news-details
உலக செய்திகள்
“போர்க்காற்று, நம்பிக்கையை அணைத்துவிடக்கூடாது”- திருத்தந்தை லியோ

உலகில் வீசும் போர்க்காற்று அமைதிக்கான நம்பிக்கையை அணைத்துவிடக்கூடாது. நாடுகள் மீண்டும் தூதரகப் பேச்சுவார்த்தைக்குத் திரும்பவேண்டும்என்று திருத்தந்தை லியோ வேண்டுகோள் விடுத்துள்ளார். மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் உக்ரைனில் நிலவி வரும் தீவிரப் போர்ச்சூழல் குறித்துத் தனது கவலையைப் பகிர்ந்துகொண்ட திருத்தந்தை, “போர் வன்முறையையும் மரணத்தையும் விதைத்து, அப்பாவி மக்களைப் பாதிக்கிறது. இந்தச் சூழலிலும் நாம் நம்பிக்கையை இழக்கக்கூடாது. நாடுகள் தங்களுக்குள் இருக்கும் மோதல்களைப் பேச்சுவார்த்தை மற்றும் நிர்வாக வழிகள் மூலமே தீர்க்க வேண்டும்; அதுவே நிலையான அமைதிக்கு வழிவகுக்கும்என்றார். ‘கடல் ஞாயிறுதினத்தை முன்னிட்டு இராணுவப் பதற்றங்களால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள மாலுமிகள், மீனவர்கள் மற்றும் துறைமுகத் தொழிலாளர்களுக்குத் தனது ஆதரவையும் செபங்களையும் தெரிவித்தார். நிறைவாக, போலந்து நாட்டின் ஜாஸ்னா கோரா அன்னை மரியா திருத்தலத்திற்குப் புனிதப் பயணம் மேற்கொண்டுள்ள பல்லாயிரக்கணக்கான இறைமக்களுக்குத் தனது ஆசிரையும் வாழ்த்துகளையும் திருத்தந்தை வழங்கினார்.