news-details
திருத்தந்தையின் முழக்கம்
திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள் (08.02.2026)

மறைக்கல்வி ஆசிரியர்கள், திரு அவையின் சிறிய பொறுப்புகளில் பங்கேற்பதன் வழியாக அவர்கள் திரு அவையின் முக்கிய அங்கமாக உணர்வதை முக்கியமாகக் கவனிக்கவேண்டும்.”

சன. 13, மறைக்கல்வி ஆசிரியர்களுக்கான அறிவுரை

இறைவெளிப்பாடு, கடவுளின் நட்பு மற்றும் வார்த்தைகளின் உண்மையான பரிமாற்றத்தால் நம்பிக்கையாளர்கள் மீட்பிலும் உறவிலும் ஒன்றிணைக்கப்படுகிறார்கள்.”

சன. 14, புதன் மறைக்கல்வி உரை

குகெலின் நம்பிக்கை, பணிவு மற்றும் பக்தி அவரின் வாழ்க்கையை முன்மாதிரியான கிறித்தவச் சாட்சியாகக் காட்டுகிறது.”

சன 15, திருத்தந்தையின் உதவியாளர் குகெலின் இறுதிச்சடங்கு

நாளிதழின் சுதந்திரமான, நேர்மையான தகவல்தொடர்பும் உரையாடலும் அமைதியையும் மனித ஒருமைப்பாட்டையும் ஊக்குவிக்கும்.”

சன 16, La Repubblica இத்தாலிய இதழ் ஆசிரியர் குழுவிற்கு வாழ்த்துச் செய்தி

கல்விக் கழக மாணவர்கள், ஆன்மிகப் பயிற்சியோடும் இறைவேண்டலோடும் சிறப்பான அருள்பணியாளர்களாக உருவாகவேண்டும்.”

சன. 17, பாப்பிறைக் கல்விக் கழகத்திற்கு வாழ்த்துச் செய்தி

திருமுழுக்கு யோவானின் பணிவு மற்றும் நேர்மையைப் பின்பற்றி இறைவேண்டல் மற்றும் ஆழமான ஆன்மிக வாழ்வை வாழ்வோம்.”

சன. 18, மூவேளை இறைவேண்டல் உரை