news-details
திருத்தந்தையின் முழக்கம்
திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள் (05.07.2026)

ஒவ்வொரு மனிதரின் உள்ளார்ந்த மாண்பை மதித்துச் செயல்படுவதன் மூலமே நீதி மற்றும் அமைதி நிறைந்த உலகை உருவாக்க முடியும்.”

ஜூன் 22, உலக உணவுத் திட்டத்தின் பிரதிநிதிகள், பணியாளர்களுடன் சந்திப்பு

திருத்தூதுப் பணியின் வலிமை மனித முயற்சிகளிலோ கருவிகளிலோ அல்ல; மாறாக, தூய ஆவியின் செயல்பாட்டிலும் இறைவனுடனான ஆழமான உறவிலும் உள்ளது.”

ஜூன் 21, நண்பகல் மூவேளை இறைவேண்டல் உரை

உயிருள்ள கற்களாக அழைக்கப்பட்டுள்ள நாம், மக்களின் வாழ்வோடும் அவர்களின் மகிழ்ச்சி, சவால்கள் மற்றும் எதிர்பார்ப்புகளோடும் இணைந்து பயணிக்கும் திரு அவையாக இருக்கவேண்டும்.”

ஜூன் 20, பாவியா, சாந்த்ஆன்ஜலோ லோடிஜியானோ திருப்பலிச் செய்தி

உறுதியான நற்செயல்கள் மூலமே அன்பின் நாகரிகம் கட்டியெழுப்பப்படும். மேலும், படைப்பின் அழகால் தூண்டப்பட்டு உலகளாவிய பொறுப்புணர்வுடன் செயல்படும் துணிச்சலான தலைவர்களை உருவாக்குவது காலத்தின் தேவை.

ஜூன் 19, ‘போர்கோ உரையாடல்கள்நிகழ்வில் பங்கேற்றவர்களுடன் சந்திப்புச் செய்தி

அறிவும் அன்பும் இணைந்த சேவைக்குத் தூய ஆவியால் நிறைந்த இதயம் தேவை.”

ஜூன் 18, கிழக்குத் திரு அவைகளுக்கான உதவி அமைப்புகளின் ஒன்றியமான ROACO-வின் முழுக்கூட்டப் பங்கேற்பாளர்களுடன் சந்திப்பு