‘ஆயுதமற்ற அமைதியை நோக்கி’ என்ற வலிமையான செய்தியை 59-வது உலக அமைதி தினத்தை முன்னிட்டு திருத்தந்தை லியோ அவர்கள் வெளியிட்டுள்ளார். அதில் அமைதி என்பது வெறும் இலக்கல்ல; மாறாக, அது ஒரு தொடர் பயணம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். வன்முறை மற்றும் பிரிவினைகளால் ஏற்பட்ட வடுக்களை ஆற்ற ‘மறு சீரமைப்பு நீதி’ (Restorative Justice) முறையைப் பின்பற்றுமாறு அவர் உலகிற்கு அழைப்புவிடுத்துள்ளார். “இது வெறும் தண்டனை வழங்குவதைவிட, பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பாதிப்பை ஏற்படுத்தியவர்கள் இடையே உறவைச் சீரமைப்பதில் கவனம் செலுத்துகிறது” என்று தெரிவித்துள்ளார். ஆழமான செவிமடுத்தல் மற்றும் உண்மையான உரையாடல் மூலமே பிளவுகளைக் கடந்து அமைதியை நிலைநாட்ட முடியும் என்றும் திருத்தந்தை வலியுறுத்தியுள்ளார்.