news-details
ஆன்மிகம்
‘நான் உன்மீது அன்பு செலுத்தி வருகிறேன்’ – Dilexi Te

3-ஆம் அதிகாரம் ஏழைகளுக்கான திரு அவை A Church for the Poor (எண் 35-81)

திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்றாவது நாளில் பிரான்சிஸ் அவர்கள் ஊடகப் பகராளிகளுக்குப் பேட்டி கொடுத்தார். அப்போதுதிரு அவை ஏழையாகவும் ஏழைகளுக்காகவும் இருக்க நான் மிகவே விரும்புகிறேன்என்றார்.

கிறித்தவ நம்பிக்கைக்கும் ஏழைகளுக்கும் பிரிக்க முடியாத பந்தம், தொடர்பு இருக்கிறது.

திரு அவையின் உண்மையான செல்வம்

தொடக்கத் திரு அவையில் ஏழைகளுக்குப் பணி செய்வதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் 7 பேர் (திப 6:1-5). இதில் மறைச்சாட்சியாக மரித்த ஸ்தேவான் ஒருவர்.

இரண்டாவது நூற்றாண்டில் திருத்தந்தை 2-வது சிக்டஸ் காலத்தில் ஏழைகளே திரு அவையின் செல்வமென்று திருத்தொண்டர் இலாரன்ஸ் உரோமை அதிகாரிகளுக்குக் காட்டினார். இவரும் மறைச்சாட்சியாக மரித்தார்.

திரு அவைத் தந்தையரும் ஏழைகளும்

ஏழைகளே கடவுளைச் சந்திக்கவும், அவரை அடையவும் சிறந்த வழிஎனத் திரு அவைத் தந்தையர்கள் கண்டுணர்ந்தனர். ஏழைகளுக்கு உதவுவது வெறும் அறப்பணி மட்டுமல்ல; கூடுதலாக வார்த்தை மனுவுருவான இயேசுவை நம்புவதும் ஆகும். ஏழைகளுக்கு உதவுவது, கிறித்தவத்தின் ஒரு பிற்சேர்க்கை அல்ல; மாறாக, கிறிஸ்துவினுடைய வாழும் உடலின் தவிர்க்க முடியாத ஓர் அங்கம் ஆகும்.

அந்தியோக்கு புனித இஞ்ஞாசியார், புனித பொலிக்கார்பு போன்றவர்கள் திரு அவைப் பணியாளர்கள் ஏழைகளுக்கு உதவுவதை மிகவே வலியுறுத்துகின்றனர். திரு அவைத் தந்தையர்களின் கூற்றிலிருந்து திரு அவை ஏழைகளின் தாய் என்பதை உணரலாம்.

கிறித்தவ நம்பிக்கையையும் ஏழைகளையும் பிரிக்க முடியாதது போல, இறைவழிபாட்டையும் ஏழைகள் மீதான அக்கறையையும் பிரிக்க முடியாது என்பதைத் திரு அவைத் தந்தையரின் வாழ்வும் படிப்பினைகளும் எடுத்துரைக்கின்றன.

புனித ஜான் கிறிஸ்சோஸ்தம்

கிழக்கத்தியத் தந்தையரில் சமூக நீதிக்காக ஓங்கிக் குரல் கொடுத்தவர்களில் முக்கியமானவர் யோவான் கிறிஸ்சோஸ்தம். கோவிலில் விலையுயர்ந்த சில்க் துணி, வெளியே குளிரில் ஆடையின்றி ஏழைகள்; கடவுளுக்குத் தங்கப் பாத்திரங்கள், தங்க மனதுள்ள ஏழைகள் வெளியே, ஏழையரில் கிறிஸ்துவைச் சந்திக்காதவர்கள், ஆலய வழிபாட்டில் அவரைச் சந்திக்க முடியாது என்கிறார்.

இரக்கச்செயல் என்பது ஒருவர் விரும்பினால் செய்யும் ஒன்று அல்ல; உண்மையான வழிபாட்டுக்கு மிகத் தேவையான ஒன்று. ஏழைகளைக் கண்டு கொள்வது, நமது மீட்புக்குத் தேவையான ஒன்று.

புனித அகுஸ்தின்

ஏழைகளுக்கு நீ கொடுப்பது உன்னுடையது அல்ல; அவர்களுக்கு உரியது. பொதுநன்மைக்காக எல்லாருக்கும் கொடுத்ததை நீ அபகரித்ததையே ஏழைகளுக்குக் கொடுக்கிறாய். தர்மம் என்பது வஞ்சிக்கப்பட்ட நீதியை, திரும்பக் கொடுப்பது - Almsgiving is Justice Restored.

அன்பில் ஏழைகளுக்கு உதவுவது, உதவி செய்கிறவரின் இதயத்தைத் தூய்மையாக்கும்; அவருடைய கடந்தகாலப் பாவங்களைப் போக்கும்என்கிறார் புனித அகுஸ்தின்.

நோயுற்றவர் மீது அக்கறை

கார்த்தேஜ் நகரில் கொள்ளைநோய் பரவியபோது, ஆயர் சிப்பிரியன் நோயுற்றவர் மீது அக்கறை, ஏழைகளைச் சந்திப்பது, அவர்களின் புண்களைக் கழுவுவது, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறுவது - இவை வெறும் மனிதநேயச் செயல்கள் மட்டுமல்ல; துன்புறும் கிறிஸ்துவின் உடலைத் தொடுவதாகும். மீட்பு என்பது அருவமான ஒரு கருத்து அல்ல; எதார்த்தமான பரிவிரக்கச் செயலாகும் என்றார்.

இதுபோலவே புனிதர்களான கடவுளின் யோவான், கமில்லஸ், வின்சென்ட் தே பவுல், மருத்துவமனை சகோதரிகள், இறைப்பரா மரிப்பின் சிறிய சகோதரிகள் செய்வது கடவுளுக்குச் செய்யும் சேவையாகும்.

துறவு மடங்களில் ஏழைகள் மீது அக்கறை

வேரோட்டமான பற்றற்ற நிலையில் மடத்துறவிகள் ஏழைகளுக்கு உதவுகின்றனர்.

விருந்தினரை உபசரித்தல், தேவையில் இருப்பவர்களுக்கு உதவுதல், துறவுமட ஆன்மிகத்தின் ஒரு முக்கியப் பரிமாணம்என்கிறார் புனித பெரிய பேசில்.

மேற்கில்-நோர்சியா புனித பெனடிக்ட்- “செபமும் தர்மமும் அமைதியும் பணியும்- இவர்களது சட்ட ஒழுங்கிலும் ஆன்மிகத்திலும் இடம்பெறுகின்றனஎன்கிறார்.

சிறைப்பட்டோரைச் சந்தித்து, அவர்கள் விடுதலை பெற உதவுவது ஏழைகள் மீதான அக்கறை பணியாகும்.

நற்செய்தியின் ஏழ்மைச் சான்று - பிரான்சிஸ்கர்கள், டொமினிக்கர்கள், அகுஸ்தீனியர்கள், கார்மெல் சபையினர் - இரந்து வாழ்தல் - தர்மம் எடுத்து வாழ்தல் இவைகளை ஏழ்மையின் அடையாளமாகப் பார்க்கின்றனர்.

திரு அவையும் ஏழைகளுக்குக் கல்வியும்

புனித தொன்போஸ்கோ, “ஏழைகளுக்குக் கல்வி புகட்டுதல், மிகச்சிறந்த அறப்பணிஎன்கிறார்.

புனித ஜான் பேப்டிஸ்ட் தெலசால், “ஏழைக் குழந்தைகள், தொழிலாளர்களுடைய குழந்தைகளுக்குக் கல்வி ஏழ்மைப் பணிஎன்கிறார்.

புலம்பெயர்ந்தோர் - நான் அந்நியனாக இருந்தேன்; என்னை ஏற்றுக்கொண்டீர்கள் (மத் 25:35). அந்நியர்களை நான்கு வினைச் சொற்கள் கொண்டு வரவேற்போம் (Welcome), பாதுகாப்போம் (Protect), ஆதரிப்போம் (Promote), நம்மோடு இணைப்போம் (Integrate)”  என்கிறார் திருத்தந்தை பிரான்சிஸ்.