news-details
திருத்தந்தையின் முழக்கம்
திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள் (12.07.2026)

திரு அவையில் ஒற்றுமை என்பது தனிப்பட்ட கருத்துகளைப் பிடித்துக்கொள்வதன் மூலம் உருவாகாது; மாறாக, உண்மையின் வெளிச்சத்தில் ஒருவருக்கொருவர் செவிமடுத்து, சந்திப்பிற்கான வழிகளைத் தேடுவதன் மூலம் கட்டியெழுப்பப்படுகிறது.”

ஜூன் 29, புனித பேதுரு பெருங்கோவிலில் திருப்பலி மறையுரை

பிறருக்காக நேரத்தை ஒதுக்குதல், ஆறுதல் அளித்தல், தன்னலமின்றிப் பகிர்ந்துகொள்தல் போன்ற சிறிய தியாகங்களே இறையன்பின் வெளிப்பாடுகள்.”

 ஜூன் 28 , நண்பகல் மூவேளை இறைவேண்டல் உரை

உண்மையான திரு அவை புதுப்பித்தல் என்பது கட்டமைப்பு சீர்திருத்தங்களை மட்டும் சார்ந்திராமல், நற்செய்திக்கு உண்மையுள்ள சான்றாக இருப்பதில் தொடங்குகிறது.”

 ஜூன் 27 சிறப்புநிலை  கர்தினால்கள் ஆலோசனை அவைக் கூட்டத்தில் திருப்பலி செய்தி

தலைமை என்பது கட்டளையிடும் பணியல்ல; முதலில் கேட்டு அறிந்து, பின்னர் வழிநடத்தும் பணியே உண்மையான தலைமை.”

ஜூன் 26, கர்தினால்களின் சிறப்புப் பேரவைக் (Consistory) கூட்டத் திருப்பலி செய்தி

கத்தோலிக்க சமூகப் போதனைகளின் அடிப்படையில் டிஜிட்டல் யுகத்திற்கான புதிய அணுகுமுறைகளை உருவாக்க கல்வி நிறுவனங்கள் முன்வரவேண்டும்.”

ஜூன் 25, வட அமெரிக்கா இயேசு சபை கல்லூரிகள், பல்கலைக்கழகங்களின் தலைவர்களுடன் சந்திப்பு