news-details
திருத்தந்தையின் முழக்கம்
திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள் (19.07.2026)

போர்களும் மோதல்களும் நிறைந்த உலகில் ஒருவரையொருவர் குற்றம் சாட்டுவதற்குப் பதிலாக, இறை இரக்கத்தையும் மனமாற்றத்தையும் நாடவேண்டும்.”

ஜூலை 7,  லோடி மறைமாவட்டத்தில் 27-வது புனித கொலம்பானுஸ் விழா செய்தி

அனைத்து நம்பிக்கையாளர்களும் தங்களது பங்குச் சமூகங்களில் ஆழமான நற்கருணை வாழ்வை வளர்த்தெடுத்து, தங்கள் வாழ்க்கையை இறைவனின் அன்பான திருவுளத்தின் பாதுகாப்பில் ஒப்படைக்கவேண்டும்.”

ஜூலை 6, அமெரிக்கா 2026 தேசிய நற்கருணை திருப்பயணத்தின் நிறைவு காணொளிச் செய்தி

இயேசுவின் சிலுவை மனிதரை ஒடுக்கும் சுமை அல்ல; மாறாக, அவர் நம்மோடு சேர்ந்து சுமக்கும் அன்பின் நுகம்.”

ஜூலை 5, மூவேளை இறைவேண்டல் செப உரை

இறைவனை நேசிப்பதும், அயலானை நேசிப்பதும் ஒன்றிலிருந்து ஒன்றைப் பிரிக்க முடியாதவை. பிறரின் வேதனையைக் கண்டு அவர்களுக்கு உதவுவது வழியாகவே நாம் இறைவனின் அன்பில் பங்கெடுக்கிறோம்.”

ஜூலை 04, லம்பேதூசா தீவின் சலினா - ‘அரேனாவிளையாட்டு மைதானத்தில் திருப்பலிச் செய்தி

திரு அவை வாழ்வின் நற்செய்திக்கு உயிரோட்டமான சாட்சியாக இருந்து, ஒவ்வோர் உயிரும் வரவேற்கப்பட்டு மதிக்கப்படும் இல்லமாக விளங்கவேண்டும்.”

ஜூலை 02, ஜூலை மாத இறைவேண்டல் செய்தி