news-details
வத்திக்கான் செய்திகள்
“தொழில்நுட்பம் மனித நட்புறவுக்கு உதவவேண்டுமே தவிர, அதை ஆக்கிரமிக்கக்கூடாது” - திருத்தந்தை

வத்திக்கான் ஊழியர்களின் குழந்தைகளுக்காக நடத்தப்படும் கோடைக்கால முகாமிற்குத் திருத்தந்தை லியோ நேரில் சென்று குழந்தைகளுடன் கலந்துரையாடினார். அப்போது தொழில்நுட்பச் சாதனங்களைப் பொறுப்புடன் கையாள அறிவுறுத்தினார். வகுப்பறைகளிலும் இல்லங்களிலும் திரைகளுக்கு அடிமையாவது குறித்த கேள்விக்குப் பதிலளித்த திருத்தந்தை, “தொழில்நுட்பம் மிகவும் பயனுள்ளதுதான்; ஆனால், அது உண்மையான மனிதத் தொடர்புகளுக்கு மாற்றாகக்கூடாது. நாம் ஒன்றாக இருக்கும்போது ஒவ்வொரு நொடியும் கையில் திறன்பேசிகள் இருக்கவேண்டிய அவசியமில்லை. குடும்பமாக அமர்ந்திருக்கும்போது, அவரவர் அலைப்பேசிகளைப் பார்த்துக் கொண்டிருக்காமல், ஒருவரோடு ஒருவர் பேசி மகிழப் பழக வேண்டும்என்றார். எண்மத் தொழில்நுட்பச் (டிஜிட்டல்) செயலிகள் நம்மைச் சார்ந்திருக்க வைக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளதை எச்சரித்த திருத்தந்தை, சுயசிந்தனையின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்: “எனது பயணங்களின்போது பலமுறை ஜிபிஎஸ் (GPS) தவறான வழியில் கூட்டிச் சென்றுள்ளது. எனவே, தொழில்நுட்பத்தை மட்டுமே நம்பியிருக்காமல், நமது வாழ்வின் இலக்கை நோக்கிச் செல்ல சொந்தமாகச் சிந்திக்கும் திறனையும் பகுத்தறிவையும் நாம் வளர்த்துக் கொள்ளவேண்டும். மூளை செயல்படும்போது நமக்குத் தொலைப்பேசி தேவையில்லைஎன்றும் திருத்தந்தை குறிப்பிட்டார்.