1. கிறிஸ்துவின் கருத்தரிப்பு மற்றும் பிறப்பை அறிவிக்கின்ற வானதூதரிடம் மரியா, “இது எப்படி நிகழும்? நான் கன்னி ஆயிற்றே!” (லூக் 1:34) என்ற கேள்வியைக் கேட்கின்றார். குழந்தையே பெற இயலாத பெண்ணிற்கான வழக்கத்திற்கு மாறான பிறப்பு அறிவிப்பைத் தொடர்புப்படுத்துகின்ற திருவிவிலியக் குறிப்புகளைக் கவனத்தில் கொண்டால், அவரின் இத்தகைய விசாரிப்பானது வியப்புக்குரியதாகத் தோன்றுகிறது. அத்தகைய நிகழ்வுகள் அனைத்தும் அவர்களின் கடுமையான தொடர் செபத்திற்கு (ஒப்பிடுக. தொநூ 15:2;30:22-23; 1சாமு 1:10; லூக் 1:13), முறையான திருமண வாழ்வு வழியாக (1சாமு 1:19-20) கடவுள் குழந்தை பாக்கியத்தைக் கொடுத்து, இயல்பாகவே கருத்தரிக்கும் இயல்புடைய திருமணமான பெண்களோடு தொடர்புடையவை.
ஆனால்,
மரியா மாறுபட்டதொரு சூழ்நிலையில் வானதூதரின் செய்தியைப் பெறுகின்றார். அதாவது, அவர் கருத்தரிக்கும் தன்மை பிரச்சினைகளோடு இருந்த ஒரு திருமணமான பெண் அல்ல; மாறாக, அவரின் தன்னிச்சையானதொரு முடிவினால் கன்னியாக இருப்பதற்கு உளமார விரும்புகின்றார். எனவே, கடவுள் மீதான அவரின் அன்பின் கனியாகிய, கன்னித்தன்மைக்கான அவரின் எண்ணமானது, அவருக்கு அறிவிக்கப்பட்ட தாய்மைக்கு ஒரு தடையாகத் தோன்றுகின்றது.
மரியாவின்
வார்த்தைகளை நாம் ஆராய்ந்தால், முதலில் அவை அவரின் இப்போதைய கன்னித்தன்மையின் நிலையை மட்டுமே வெளிப்படுத்துவதாகத் தோன்றலாம். மரியா ‘கணவனை அறியவில்லை’ என்று
கூறுவதன் வழியாக, அவர் ஒரு கன்னி என்று உறுதியாகக் கூறுகின்றார். எனினும், ‘இது எப்படி நிகழும்?’ என்று கேட்கப்படுகின்ற கேள்வியின் சூழலமைவு மற்றும் அதைத் தொடர்ந்து வருகின்ற ‘நான் கன்னி ஆயிற்றே!’ என்ற உறுதியானது, அவரின் அப்போதைய கன்னித்தன்மையையும் மற்றும் கன்னியாக நிலைத்திருப்பதற்கான அவரின் எண்ணத்தையும் கோடிட்டுக் காட்டுகின்றன. நிகழ்காலத்தில் அவர் பயன்படுத்துகின்ற சொல்லாடலானது, அவரின் நிலைத்த மற்றும் நீடித்தக் கன்னித்தன்மையை வெளிப்படுத்துகிறது.
மரியா கடவுளின்
விருப்பத்தோடு
முழுமையாக
ஒத்துழைத்தார்
2. இந்தச்
சிரமத்தைக் குறிப்பிட்டு, மரியா இறைவனின் திட்டத்தை ஒருபோதும் மறுக்கவில்லை; மாறாக, அதற்காகத் தன்னை உறுதிப்படுத்துவதற்கான அவரின் எண்ணத்தை
வெளிப்படுத்துகின்றார்.
மேலும், நாசரேத்தூர் பெண் இறைத்திட்டத்தோடு முழு இணக்கமாகவே எப்பொழுதும் வாழ்ந்தார்; ஆண்டவரைத் திருப்திபடுத்துகின்ற எண்ணத்தோடே கன்னி வாழ்வைத் தேர்ந்தெடுத்தார். உண்மையில் கன்னி வாழ்விற்கான அவரின் எண்ணமானது, “அவருடைய அனைத்து மனித மற்றும் பெண்தன்மையோடு” (with all her human and feminine ‘I’)
கடவுளின் விருப்பத்தை ஏற்றுக்கொள்வதற்கு அவரை ஒழுங்குபடுத்தியது. மேலும், நம்பிக்கையின் இந்தப் பதிலானது ‘முன்னின்று உதவுகின்ற கடவுளின் அருள் மற்றும் தூய ஆவியாரின் செயலுக்கு முழுமையான வெளிப்படைத்தன்மை’ (மீட்பரின்
தாய், எண்.13) ஆகிய இந்த இரண்டையுமே உள்ளடக்கியதொன்றாகும்.
யூதக்
கலாச்சாரத்தில் கன்னித்தன்மையானது ஒரு மதிப்பீடாகவோ அல்லது தேடிப்பெற வேண்டியதோர் இலக்காகவோ கருதப்படாததால், மரியாவின் வார்த்தைகளும் எண்ணங்களும் இயல்பாக நிகழ முடியாததொன்றாகச் சிலருக்குத் தோன்றுகின்றது. அதே பழைய ஏற்பாட்டு ஏடுகள் பல, நன்கு அறியப்பட்ட நிகழ்வுகள் மற்றும் கருத்துகளில் இதை உறுதி செய்கின்றன. உதாரணமாக, நீதித் தலைவர்கள் புத்தகத்தில், இளம் வயதிலும் மற்றும் திருமணமாகாத நிலையிலும் இறப்பைச் சந்திக்க வேண்டிய நிலையில் இருந்த ஜெப்தாவினுடைய மகள் அவளின் கன்னித்தன்மை குறித்துப் புலம்புகின்றாள். அதாவது, திருமணம் செய்துகொள்ள அவளால் இயலவில்லையே என்பதற்காக அவள் புலம்புகின்றாள் (நீதி 11:38). மேலும், “பலுகிப் பெருகி...” (தொநூ 1:28) என்ற இறைக்கட்டளையினிமித்தம், திருமணமானது தாய்மையோடு தொடர்புபடுத்தப்படுகின்ற, இன்ப - துன்பங்களை உள்ளடக்கிய பெண்ணிற்கான இயற்கையானதோர் அழைப்பாகவே கருதப்படுகின்றது.
3. மரியாவின்
முடிவானது எத்தகையதொரு சூழ்நிலையில் பக்குவமானதொரு நிலையை அடைந்தது என்பதைப் புரிந்துகொள்ள, கிறித்தவம் தொடங்கப்பட்ட அடுத்த சில ஆண்டுகளிலேயே கன்னிமை பற்றியதொரு குறிப்பிடத்தக்க நேர்மறை எண்ணமானது சில யூதர்கள் மத்தியில் தோன்றத் தொடங்கியது என்பதையும் நாம் கட்டாயம் நினைவில்கொள்ளவேண்டும். உதாரணமாக, கும்ரானிலிருந்து கண்டெடுக்கப்பட்ட பல வரலாற்று முக்கியத்துவம்
வாய்ந்த சான்றுகளின் அடிப்படையில், எஸ்ஸீனியர்கள் குழும வாழ்வின் பொருட்டும், கடவுளோடு ஒரு நெருங்கிய உறவுகொள்வதன் பொருட்டும் திருமணப் பழக்கத்தில் சில கட்டுப்பாடுகளை விதித்தனர், மணத்துறவு வாழ்வை மேற்கொண்டனர்.
மேலும்,
எகிப்தில் இருந்த ஒரு பெண்கள் குழுமமானது, எஸ்ஸீனிய ஆன்மிகத்தோடு தங்களை இணைத்துக்கொண்டது மற்றும் தற்கட்டுப்பாட்டைக் கடைப்பிடித்தது. அலெக்சாந்திரியாவின் பிலோ என்பவரால் ஒரு சமயக் குழுவாக (sect) விவரிக்கப்படும்
‘Therapeutae’ என்கிற பெண்கள் குழுமமானது, ஆழ்நிலைத் தியானத்தில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டது மற்றும் ஞானத்தேடலை மேற்கொண்டது (De Vita Contemplativa, 21-90).
மணத்துறவு
மற்றும் கன்னி வாழ்வின் முன்னுதாரணமாக இருந்த இத்தகைய யூதச் சமயக் குழுக்களைப் பற்றி மரியா அறிந்திருந்ததாகத் தெரியவில்லை. ஆனால், திருமுழுக்கு யோவான் துறவு வாழ்வு வாழ்ந்திருக்கலாம் என்கிற உண்மையும், அவரின் சீடர்களின் குழுமத்தில் இது மிகவும் உன்னதமாகக் கருதப்பட்டது என்பதும், மரியாவின் கன்னிமைக்கான தேர்வானது இந்தப் புதிய கலாச்சார மற்றும் சமயச் சூழலைச் சார்ந்தது என்கிற யூகக் கருத்திற்குத் துணையாகலாம்.
4. இருப்பினும்,
நாசரேத்துக் கன்னியின் இந்த வழக்கத்திற்கு மாறான நிகழ்வானது, அவரைச் சுற்றியிருந்தவர்களின் மனநிலையோடு அவருடைய உள்மனநிலையையும் தொடர்புபடுத்தி, அவரில் நிறைவேறிய மறையுண்மையின் தனித்துவத்தை
முற்றிலும் தவிர்க்கக்கூடிய தவற்றில் நம்மை விழவைக்கக்கூடாது. குறிப்பாக, அவருடைய வாழ்வின் தொடக்கத்திலிருந்தே கிறிஸ்து பிறப்பு அறிவிப்புச் செய்தியின் பொழுது வானதூதரால் அங்கீகரிக்கப்பட்ட சிறப்புமிக்கதோர் அருளை மரியா பெற்றிருந்தார் என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது. “அருள்மிகப் பெற்றவரே”
(லூக் 1:28) என்ற வாழ்த்தொலியானது திரு அவையின் பொருள் விளக்கத்தின்படி, மரியா அவருடைய பிறப்பின் தொடக்கத்திலிருந்தே புனிதத்தின் முழுமையினால் வளப்படுத்தப்பட்டிருந்தார் என்பதன் பொருள் ஆகும். அமல உற்பவத்தின் தனிப்பட்ட சிறப்புச் சலுகையானது, அந்த நாசரேத்தூர் இளம்பெண்களின் ஒட்டுமொத்த ஆன்மிக வாழ்விலும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
மரியாவின் ஏழ்மையை ஆண்டவர்
வளமையாக
மாற்றுகின்றார்
இவ்வாறாக,
திரு அவையின் வரலாற்றில் கன்னிமை அர்ப்பண வாழ்விற்கு (Virginal Consecration) அநேகப்
பெண்களை ஈர்க்கின்ற அதே தூய ஆவியாரின்2 தூண்டுதலினால், கன்னித்தன்மைக்கான மாதிரியாக இருக்க மரியா வழிநடத்தப்பட்டார்.
மரியாவின்
வாழ்வில் அருளினுடைய தனிப்பட்ட பிரசன்னமானது அந்த இளம் பெண்ணானவள் கன்னிமைக்குத் தன்னையே முழுமையாக அர்ப்பணித்திருந்தார் என்ற முடிவிற்கு இட்டுச்செல்கின்றது. அவருடைய வாழ்வின் தொடக்கத்திலிருந்தே ஆண்டவரின் அளப்பரிய கொடைகளால் நிரப்பப்பட்டு, கன்னியாக அவரையே கொடுப்பதில் தன்
உடல், ஆன்மா அனைத்தையும் கடவுளுக்கே முழுமையாக அர்ப்பணிப்பதற்கு முனைப்போடு இருந்தார்.
அதோடு,
கன்னிமை வாழ்விற்கான அவரின் தீராத ஆசையானது, பழைய ஏற்பாடு மிகவும் உயர்வாகக் கருதுகின்ற கடவுளுக்கு முன்பான ஏழ்மை நிலையோடு இசைந்தே இருக்கிறது. இந்த வழியில் முழுமையாக அவரையே அர்ப்பணித்து, இஸ்ரயேலில் மிகவும் பாராட்டப்பட்ட, பெண்ணின் தனிப்பட்ட சொத்தாகிய தாய்மையையே மரியா விட்டுக்கொடுக்கிறார். இவ்வாறாக, அவர் “துணிந்து நம்பி அவரிடமிருந்து மீட்பைப் பெறுகின்ற, ஆண்டவருடைய எளிய மற்றும் தாழ்ச்சி மிக்கவர்களிடையே உயர்ந்து நிற்கின்றார்” (இறைத்திட்டத்தில்
திருச்சபை , எண். 55).
எவ்வாறாயினும்,
கிறிஸ்து பிறப்பு அறிவிப்பில் அவரை எளியவராகக் காண்பிப்பதிலும், ஆன்மிகக் கனிகளை மட்டுமே இலக்காகக் கொள்வதிலும், ஆண்டவர் அவரின் ஏழ்மையை வளமையாக மாற்றியிருக்கின்றார் என்பதை மரியா கண்டுகொள்கின்றார். மரியா
உன்னதக் கடவுளுடைய மகனின் கன்னித் தாயாக இருப்பார். பின்னர், யாரையெல்லாம் மீட்க இந்த இறைமகன் வந்தாரோ, அந்த மனிதர்களையெல்லாம் நோக்கி அவருடைய தாய்மையானது அகலப்படுத்த வேண்டியுள்ளதையும் அவர் கண்டுகொள்வார் (ஒப்பிடுக. Catechism of the Catholic
Church, n.501).
மூலம்:
John Paul II, Our Lady intended to remain a virgin, in
‘L’Osservatore Romano’ Weekly Edition in English, 31 July 1996, p.7.