கருவறையைக் கல்லறையாக்கிய தாய்மார்களுக்கு இக்கவிதை ஒரு சமர்ப்பணம்!
கருவாய்
உருகொடுத்தவளே!
என்னைக்
கழுவித் தூக்கி எறியத் துணிந்தாள்,
பலரின்
வற்புறுத்தலால் நீயும் என்னை
வேண்டாம்
என்றாயே ஏன்?
என்
சின்ன இதயம் எப்போது
தன்
துடிப்பை நிறுத்தும்
எனத்
துடித்தாய் ஏன்?
என்னை
அனுப்பியவரிடம்
நான்
கூக்குரலிட்டேன்.
யாரோ
செய்த தவறுக்கு
எனக்கு
ஏன் இந்த நிலைமை?
கண்மை
இட்டு அலங்கரிக்க
வேண்டிய
என்னை
நீயும்
அலங்கரித்தாய் சவப்பெட்டியில்!
காரணமின்றிக்
கலைந்து போனேன்
உருவில்லாமல்...!
மீண்டும்
ஜென்மம் என்று ஒன்று இருந்தால்
என்னிடம்
வா தாயே,
உன்னைப்
போல் இல்லாமல்!
என்
கருவறையில் உனக்கு உருகொடுத்து
இவ்வுலகிற்கு
உன்னைப்
பரிசாய்
தருவேன்!