“சில கருத்தியல்களோடு நான் முரண்படுகிறேன். நான் பங்களிப்பு செய்ய அல்லது நான் சார்ந்த சமூகத்திற்கு என் பங்களிப்பை மறுக்கும் கருத்தியலை நான் மறுக்கிறேன். ஆர்.எஸ்.எஸ். என்ற அமைப்பின் கருத்தியல் அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. இவ்வரசமைப்பு உரிமைச் சட்டம் அனைவருக்கும் சம உரிமைகளை வழங்கியது. பிரிவினைவாதத்தை (division) உள்ளடக்கிய இக்கருத்தியலை ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் உற்றார் உறவினர் எவரும் கடைப்பிடிப்பதில்லை. ஆனால், ஏனையோர் இக்கருத்தியலை ஏற்கவேண்டும் என்று வற்புறுத்துகின்றனர்.”
“இதே கருத்தியல்தான்
மகாத்மாவின்
கொலைக்குக்
காரணி
ஆனது.
இதே
கருத்தியல்தான்
பாபாசாகேப்
அம்பேத்கரை
‘லில்லிபுட்’ என்று அழைக்கவைத்தது.
இதே
கருத்தியல்தான்
நூற்றுக்கும்
மேற்பட்ட
இடங்களில்
மக்களைத்
திரட்டி,
இந்திய
அரசமைப்புச்
சட்டத்தை
மறுக்கவும்
மனுஸ்மிருதியை
அதனிடத்தில்
வைக்கவும்
மக்களைத்
தூண்டியது.
கடந்த
ஒரு
நூற்றாண்டாக
இந்திய
மண்ணில்
விதைக்கப்பட்டு
வரும்
இக்கருத்தியலால்தான்
உச்ச
நீதிமன்ற
நீதியரசர்
ஒருவரின்
மதம்
பற்றிய
கருத்தால்
செருப்படி
வாங்க
நேர்ந்தது.”
கர்நாடக மாநிலத்தின்
இன்றைய
உள்துறை
அமைச்சர்
பிரியங்க்
கார்கே
அவர்கள்,
கடந்த
2025, டிசம்பர்
15 அன்று
‘பிரண்ட்
லைன்’ என்ற ஆங்கில
மாத
இதழுக்கு
அளித்த
நேர்காணலின்
சில
பகுதிகள்.
ஆறு
மாதங்களுக்கு முன்னர்
ஆர்.எஸ்.எஸ். என்ற அமைப்பின் கருத்தியலைத் தோலுரித்துக் காட்டிய கார்கே, ஆர்.எஸ்.எஸ். என்ற அமைப்பு நிலவும் சட்ட விதிகளை மதித்து நடக்கவேண்டும் எனவும், அரசுப் பள்ளிகள், கல்லூரிகள், அரசு நிறுவனங்கள், அரசு உதவிபெறும் நிறுவனங்கள், பொது மைதானங்கள், சாலைகள், பூங்காக்களை விருப்பம்போல் பயன்படுத்துவதை அனுமதிக்க உரிய அனுமதி (Permission) பெறவேண்டும்
எனவும் கோரிக்கை வைத்தபோது, ஆர்.எஸ்.எஸ். என்ற மூல அமைப்பும், அவ்வமைப்பின் கிளை அமைப்புகளும் சினம் பொங்கத் துள்ளிக்குதித்தன.
திரு.
கார்கே அவர்களின் கோரிக்கையை ஏற்ற சித்தாராமையா அரசு, அரசின் அனுமதியைக் கட்டாயமாக்கி ஆணை பிறப்பித்தது.
இப்போதும் என்ன?
‘இந்நாட்டின் பாரம்பரியப் பெருமையையும், கலாச்சார மேன்மையையும், மதரீதியிலான தேசியத்தையும் வளர்த்தெடுக்கும் நோக்கில் உருவாகிச் செயல்பட்டு வரும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஆதிமூலம் எது?’ என்ற கேள்வியை ஒருவர் எழுப்பி, இவ்வமைப்பின் அடிப்படையைக் கேள்விக்குள்ளாக்குகிற கொடுமை இன்று நிகழ்ந்துள்ளது. ஆம், ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார். ஆர்.எஸ்.எஸ். என்ற மூல அமைப்பை, அவ்வமைப்பின் கிளை அமைப்புகளை, ஆர்.எஸ்.எஸ். நடத்தும் ஷாகாக்களை, பகை வளர்க்கும் பரப்புரைகளை, பிரிக்கும் மத உணர்வுகளால் மக்களைத்
துருவப்படுத்தியுள்ள
(Polaris) தேசிய
அமைப்பின் பிறப்பினை, அதன் ஆதிமூலத்தை கார்கே கேள்விக்கு உள்ளாக்கியுள்ளார். இது எப்படிச் சாத்தியமானது?
ஆர்.எஸ்.எஸ். எனும் பூனையின் கழுத்தில் கட்டப்பட்ட மணி தரும் செய்தியால், கார்கே ஒரு பூகம்பத்தையே கட்டவிழ்த்துள்ளார். ஒரு நிறுவனத்தை நாடெங்கும் கிளை பரப்பி, ‘ஷாகா’ என்ற பெயரில் இராணுவ ரீதியான பயிற்சி அளித்து இந்திய ஊடகங்களை, தொடர்பு சாதனங்களைத் தமதாக்கி, விஷமத்தனமானப் பிரச்சாரங்களால் வன்மம் வளர்த்து, கடந்த பன்னிரண்டு ஆண்டுகாலமாக அசைக்க இயலாத அளவுக்கு ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிய ஆட்சியாளரின் பூர்வக் கதையையும், அவர்களின் முகவரியையும் கேள்வி கேட்கத் துணிந்துள்ளார் ஓர் இளைய அமைச்சர். இவர் இளைஞர் மட்டுமல்லர்; இவர் ஒரு பட்டியலினத்தவர். காங்கிரஸ் கட்சியின் பெருந்தலைகள்கூட வாக்கு வங்கி அரசியலுக்கு அஞ்சி எழுப்ப அஞ்சும் கேள்வியை இதே கட்சியைச் சேர்ந்த ஒருவர் எழுப்புவது சங்கப் பரிவாரங்களிடம் கோபத்தை எழுப்பியிருப்பதில் வியப்பு ஒன்றுமில்லையே!
கார்கே என்னதான்
கேட்டார்?
கார்கே
இப்போதைய சிவக்குமார் அரசில் உள்துறை அமைச்சர்; ஏற்கெனவே முதல்வராக இருந்த சித்தாராமையா அரசில் வேறு துறையில் அமைச்சராக இருந்தபோதுதான், தனது கல்புர்கி தொகுதியில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் நடத்தவிருந்த ஆர்.எஸ்.எஸ். பவனியின்போது, அரசிடம் முன் அனுமதி கேட்கவேண்டும் எனக் கோரிக்கை வைத்தார். இதனால் சித்தாராமையா பெறவேண்டிய அனுமதியைச் சட்டப்பூர்வமாக்கினார் (Mandatory).
இப்போது
கோபக்குரல் எழுப்பும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை எதிர்த்து உள்துறை அமைச்சர் என்ற உயர் பொறுப்பிலிருப்பவர் பொங்கி எழுந்துள்ளார்.
‘நூற்றாண்டு கண்ட ஆர்.எஸ்.எஸ். என்ற நிறுவனம் எங்கே, எப்படிப் பதிவு (Register) செய்யப்பட்டுள்ளது?’
என்பதே இவரின் தலையாய கேள்வி. ஒரு மாநிலத்தின் அமைச்சர்களுள் ஒருவர், இப்படி ஒரு வினா எழுப்பியதைக் கண்டு அதிர்ந்து போன சங்கப் பரிவாரங்கள் சார்பாக அதன் இப்போதைய தலைவர் மோகன் பகவத் என்ன பதில் கூறுகிறார்?
ஆர்.எஸ்.எஸ். நாடு முழுவதும் நாள்தோறும் ஓயாது செயல்பட்டு வருவதாகவும், இவ்வமைப்பு முழுக்க முழுக்க வெளிப்படைத்தன்மையோடு தன் பணிகளை நடத்தி வருவதாகவும் பதிலிறுத்ததோடு, இவ்வமைப்பைப் பதிவு செய்யவேண்டிய அவசியம் இல்லை என்கிறார். அதை நியாயப்படுத்த, இந்து தர்மம்கூட இன்னும் பதிவு செய்யப்பெறவில்லை என்றும் விரைந்து பதிலிறுத்தார். “இந்து தர்மமே பதிவு செய்யப் பெறாமலே, மக்கள் இத்தர்மத்தை அனுசரித்து வருகையில், இந்துகளுக்கான ஆர்.எஸ்.எஸ். ஏன் பதிவு செய்யப்பெறவேண்டும்?” என்று வினா எழுப்புகிறார்.
1925-இல் நாக்பூரைத்
தலைமையிடமாகக் கொண்டு தொடங்கப்பெற்ற ஆர்.எஸ்.எஸ். இதன் மதத்தீவிரவாதப் போக்கால் வரலாற்றில் மூன்று முறை ஒன்றிய அரசால் தடைசெய்யப்பட்டது என்பதை மக்கள் அறிவர். மகாத்மா காந்தி ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கோட்சேயால் கொலை செய்யப்பட்ட போது பண்டித நேரு, சர்தார் படேல் எனும் பெருந்தலைவர்களின் ஒப்புதலோடு ஆர்.எஸ்.எஸ். முதல் முறையாகத் தடை செய்யப்பட்டது. அன்றைய ஆர். எஸ்.எஸ். தலைவர் குருஜி கோல்வாக்கர் எடுத்துக் கொண்ட முயற்சிகளாலும், ‘இவ்வமைப்பு நாட்டுப் பற்றில் நம்பிக்கை கொண்டது’ என்று படேல் போன்றோர் கொண்ட நம்பிக்கையினாலும் அந்தத் தடை நீக்கப்பட்டது.
ஆனால்,
தடை நீக்கத்திற்கு ஒப்புக்கொண்ட பண்டித நேரு, ஒரே ஒரு கோரிக்கையை முன் வைத்தார்: “ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நோக்கம் மற்றும் அதன் அமைப்பு (Constitution) பற்றிய
விளக்கத்தை எழுத்துவடிவில் எழுதித் தரட்டும்; நிரந்தரமாகத் தடைநீக்கம் பற்றி யோசிக்கலாம்” என்றார்.
இப்போது
திரு. கார்கே ‘இவ்வமைப்பு பதிவு செய்யப்பட்ட ஒன்றா?’ என்றுதான் கேள்வி எழுப்புகிறார். 1948-இல் நேரு தலைமையிலான ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சரான சர்தார் படேல், ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கான அமைப்பு விதி (Constitution) பற்றிக்
கேள்வி எழுப்பினார். அப்போதுதான் ஓர் உண்மை அம்பலமாகியது - இவ்வமைப்புக்கென்று ஓர் அமைப்பு விதி இல்லை என்ற கதை. உடனே இவ்வமைப்பின் மேல்மட்ட உறுப்பினர்கள் ஒன்றுகூடி, அவசர அவசரமாக ஓர் அமைப்பு விதியை உருவாக்கி, ஒன்றிய அரசிற்குச் சமர்ப்பித்த பின்பே ஆர்.எஸ்.எஸ். மீதான தடை நீக்கப்பட்டது. இவ்வமைப்பின் தலைவராக ஒருவர் நியமிக்கப்படுகிறார். போட்டியின்றி நியமிக்கப்படும் தலைவருக்குப் பதவிக்காலம் நிர்ணயிக்கப்படுவதில்லை. இவ்வமைப்பின் ஆட்சிக் குழுவில் பெண்களுக்கு இடமில்லை. இவ்வமைப்பின் செயல் திட்டங்களுக்குப் பின் எவ்விதச் சனநாயக முறைமையும் கடைப்பிடிக்கப் பெறுவதில்லை. சுருக்கமாகக் கூறினால், இது ஒரு சனநாயக அமைப்பே இல்லை; சனநாயகப் பண்பு இதன் அடிப்படையில் இல்லை என்பதால்தான், இன்றைய மோடி அரசின் போக்கில் சனநாயகத்தின் எச்சம் எதையும் நம்மால் காணமுடியவில்லை.
இவ்வமைப்பு
பதிவு செய்யப்படாத நிலையில், எவருக்கும், ஏன் அரசுக்கும்கூட பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் இல்லை. இந்திய நாட்டில் மக்களிடம் அல்லது சமூகத்தில் செயல்படும் சிறு அமைப்புகள் கூட பதிவுசெய்யப்பட்டவைதாம். அனைத்து நிதி நிறுவனங்களையும் பதிவு செய்தால் மட்டுமே அவை இயங்குவதற்கான உரிமம் என்ற பெயரில் அனுமதியைப் பெறுகின்றன. அப்படியிருக்க, இலட்சக்கணக்கான உறுப்பினர்களை வைத்து நடத்தப்பெறும் செயல்பாடுகள், பயிற்சிகள்... இவையெல்லாம் தங்குதடையின்றி நடத்தும் போது அதைப் பதிவுசெய்ய இவர்களுக்கு என்ன தயக்கம்?
“ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் புது தில்லியில் இவ்வமைப்பின் தலைமைச் செயலகத்தைத் திறந்து வைக்கிறார். இவ்வலுவலகம் 3.75 ஏக்கரில் அமையப் பெற்றுள்ளது. 150 கோடி ரூபாய் செலவில் இக்கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இவ்வலுவலகம் கட்டி முடிக்க எங்கிருந்து நிதி பெறப்பட்டது? நாட்டு மக்களின் நலனுக்காகவே இவ்வமைப்பு செயல்படுகிறது என்று கூறிவருவது உண்மையானால், இப்பணிக்கான செலவீனங்களை அல்லது நிதி ஆதாரங்களை எங்கிருந்து பெற்றீர்கள் என்று கூறவேண்டாமா? மக்களுக்கு ஆற்றவிருப்பதாகச் சொல்லப்படும் அனைத்துப் பணிகளுக்கும் நிதி வேண்டுமே! அந்த நிதியை எங்கிருந்துதான் பெறுகின்றீர்கள்?” - கார்கே. ‘பிரண்ட் லைன்’,
15-12- 2025.
மேற்கண்ட திரு.
கார்கே அவர்களின் கூற்றின் நீட்சிதான் இப்போது ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பதிவு பற்றிய கோரிக்கை. வெளிநாட்டு நிதியுதவி பெறுதற்கான F.C.R.A-வின்மீது
தொடர்ந்து மிகு தீவிர அக்கறை காட்டிவரும் இன்றைய ஒன்றிய அரசு, மதச்சிறுபான்மையினர் பெறும் நிதி ஆதாரங்கள் அனைத்தும் அரசு விதித்த தணிக்கை முறைக்கு ஆட்படுத்தப்பட்டபோதும் எப்போதும் சந்தேகக் கண்ணோடு பார்ப்பதும், நிதி பெறும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், சமூகப் பணியாற்றும் சமய நிறுவனங்கள், குடிமைச் சமூக அமைப்புகள் என இவையனைத்தும் முடக்கப்
பெறுவதை நாளும் பார்க்கிறோம். முறையான உரிமம் பெற்றுச் செயல்படும் இந்நிறுவனங்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டவை.
ஆனால்,
வெளிநாட்டுவாழ் இந்தியர்களிடம் கணக்கிலடங்கா நிதிபெற்று இந்தியாவில் செயல்படும் விசுவ இந்து பரிஷத் (VHP) என்ற
ஆர்.எஸ்.எஸ்-சின் கிளை அமைப்பு இதுவரை பெற்ற நிதியின் அளவை எவரும் அறியார். இந்தியாவின் மிகப்பெரிய N.G.O. போல
இயங்கும் ஆர்.எஸ்.எஸ். என்ற மதவாத அமைப்பின் வரவு-செலவை மிகப்பெரிய அளவில் ‘சிதம்பர இரகசியமாக’
காப்பாற்றி வரமுடிவதன் காரணம், இதன் பதிவு செய்யப்படாத நிலைதான்.
இந்தியாவின் மிகப்பெரிய
மதப்பாதுகாப்பிற்கென உருவான ஆர்.எஸ்.எஸ். மதப்பெரும்பான்மை எனும் வாக்கு வங்கியினைக் காட்டி அச்சுறுத்தி வருவதால், சமய சார்பற்ற சனநாயக சக்திகள்கூட இம்மாதிரியான கேள்விகளை எழுப்ப அஞ்சுகின்றன. தேர்தல் அரசியல் தரும் அச்சம் இக்கட்சிகளை மௌனியாக்கிவிடுகின்ற சூழலில், கார்கே போன்றவர்களின் நிலைப்பாட்டைப் பாராட்டுவோம்.
“கார்கேயின் இந்த உறுதியான தலையீட்டை, வெளிப்படையான சவாலைக் கேள்விக்குட்படுத்த முடியாத அளவுக்கு அரசின் மறைமுகப் பலமாகச் செயல்பட்ட ஆர்.எஸ்.எஸ். அமைப்பை அம்பலப்படுத்திய போக்கை நாம் புரிந்துகொள்ளவேண்டும். இவ்வமைப்பு இந்நாட்டில்தான் நினைத்ததையெல்லாம் செய்துவருகிறது. இவ்வமைப்பு இந்திய அரசமைப்புச் சட்டத்தை ஒருபோதும் ஏற்றதேயில்லை. அரசமைப்புச் சட்டத்தின் அனைத்துப் பண்புகளும் செயலிழக்கும் வகையில் இவ்வமைப்பு தன் செயலைத் திறம்பட நடத்தி வருகிறது. இந்து வாக்குகளை இழந்துவிடுவோம் என்ற அச்சத்தில் காங்கிரஸ் இவ்வமைப்பைக் கேள்விக்குள்ளாக்க அஞ்சினால் அது ஓர் அரசியல் தற்கொலையே.”
எ.நாராயணா, அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம், ‘பிரண்ட் லைன்’,
15-12-2025.