news-details
வத்திக்கான் செய்திகள்
திருப்பலியில் பொதுநிலையினர் மறையுரை ஆற்ற முடியாது!

கத்தோலிக்கத் திருப்பலியில் பொதுநிலையினர் மறையுரை ஆற்றுவதற்கு அனுமதி கோரி ஜெர்மனி ஆயர் பேரவை அனுப்பிய விண்ணப்பத்தை வத்திக்கான் நிராகரித்துள்ளது. இது தொடர்பாக வத்திக்கானின் வழிபாட்டு முறை மற்றும் அருளடையாளங்களுக்கான ஒழுங்குமுறை பேராயம், ஜெர்மனி ஆயர் பேரவையின் தலைவர் ஆயர் ஹைனர் வில்மருக்குக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. விதிவிலக்கான சூழ்நிலைகளில் கூட, திருப்பலியின்போது தகுதியான பொதுநிலையினர் மறையுரை ஆற்ற அனுமதிக்கும்படி ஜெர்மனி ஆயர்கள் கோரியிருந்தனர்.

ஆயர்களின் அக்கறையைப் பாராட்டிய வத்திக்கான், திருப்பலியில் மறையுரை ஆற்றுவது என்பது வெறும் ஒழுங்குமுறை விதி அல்ல; அது வழிபாட்டு முறையின் இயல்போடு இணைந்தது என்று விளக்கியுள்ளது. குருத்துவ அருளடையாளம்  வழியே ஆயர்கள், குருக்கள் மற்றும் திருத்தொண்டர்களுக்கு மட்டுமே இந்தப் போதிக்கும் பணி (Munus Docendi) ஒப்படைக்கப்பட்டுள் ளது. எனினும், திரு அவை சட்டங்களின்படி திருப்பலிக்கு வெளியேயும், பிற வழிபாட்டு நிகழ்வுகளிலும் பொதுநிலையினர் நற்செய்தி அறிவிப்பதற்கும் போதிப்பதற்கும் ஏற்கெனவே பல வழிமுறைகள் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வத்திக்கான் சுட்டிக்காட்டியுள்ளது.