news-details
வத்திக்கான் செய்திகள்
திரு அவையின் அறப்பணி ஆணையத்தின் புதிய செயலாளராக பேரருள்பணி. லூசியோ ரூயிஸ் நியமனம்!

வத்திக்கான் ஊடகப்பணி ஆணையத்தின் செயலாளராகப் பணியாற்றி வந்த அர்ஜென்டினா நாட்டு அருள்பணியாளர் லூசியோ ரூயிஸ், திரு அவையின் அறப் பணி ஆணையத்தின் (Dicastery for the Service of Charity) புதிய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இத்துறை திருத்தந்தையின் தொண்டு மற்றும் மனிதாபிமானத் திட்டங்களுக்குப் பொறுப்பானதாகும். இப்புதிய நியமனம் வரும் செப்டம்பர் 1, 2026 முதல் நடைமுறைக்கு வரும் எனத் திருப்பீடம் அறிவித்தது. இதன் மூலம், மார்ச் மாதம் முதல் இத்துறையின் தலைவராக இருக்கும் ஸ்பெயின் நாட்டின் ஆகஸ்தீனிய ஆயர் லூயிஸ் மரின் டி சான் மார்ட்டினுடன் இணைந்து தந்தை ரூயிஸ் பணியாற்றுவார். இத்துறையின் தற்போதைய அதிகாரியான மாசிமோ ரால்லி, புதிய துணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இலத்தீன் அமெரிக்காவின் தகவல் ஊடகத் துறையில் நீண்ட அனுபவம் வாய்ந்த தந்தை ரூயிஸ், 2015 முதல் வத்திக்கான் ஊடகத்துறையில் முக்கியப் பங்காற்றி வந்துள்ளார். இந்த அறிவிப்பிற்குப் பிறகு சக பணியாளர்களிடம் பேசிய அவர், “இறைவன் என்னை அழைக்கும் இடத்திற்கு மகிழ்ச்சியோடு செல்வேன்  எனக் கூறித் தனது நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.