news-details
திருத்தந்தையின் முழக்கம்
திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள் (26.07.2026)

அனைத்துலகச் சமூகம் ஒருபோதும் நம்பிக்கையை இழக்கக் கூடாது; மிகவும் சவாலான சூழல்களிலும், இறைமக்கள் நம்பிக்கையின் ஒளியை அணையவிடாமல் காத்து வாழவேண்டும்.”

 ஜூலை 14,   மூவேளைச் செப உரை

திரு அவை பாபேல் கோபுரத்தைக் கட்டும் கட்டடக் கலைஞர்களாக இல்லாமல், ஒன்றிப்பை உருவாக்குபவர்களாக உருவாக வேண்டும்.”

ஜூலை 13, ஆசிய ஆயர் பேரவை கூட்டமைப்பின் (FABC) 12-வது நிறைவுச் செய்தி

இறைவார்த்தையைத் திறந்த மனத்துடன் ஏற்றுக்கொள்ளும்போது, தூய ஆவியின் கனிகள் நம் வாழ்வில் வளர்ந்து, உலகையும் மாற்றும் வல்லமையுடையவையாக அமையும் 

ஜூலை 12, நண்பகல் மூவேளை இறைவேண்டல் உரை

இறைவார்த்தை, தினசரி செபம், ஒப்புரவு அருளடையாளங்கள் மற்றும் நற்கருணை ஆகியவற்றின் வழியாகக் கிறிஸ்துவுடன் ஆழமான உறவை வளர்த்துக்கொள்ளவேண்டும்.”

ஜூலை 10,  ஈராக்கில் நடைபெற்ற இளைஞர் சந்திப்புக் காணொளிச் செய்தி

செயற்கை நுண்ணறிவு (AI) எதிர்காலத்தில் மனிதகுலத்தின் மாண்பையும் பொதுநலனையும் பாதுகாக்கும் வகையில், புதிய பாதைகளைத் தேட அனைவரும் ஒன்றிணைந்து செயல்ப        டவேண்டும்.”

ஜூலை 9,    ஜெனீவாவில் நடைபெறும் AI for Good Global Summitமாநாட்டை முன்னிட்டு அனுப்பிய செய்தி