news-details
திருத்தந்தையின் முழக்கம்
திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள் (01.03.2026)

இயேசுவின் அருள்பேறுகள், அநீதியுள்ள உலகில் நம்பிக்கையாளர்களுக்கு மாற்றம் தரும் மீட்பின் வழிகாட்டியாகின்றன.”

பிப். 1, மூவேளைச் செபவுரை

அர்ப்பண வாழ்வினர் தாராளம், தியாகம், பிறரன்பு வழியாகக் கடவுளின் மீட்கும் உடனிருப்பிற்குச் சான்றுபகர அழைக்கப்படுகிறார்கள்.”

பிப். 2, துறவியரின் 30-வது உலக நாள் திருப்பலி மறையுரை

மனித மொழியில் வெளிப்படும் கடவுளின் வார்த்தை, ஒவ்வொரு காலகட்டத்திலும் நமது வாழ்வை மாற்ற அழைக்கிறது.”

பிப். 4, புதன் மறைக்கல்வி உரை

துன்புறும் குழந்தைகளுக்கு இரக்கம், மருத்துவப் பராமரிப்பு, நம்பிக்கை வழங்கத் திரு அவைச் சமூகத்தை அழைக்கிறது.”

பிப். 5, பிப்ரவரி மாத இறைவேண்டல்

கிறிஸ்துவின் மகிழ்ச்சியைச் சமூகத்தில் பகிரும் நம்பிக்கைப் பயணமே, உருவாக்கப் பயிற்சியின் முழுமையான அர்ப்பணிப்பாகும்.”

பிப். 6, திருப்பீடத்துறையின் பங்கேற்பாளர்கள் சந்திப்பு

பணிவு, இரக்கம், நீதிச்செயல்கள் மூலம் கிறிஸ்துவில் மகிழ்ச்சி, நம்பிக்கை, அமைதி உலகிற்கு வெளிப்படுகிறது.”

பிப். 8, மூவேளைச் செபவுரை