English, 17
July 1996, p.11.