அத்தியாயம் - 1
இந்த
அத்தியாயத்தில் திரு அவையின் ஆசிரியம் எப்படி மாறிவரும் காலத்திற்கு ஏற்ப சமுதாயப் படிப்பினையைக் கொடுத்து வந்திருக்கிறது என்று திருத்தந்தை லியோ சுருக்கமாக எடுத்துரைக்கிறார்.
மானிட வரலாற்றினூடே
பயணிக்கும்
திரு
அவை
திரு
அவை உலகத்திலிருந்து தனிமைப்படுத்தப்பட்ட அமைப்பு அல்ல; மாறாக, இது மானிடரின் வாழ்வுப் பிரச்சினைகள், சவால்களோடு இணைந்து பயணித்துக் கொண்டிருக்கிறது. காலத்தின் அறிகுறிகளை விளக்கி உரைப்பதில் தத்துவம், மானிட மற்றும் சமூக அறிவியல் போன்றவைகளின் பங்களிப்பையும், சமூகப் படிப்பினையையும் திறந்த மனத்தோடு பெற்றுக்கொள்கிறது. திரு அவையின் சமுதாயப் படிப்பினை என்பது ஒரு கூட்டுத்துவத் தெளிந்து தேர்தல் ஆகும்.
திருத்தந்தை
6-ஆம் பவுல், வேறுபட்ட வரலாற்றுச் சூழல்களில், எல்லாருக்கும் பொதுவான சமுதாயப் படிப்பினையைக் கொடுக்க இயலாது. எனவே, ஒவ்வொரு கிறித்தவச் சமூகமும் தங்களது நாட்டின் சூழலுக்கு ஏற்ப பொறுப்போடு எதார்த்தங்களை விளக்கிச் சொல்ல அழைக்கிறார்.
திருத்தந்தை
13-ஆம்
லியோ
காலத்திலிருந்து
இன்றுவரை
திரு
அவைப்
படிப்பினையின்
வளர்ச்சி
மனித
வரலாற்றில் இறைவன் செயல்படுவதை உணர்ந்து, மாறிவரும் புதிய சூழல்களுக்கு ஏற்றவாறு நற்செய்தியின் ஒளியில் திருத்தந்தை 13-ஆம் லியோ தொடங்கி இன்றுவரை திரு அவையின் ஆசிரியம் சமுதாயப் படிப்பினைகளைத் தந்து கொண்டிருக்கிறது. இன்று இது செயற்கை நுண்ணறிவு குறித்துப் புதிய போதனையைத் தருகிறது.
ஒவ்வொரு
காலகட்டத்திலும் வெளியிடப்பட்ட திரு அவையின் சமுதாயப் படிப்பினை குறித்து திருத்தந்தை லியோ முக்கியக் கருத்துகளைச் சுருக்கமாக முன்வைக்கிறார்:
திருத்தந்தை
13-ஆம்
லியோ
- Rerum Novarum,
1891 - தொழிலாளர்கள் நிலைமை
19-வது
நூற்றாண்டின் தொழில்புரட்சி பின்புலத்தில் ஆலைத் தொழிலாளர்களின் உரிமைகள், உழைப்பின் மேன்மை மற்றும் முதன்மை, நியாயமான குடும்ப ஊதியம் இவற்றைப் பற்றிப் பேசுகிறது இம்மடல். மூலதனம், இலாபம் இவற்றைக் காட்டிலும், தொழிலாளர்கள் முதன்மையானவர்கள், தனிச் சொத்துக்குச் சமூகக் கடமை உண்டு என்கிறார் 13-ஆம் லியோ.
திருத்தந்தை
11-ஆம்
பயஸ்
- Quadragesimo Anno,
1931 - சமுதாய ஒழுங்கமைப்பு
அன்றைய
பொருளாதார நெருக்கடியின் பின்புலத்தில், ஒருசிலர் கையில் பொருளாதாரம் குவிக்கப்பட்டிருப்பதைச் சாடுகிறார் 11-ஆம் பயஸ். சங்கம் அமைக்க தொழிலாளர்களுக்கு உரிமை உண்டு. கீழ்மட்டத்திலுள்ள குழுக்கள் தாமாகவே செய்யக் கூடுமானவற்றில் மேல்மட்டக் குழுக்கள் தலையிடாதிருத்தல்வேண்டும் (Principle of Subsidiarity). இந்தத்
துணைநிலைக் கொள்கை, பின்வரும் சமுதாயப் படிப்பினைகளுக்கு மூலைக்கல் போல் அமைகிறது.
திருத்தந்தை
12-ஆம்
பயஸ்
- 1942 - வானொலிச் செய்தி
இரண்டாம்
உலகப் போரும், போரின் அழிவுகளை நாடுகள் சரிசெய்யும் வரலாற்றுப் பின்புலத்தில் உலகளாவிய ஒழுங்கமைப்பு நீதி, அமைதி, மனித மாண்பை அடிப்படையாகக் கொண்டதாக அமையவேண்டும். மேலும், மானிடருக்கு அடிப்படையான, மீறத்தகாத உரிமைகள் உள்ளன என்று வானொலிச் செய்தி மூலம் அறிவுறுத்துகிறார் 12-ஆம் பயஸ்.
திருத்தந்தை
23- ஆம்
யோவான்
- Mater et Magistra, 1961 - அன்னையும் ஆசிரியையும்
உலகளாவிய
சமூகப் பிரச்சினைகளில் குறிப்பாக, பொருளாதாரத் துறையில் தனியாருடைய முன்னெடுப்புகளும், அரசு அதிகாரிகளுடைய ஒத்துழைப்பும் தேவை. ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி அங்குள்ள எல்லாக் குடிமக்களின் வளர்ச்சிக்கும் பயன்பட வேண்டுமென்பது சமூக நீதியின் பாற்பட்ட கோரிக்கையாகும் என்கிறார் 23-ஆம் யோவான்.
Pacem in
Terris – 1968 - அவனியில்
அமைதி
இது
முதன்முதலாக ‘நல்லுள்ளம் படைத்த எல்லா மனிதருக்கும்’ என்று
எழுதப்பட்ட சுற்றுமடல் ஆகும். இம்மடல் மனித மாண்பையும், அடிப்படை மானிட உரிமைகளையும் கடமைகளையும் இணைக்கிறது. உலகளாவிய ஒழுங்கமைப்பு என்பது உண்மை, நீதி, அன்பு, சுதந்திரம் - இவற்றின் அடிப்படையில் கட்டமைக்கப்படவேண்டும் என்கிறார் 23-ஆம் யோவான்.
2-ஆம் வத்திக்கான் சங்கம்
- 1962 - 65
‘இன்றைய உலகில் திரு அவை’ என்ற ஏடு திரு அவையானது உலகோடு ஈடுபட்டு, வரலாற்றுச் சூழல் எதார்த்தங்களை விளக்கி உரைக்கிறது. பொருளாதார மற்றும் நிறுவன அமைப்புகள் மனிதரின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்காகவும், அவருடைய பொறுப்புள்ள பங்கேற்பையும் முன்னெடுக்கும்போதுதான் நீதியானதாக அமையும். உலகை இறையாட்சியாக உருமாற்றும் பணியானது கிறித்தவ நம்பிக்கையிலிருந்து பிறக்கும் ஒரு கடமை என்கிறது.
திருத்தந்தை
6 -ஆம்
பவுல்
- Populorum Progressio, 1967 - மக்களின் முன்னேற்றம்
முன்னேற்றம்
என்பது குறையுடைய மனிதத்திலிருந்து, நிறையுடைய மனித நிலைக்குக் கடந்து செல்வதாகும். ஒருங்கிணைந்த முன்னேற்றம் பொருளாதாரத்தையும் கடந்து மனித மாண்புக்கு உகந்த சூழல்களை உருவாக்கவேண்டும் என்கிறார் 6-ஆம் பவுல்.
Octogesima
Adveniens - 1971 -
அரசியல் அதிகாரம், கருத்தமைவு,
சமூக
ஈடுபாடு
இது
தொழில்புரட்சிக்குப் பிந்தைய ஏழ்மையின் புதிய வடிவங்கள், மிக வேகமாக மாறிவரும் பண்பாட்டு மாற்றங்கள், தனிமனிதரையும் குழுமங்களையும் எப்படிப் பாதிக்கின்றன என்று பேசுகிறது. நாம் வாழும் சூழலிலிருந்து வேறுபட்ட சூழலில் நற்செய்தி எழுதப்பட்டு அறிவிக்கப்பட்டாலும், இன்றும் அது மனித ஆளுமை, உறவுகள், அதிகாரம், பொதுநன்மை, பொருளாதார - அரசியல் - பண்பாடு பற்றி ஒரு புதிய பார்வையைத் தருகிறது. திரு அவையின் அரசியல் செயல்பாடு இந்த மடலின் மையக் கருத்து எனலாம்.
திருத்தந்தை
2-ஆம்
யோவான்
பவுல்
- Laborem Exercens,
1981 - மானிட உழைப்பு
பொருளாதார
உலகமயமாதல் பின்புலத்தில் உழைப்பாளி மனிதராக நடத்தப்படுகிறாரா அல்லது உற்பத்தி இயந்திரத்தின் ஒரு பகுதியாக உபயோகப்படுத்தப்படுகிறாரா? சமுதாயப் பிரச்சினையின் மையமே பொருளாதாரச் செயல்பாடுதான். உழைப்பு, முதலீட்டைவிட முதன்மை வாய்ந்தது என்கிறார் 2-ஆம் யோவான் பவுல்.
Sollicitudo
Rei Socialis, 1987 - திரு
அவையின்
சமூக
ஈடுபாடு
ஏழை
மக்களுக்கான பொருளாதார முன்னேற்றச் செயல்பாடுகள் ஏற்கெனவே இருக்கின்ற உலகின் வடக்கு-தெற்கு என்ற இடைவெளியைப் பெரிதாக்கி உள்ளதேயொழிய குறைக்கவில்லை. நலமான முன்னேற்றம் மனிதக் கூட்டொருமையில்தான் அடங்கும் என்கிறது. மேலும், இது பாவ அமைப்புகள் பற்றியும் பேசுகிறது.
Centesimus
Annus, 1991 - சோசலிசமும்
முதலாளித்துவமும்
சோசலிசத்தின்
வீழ்ச்சி, முதலாளித்துவத்தின் தீமைகள், சந்தைப்பொருளாதாரம், குடிமக்களின் பங்கேற்பு, சனநாயகத்தின் எழுச்சி, மானிடக் கூட்டுத் தோழமை, சனநாயகம் - சந்தைப் பொருளாதாரம் பற்றிய விமர்சனம், அரசியல் பிரதிநிதித்துவத்திலிருந்து
பலரை ஒதுக்கி வைத்தல், சுரண்டலின் புதிய வடிவங்கள் பற்றிப் பேசுகிறது.
திருத்தந்தை
16-ஆம்
பெனடிக்ட்
- Caritas in Veritate, 2009 - உண்மையில் அன்பு
திரு
அவையின் சமுதாயப் படிப்பினையில் உண்மையோடு கூடிய அன்பு மையம் பெறுகிறது. மனித முன்னேற்றம், பொருளாதாரம், சமூகநீதி, உலகமயமாக்கல், சுற்றுச்சூழல், தொழில்நுட்பம் ஆகியவை உண்மையில் அன்பையும், பொது நன்மை நோக்கையும் உறுதிப்படுத்தவேண்டும். இன்றைய தேவை புதியதொரு முழுமையான மனிதநலக் கொள்கையாகும் என்கிறார் 16-ஆம் பெனடிக்ட்.
திருத்தந்தை பிரான்சிஸ்
- Laudato Si,
2015 - இறைவா! உமக்குப் புகழ்!
‘மகிழ்வின் நற்செய்தி’
என்ற மறைத்தூது அறிவுரையில், நற்செய்தி அறிவிப்பின் ஓர் இன்றியமையாத கூறு அதன் சமூகப் பார்வை ஆகும் என்கிறது. இதை அடியொற்றி ‘இறைவா! உமக்குப் புகழ்!’ என்ற சுற்றுமடலில், பூமியாகிய நம் பொது இல்லத்தைப் பொறுப்போடு பேணிக்காக்க வேண்டும்; இப்பூமியின் அபயக் குரலுக்கும், ஏழையரின் கூக்குரலுக்கும் செவிமடுத்து, சுற்றுச்சூழல் நலம் பேணும் மனமாற்றம் பெற்றிடவேண்டும் என்கிறது. இத்தோடு,
படைப்பு அனைத்தும் எல்லாருக்கும் பொதுவானது என்பதையும் நம் உலகில் ஒரு பண்பாட்டுப் புரட்சி நிகழவேண்டும் என்பதையும் மனத்தில்கொள்ளவேண்டும் என்கிறார் பிரான்சிஸ்.
Fratelli
Tutti, 2020 - அனைவரும்
உடன்
பிறந்தோர்
சமூக
அமைப்பின் சீரழிவு, போர் மேகச்சூழல், ‘கோவிட் 19’ பின்புலத்தில் ‘அனைவரும் உடன் பிறந்தோரே’
என்ற சுற்றுமடல், மனிதகுலம் முழுவதும் ஒரே குடும்பம் என்கிறது. இனம், மொழி, நாடு, பொருளாதார வேறுபாடுகளைத் தாண்டி, உலகளாவிய சகோதரத்துவமும், சமூக நட்பும் உருவாகவேண்டும் என்கிறார் பிரான்சிஸ். இதை எடுத்துக்காட்ட நல்ல சமாரியரின் உவமையை விரித்துரைக்கிறார். ஒவ்வொரு மனிதரின் மாண்பும் மதிக்கப்படவேண்டும். அன்பு என்பது தனிமனித உறவுகளைத் தாண்டி, சமூக - அரசியல் - பொருளாதார தளங்களில் வெளிப்படவேண்டும், சந்திப்பு பண்பாடு வளர்த்தெடுக்கப்படவேண்டும் என்கிறார் பிரான்சிஸ்.
Dilexit Nos, 2024 - அவர் நம்மை
அன்பு
கூர்ந்தார்
இயேசுவின்
திரு இதயம் மனிதகுலத்தின்மீது கடவுள் கொண்டுள்ள எல்லையற்ற அன்பின் அடையாளம். இந்த அன்பை அனுபவிப்பது மனமாற்றத்திற்கும், பிறரை அன்போடு அணுகுவதற்கும் வழிவகுக்கிறது. பிறரை, குறிப்பாக, காயமடைந்த உலகிலுள்ள ஏழையர், புறக்கணிக்கப்பட்டோர், துன்புறுவோரை அன்போடு அணுகவும் அழைக்கிறார் பிரான்சிஸ்.
இவ்வாறு
மாறிவரும் வரலாற்று எதார்த்தங்களை நம்பிக்கையின் ஒளியில் ஒவ்வொரு திருத்தந்தையும், திரு அவைப் படிப்பினையும் விளக்கிச் சொல்கின்றனர். ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, இவை மனித மாண்பு, உழைப்பின் மேன்மை, படைப்பு அனைவருக்கும் பொதுவானது, கூட்டுத் தோழமை, துணைநிலைக் கொள்கை, படைப்பைப் பேணுதல், அமைதி, சகோதரத்துவம் போன்ற விழுமியங்களை வலியுறுத்துகின்றன.