news-details
உலக செய்திகள்
“நான் அரசியல்வாதி அல்ல; நற்செய்தியைப் பேசுபவன்”- அமெரிக்க அதிபருக்குத் திருத்தந்தை பதிலடி!

ஆப்பிரிக்க நாடுகளுக்கான தனது திருத்தூதுப் பயணத்தின் ஒரு பகுதியாக அல்ஜீரியா நாட்டிற்குச் சென்று கொண்டிருந்தபோது, விமானத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திருத்தந்தை லியோ, உலக அரசியல் மற்றும் அமைதி குறித்துத் தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தினார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அண்மையில் தனக்கு எதிராக வெளியிட்ட கருத்துகள் குறித்துச் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த திருத்தந்தை, “நான் ஓர் அரசியல்வாதி அல்ல; அவருடன் விவாதத்தில் ஈடுபட நான் விரும்பவில்லை. போருக்கு எதிராக வலுவாகப் பேசுவதும், அமைதி, உரையாடல் மற்றும் நாடுகளுக்கிடையிலான நல்லுறவை மேம்படுத்துவதுமே எனது பணிஎன்று கூறினார்.

அமெரிக்க அதிபர் நிர்வாகத்தைக் கண்டு தனக்கு அச்சமில்லை என்று குறிப்பிட்ட திருத்தந்தை, திரு அவை எப்போதுமே அமைதியை ஏற்படுத்துபவர்களின் பக்கமே நிற்கும் என்றார்.