news-details
வத்திக்கான் செய்திகள்
இராஞ்சி உயர்மறைமாவட்டத்திற்கு புதிய துணை ஆயர் நியமனம்!

இராஞ்சி உயர்மறைமாவட்டத்தின் முதன்மை அருள்பணியாளரும், தூய மரியன்னை பேராலயத்தின் பங்குத்தந்தையுமான அருள்பணி. ஆனந்த் டேவிட் சல்சோ அவர்களை இராஞ்சி உயர் மறைமாவட்டத்தின் துணை ஆயராகத் திருத்தந்தை லியோ நியமித்துள்ளார்.

1975-இல் மாந்தூரில் பிறந்த இவர், இராஞ்சி மற்றும் கொல்கத்தாவில் பள்ளி, கல்லூரி மற்றும் குருத்துவக் கல்வியை முடித்தார். 2006, மே 15 அன்று அருள்பணியாளராகத் திருநிலைப்படுத்தப்பட்டார். மறைந்த கர்தினால் டோப்போவின் தனிச் செயலாளர். மங்களூரில் மருத்துவமனை நிர்வாகத்தில் முதுகலைப் படிப்பு, சி.பி.சி.. பொதுச்செயலாளரின் செயலர் எனப் பல முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளார். மேலும், மக்கள்தொடர்பு அலுவலராகவும், இராஞ்சி பேராயர் இல்லத்தின் நிர்வாகியாகவும், சமூக மேம்பாட்டு மையத்தின் இயக்குநராகவும், குருமாணவர் இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார். புதிய ஆயரின் வழிகாட்டுதலில் இராஞ்சி உயர்மறைமாவட்டம் ஆன்மிக வளர்ச்சியை எட்டும் என வாழ்த்துவோம்.