news-details
வத்திக்கான் செய்திகள்
மனிதக் கடத்தலுக்கு எதிராகப் பிலிப்பைன்ஸ் ஆயர்கள்!

மனிதக் கடத்தல் மற்றும் சுரண்டல்களுக்கு எதிராகப் பிலிப்பைன்ஸ் திரு அவை தனது மறைமாவட்டக் கட்டமைப்புகளை வலுப்படுத்த வேண்டுமெனப் பிலிப்பைன்ஸ் கத்தோலிக்க ஆயர் பேரவை (CBCP) அழைப்புவிடுத்துள்ளது. பிப்ரவரி 1 அன்று அனுசரிக்கப்பட்ட தேசிய விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்ட அறிக்கையில், நாடு எதிர்கொள்ளும் பல்வேறு சமூகச் சீர்கேடுகள் குறித்து ஆயர்கள் கவலை தெரிவித்துள்ளனர். சட்டவிரோத ஆள்சேர்ப்பு, கட்டாய உழைப்பு மற்றும் குழந்தைகளுக்கு எதிராக இணையவழியில் பெருகிவரும் பாலியல் துன்புறுத்தல்கள் ஆகியவை பிலிப்பைன்சில் பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளன. வறுமை, கல்வியறிவின்மையைப் பயன்படுத்தி வேலைவாய்ப்பு எனும் பெயரில் டிஜிட்டல் தளங்கள் வாயிலாக மக்கள் கடத்தப்படுகின்றனர். மறைமாவட்ட அளவில்மனிதக் கடத்தலுக்கு எதிரான குழுக்களைஅமைப்பதன் மூலம், அரசுடன் இணைந்து பாதிக்கப்பட்டவர்களுக்குப் பாதுகாப்பும் நீதியும் வழங்க முடியும் என ஆயர் சாக்ரடீஸ் மெசியோனா வலியுறுத்தியுள்ளார்.