கானாவூர் திருமண நிகழ்வில் மரியாவின் வேண்டுகோளானது, அவரது மகனுடைய மீட்புப் பணியின் தொடக்கத்தில் அவர் எவ்வாறெல்லாம் ஒத்துழைக்கின்றார் என்பதற்கான மாதிரியாகும். மேலும், அந்நிகழ்வானது இயேசுவில் நம்பிக்கை கொள்வதில் அவரே முதன்மையானவர் என்பதையும் காட்டுகின்றது.
1. இயேசுவின்
பொதுவாழ்வில் மரியாவின் உடனிருப்பை விவரிக்கும் இரண்டாம் வத்திக்கான் சங்கமானது கானாவூரில் இயேசுவின் முதல் புதுமையின்போது அவர் எங்ஙனம் தன்னையே தனது மகனின் பணியில் ஈடுபடுத்திக்கொண்டார் என்பதையும் நினைவுகூர்கின்றது: “கலிலேயா நாட்டின் கானாவில் திருமண விருந்தில் மெசியாவாகிய இயேசுவிடம் இரக்கத்தோடு பரிந்துரைத்து அவர் தம் முதல் அருளடையாளத்தைச் செய்யுமாறு (யோவா 2:1-11) தூண்டுகின்றார்” (இறைத்திட்டத்தில்
திருச்சபை, எண். 58). நற்செய்தியாளர் யோவானைப் பின்பற்றி, ஒரு தாய் தன் வார்த்தைகளால் தமது மகனை அவரது ‘முதல் அடையாளத்தை’ செய்யும்படி
வற்புறுத்தும்போது, அவரது விவேகமான மற்றும் பயனுள்ள பங்கை இரண்டாம் வத்திக்கான் திருச்சங்கமும் சுட்டிக்காட்டுகிறது. அவரது செல்வாக்கு விவேகமானதாகவும் தாய்மையுள்ளதாகவும் இருந்தாலும், அவரது பிரசன்னம் தீர்க்கமானதாக அமைகிறது.
மரியா
தன் வார்த்தைகளால்
தமது மகனை அவரது முதல் அருளடையாளத்தைச் செய்யும்படி வலியுறுத்தினார் என்பதை அடிக்கோடிட்டுக் காட்டி, நற்செய்தியாளர் யோவானைத் தொடர்ந்து இரண்டாம் வத்திக்கான் திருச்சங்கமும் மரியாவினுடைய அறிவுகூர்ந்த மற்றும் பயனுள்ள பங்கைச் சுட்டிக்காட்டுகின்றது. மரியாவினுடைய செல்வாக்கு விவேகம் மற்றும் தாயன்பு சார்ந்தது என்றாலும், அவருடைய உடனிருப்பானது தீர்க்கமானது என்பதையே இது நமக்கு
உணர்த்துகின்றது.
தாயன்பால் என்ன
செய்ய
முடியும்
என்பதை
மரியா
காட்டுகின்றார்
யூதச்
சமூகத்தில் பெண்களின் தாழ்ந்த நிலையைக் கருத்தில் கொண்டால், புனித கன்னி மரியாவின் இந்த முயற்சி இன்னும் வியப்பளிக்கிறது. உண்மையில், கானாவூர் திருமண நிகழ்வில் இயேசு பெண் ஆளுமைகளின் மாண்பு மற்றும் அவர்களுடைய பங்களிப்பை மட்டும் அங்கீகரிக்கவில்லை; தமது தாயின் பரிந்துரையை ஏற்பதன் வழியாக அவர் தமது மீட்புப் பணியில் அவரும் பங்கேற்பதற்கானதொரு வாய்ப்பைத் தருகிறார். ‘பெண்’
(யோவா 2:4) என்று இயேசு மரியாவை அழைக்கும் அடைமொழியானது, அவருடைய நோக்கத்திற்கு முரணானது அல்ல; உண்மையில் ‘பெண்’ என்னும் இவ்வார்த்தையில் எதிர்மறையான அர்த்தங்கள் எதுவும் இல்லை. சிலுவையின் அடியில் அவருடைய தாய் மரியா நிற்கும்போதும் அவரை அழைப்பதற்கு இதே சொல்லாடலைத்தான் அவர் பயன்படுத்துகின்றார் (யோவா 19:26). சில திருவிவிலிய விளக்கவுரைகளின்படி ‘பெண்’ என்று மரியாவை அழைக்கும் சொல்லாடலானது, அவரைப் புதிய ஏவாளாக, அதாவது அனைத்து நம்பிக்கையாளர்களின் தாயாக முன்வைக்கிறது.
நாம்
மேற்குறிப்பிட்ட இரண்டாம் வத்திக்கான் திருச்சங்க ஏட்டில் திருச்சங்கமானது ‘இரக்கத்தினால் உந்தப்பட்டு’ என்னும்
சொற்றொடரைப் பயன்படுத்துகின்றது. இதிலிருந்து அவ்விடத்தில் திராட்சை இரசம் தீர்ந்து போனதைக் கேள்வியுற்று, மரியா தனது இரக்கமுள்ள இதயத்தால் தூண்டப்பட்டார் என்பதை நாம் புரிந்துகொள்ள திருச்சங்கம் நமக்கு உதவுகின்றது. திராட்சை இரசம் தீர்ந்து போனதால் புதுமணத் தம்பதியினருக்கும் விருந்தினர்களுக்கும் ஏற்படவிருந்த ஏமாற்றத்தை உணர்ந்த புனித கன்னி மரியா, இயேசுவிடம் அவரது மீட்பளிக்கும் வல்லமையைக் கொண்டு இக்குறையைத் தீர்க்குமாறு இரக்கத்துடன் பரிந்துரைக்கின்றார்.
சிலருக்கு
மரியாவின் வேண்டுகோள் வரம்பு மீறியதாகத் தோன்றலாம்; ஏனெனில், அது மீட்பரது புதுமைகளின் தொடக்கத்தை ஒரு தாய் பக்தி செயலுக்காகப் பின்னுக்குத் தள்ளுகிறது. இயேசுவே இந்தச் சிக்கலைக் கையாண்டார்; தம் தாயின் வேண்டுகோளுக்குச் சம்மதித்ததன் மூலம், மனித எதிர்பார்ப்புகளுக்குப் பதிலளிப்பதில் ஆண்டவரின் அளவற்ற அருளை அவர் வெளிப்படுத்தினார். மேலும், ஒரு தாயின் அன்பால் என்ன செய்ய முடியும் என்பதையும் விளக்கினார்.
2. இங்கு
யோவானின் நற்செய்தியிலிருந்து திருச்சங்கம் எடுத்துக் கையாண்டுள்ள ‘அவரது புதுமைகளின் தொடக்கம்’
என்ற வார்த்தைகள் நம் கவனத்தை ஈர்க்கின்றன. இதில் பயன்படுத்தப்படும் ‘தொடக்கத்தில்’ என்ற
கிரேக்க வார்த்தையான ‘arche’ என்பதை யோவான்
தனது நற்செய்தியின் முன்னுரையில் (Prologue) பயன்படுத்துகிறார்:
“தொடக்கத்தில் வாக்கு இருந்தது”
(யோவா 1:1). இந்தக் குறிப்பிடத்தக்க ஒற்றுமையானது, கிறிஸ்துவின் எல்லையற்ற மாட்சிமையின் மூலத்திற்கும், அவரது பூவுலகப்
பணியில் அதே மாட்சிமையின் முதல் வெளிப்பாட்டிற்கும் இடையே ஓர் இணையைச் சுட்டிக்காட்டுகிறது.
தமது
முதல் புதுமையில் மரியாவின் முன் முயற்சியை வலியுறுத்துவதன் மூலமும், பின்னர் கல்வாரியில் சிலுவையின் அடியில் அவர் இருந்ததை நினைவுகூர்வதன் மூலமும், கிறிஸ்துவின் பணி முழுவதிலும் மரியாவின் ஒத்துழைப்பு எவ்வாறு விரிவடைந்துள்ளது என்பதைப் புரிந்துகொள்ள நற்செய்தியாளர் நமக்கு உதவுகிறார். கன்னி மரியாவின் வேண்டுகோளானது, தெய்வீகமான மீட்புத் திட்டத்திற்குள் வைக்கப்பட்டுள்ளது.
இயேசு
செய்த முதல் அடையாளத்தில், திரு அவைத் தந்தையர் ஒரு முக்கியமான குறியீட்டுப் பரிமாணத்தைக் கண்டனர்; தண்ணீர் திராட்சை இரசமாக மாறுவதை, பழைய உடன்படிக்கையிலிருந்து புதிய உடன்படிக்கைக்கு மாறுவதற்கான அறிவிப்பாக அவர்கள் கண்டனர். கானாவூர் திருமண விருந்தில், யூதர்களின் தூய்மையாக்கலுக்காகவும், சட்டக் கட்டளைகளை நிறைவேற்றுவதற்காகவும் (மத் 7:1-15) ஒதுக்கப்பட்டிருந்த குடங்களில் இருந்த தண்ணீரே, திருமண விருந்தின் புதிய திராட்சை இரசமாக மாறுகிறது; அது கடவுளுக்கும், மனிதகுலத்திற்கும் இடையிலான உறுதியான ஒன்றிப்பின் சின்னமாகும்.
3. இயேசு
தமது முதல் அற்புதத்திற்காகத் தேர்ந்தெடுத்த திருமண விருந்தின் சூழலானது, பழைய ஏற்பாட்டில் கடவுளுக்கும், அவருடைய மக்களுக்கும் இடையேயான உடன்படிக்கையைக் குறிக்கவும் (ஓசே 2:21; எரே 2: 1-8; திபா 44, இன்னும் பல), புதிய ஏற்பாட்டில் கிறிஸ்துவிற்கும் திரு அவைக்கும் இடையேயான ஒன்றிப்பைக் குறிக்கவும் (யோவா 3: 28-30; எபே 5: 25-32; திவெ 21:1-2, இன்னும் பல) அடிக்கடிப் பயன்படுத்தப்படும் திருமணக் குறியீட்டைக் குறிக்கிறது. கானாவூரில் இயேசுவின் உடனிருப்பு, திருமணத்திற்கான கடவுளின் மீட்புத்திட்டத்தின் ஓர் அடையாளமாகவும் விளங்குகிறது. இந்தக் கண்ணோட்டத்தில், திராட்சை இரசம் இல்லாததை எதிர்பாராத விதமாகத் திருமண உறவுகளை அடிக்கடி அச்சுறுத்தும் அன்பின் பற்றாக்குறையின் ஒரு குறிப்பாகப் புரிந்துகொள்ளலாம். கடவுளை அடிப்படையாகக் கொண்ட அன்பினால் மட்டுமே துரோகம், தவறான புரிதல் மற்றும் பிரிவினை ஆகிய ஆபத்துகளிலிருந்து விடுவிக்கப்படக்கூடிய அனைத்துத் திருமணமான தம்பதியினருக்காகவும் தலையிடுமாறு மரியா இயேசுவிடம் வேண்டுகிறார். திருவருளடையாளத்தின் அருள், தம்பதியினருக்கு அன்பின் இந்த மேலான வலிமையை வழங்குகிறது; இது வாழ்வின் கடினமான சூழ்நிலைகளிலும்கூட, நம்பிக்கையில் அவர்கள் கொண்டுள்ள அர்ப்பணிப்பை வலுப்படுத்த வல்லது.
திரு அவையின்
நம்பிக்கை
பயணத்தை
மரியா
தொடங்கி
வைக்கின்றார்
கிறித்தவ
எழுத்தாளர்களின் விளக்கத்தின்படி, கானாவூரில் நடந்த அற்புதமானது ஆழமான நற்கருணைப் பொருளையும் கொண்டுள்ளது. யூதர்களின் பாஸ்கா பண்டிகைக் காலத்திற்கு அருகில் இந்த அற்புதத்தைச் செய்வதன் மூலம் (யோவா 2:13) இயேசு அப்பங்களைப் பெருகச் செய்ததைப் போலவே (யோவா 6:4) உண்மையான பாஸ்கா விருந்தான நற்கருணைக்கு ஏற்பாடு செய்யவேண்டியதற்கான தமது நோக்கத்தை இங்கு வெளிப்படுத்துகின்றார். கானாவூர் திருமணத்தில் அவரது விருப்பம், புதிய உடன்படிக்கையின் இரத்தத்தைக் குறிக்கும் திராட்சை இரசத்தின் பிரசன்னத்தாலும், ஒரு விருந்தின் சூழலாலும் மேலும் வலியுறுத்தப்படுவதாகத் தெரிகிறது.
இவ்வாறு,
திருமணக் கொண்டாட்டத்தில் இயேசுவின் பிரசன்னத்திற்குக் காரணமாக இருந்த பிறகு, உயிர்த்தெழுந்த தம் மகன் சீடர்களிடையே பிரசன்னமாக இருப்பதன் உன்னத அடையாளமான நற்கருணையை முன்னறிவிக்கும் புதிய திராட்சை இரசத்தின் அற்புதத்தை மரியா பெறுகிறார்.
4. தமது
தெய்வீக மகன்மீது ஆண்டவரின் அன்னை கொண்டிருந்த அசைக்க முடியாத நம்பிக்கையால் சாத்தியமான இயேசுவின் முதல் அற்புதத்தின் விவரிப்பின் முடிவில், நற்செய்தியாளர் யோவான் இவ்வாறு முடிக்கிறார்: “அவருடைய சீடர்களும் அவரிடம் நம்பிக்கை கொண்டார்கள்” (யோவா
2:11). இவ்வாறு, கானாவூர் திருமண நிகழ்வில் அவருடைய சீடர்கள் மற்றும் ஊழியர்களின் கவனத்தைக் கிறிஸ்துவின் பக்கம் திருப்பி, மரியா திரு அவையின் நம்பிக்கை பயணத்தைத் தொடங்கி வைக்கின்றார்.
மரியாவின்
தளராத பரிந்துரையானது, சில சமயங்களில் ‘இறைவனின் மௌனம்’ என்ற அனுபவத்தை எதிர்கொள்பவர்களையும் ஊக்குவிக்கிறது. எல்லா நம்பிக்கைகளுக்கும் அப்பாற்பட்டு நம்பிக்கை வைக்குமாறும், எப்போதும் ஆண்டவரின் நன்மையில் நம்பிக்கை வைக்குமாறும் அவர்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
மூலம்:
John Paul II,
Mary is active in her son’s mission, in «L’Osservatore Romano», Weekly Edition
in English, 12 March 1997, p. 7.