news-details
உலக செய்திகள்
“உக்ரைனில் நீதியான அமைதிக்கான சூழல் உருவாக்கப்படவேண்டும்”

இலத்தீன் வழிபாட்டுமுறை கத்தோலிக்கத் திரு அவையின் மறுசீரமைப்பின் 35-ஆம் ஆண்டு விழாவில் திருத்தந்தையின் தூதராகப் பங்கேற்க, திருப்பீடத்தின் வெளியுறவுத்துறைச் செயலர் பேராயர் பால் ரிச்சர்ட் காலகர் உக்ரைன் சென்றுள்ளார். உக்ரைன் வான்வெளி மூடப்பட்டுள்ளதால், அவர் போலந்து வழியாகச் சாலை மார்க்கமாக உக்ரைனை அடைந்தார். எல்விவ் நகரில் பேராயர், “போரின் நீதியான முடிவு என்பது ஐரோப்பாவின் இப்பகுதியில் அமைதியை மீட்டெடுப்பதாகும்என்றார். உக்ரைனிய மக்களின் தியாகங்களையும் துயரங்களையும் திருத்தந்தை லியோ மற்றும் திரு அவை மறந்துவிடவில்லை என்றும், நீதியான அமைதிக்கான தகுந்த சூழலை நாம் உருவாக்கவேண்டும் என்ற அவர், போரில் உயிரிழந்தவர்களுக்காகத் தேசிய அளவிலான மௌன அஞ்சலியிலும் பங்கேற்றார். போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனிய கத்தோலிக்கப் பல்கலைக்கழகத்திற்குச் சென்று அங்குள்ள மாணவர்களின் சமூகப் பணிகளையும், மாற்றுத்திறனாளிகளுக்கான ஆதரவுத் திட்டங்களையும் கேட்டறிந்தார்.