news-details
உலக செய்திகள்
“உக்ரைன் மற்றும் மத்திய கிழக்கில் அமைதி நிலவட்டும்” - திருத்தந்தை லியோ

ஆப்பிரிக்கத் திருத்தூதுப் பயணத்தின் ஒரு பகுதியாக அங்கோலாவிற்கு வருகை தந்துள்ள திருத்தந்தை லியோ, உக்ரைன் மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் போர்ச்சூழலை முடிவுக்குக் கொண்டுவர உலக நாடுகளுக்கு அறைகூவல் விடுத்துள்ளார். அங்கோலாவின் லுவாண்டா நகரில் நடைபெற்ற திருப்பலிக்குப் பிறகுரெஜினா செலி (Regina Coeli) உரையாற்றிய அவர், உலக நாடுகள் அமைதிக்கான முயற்சிகளை முன்னெடுக்கவேண்டுமென வலியுறுத்தியுள்ளார். உக்ரைன் மீது அண்மையில் தீவிரப்படுத்தப்பட்டுள்ள தாக்குதல்கள் குறித்து ஆழ்ந்த கவலை தெரிவித்தத் திருத்தந்தை, “ஆயுதங்கள் மௌனமாகட்டும், பேச்சு வார்த்தைக்கான பாதைகள் திறக்கப்படட்டும்என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். இஸ்ரேல், லெபனான் இடையே எட்டப்பட்டுள்ள 10 நாள் போர்நிறுத்த ஒப்பந்தத்தைநம்பிக்கையின் அடையாளம்என்று அவர் வர்ணித்துள்ளார். “துன்பப்படுபவர்களின் அழுகுரலை நாம் அலட்சியப்படுத்தக்கூடாது; நம்பிக்கையின் ஒளி அனைவரின் வாழ்விலும் வீசவேண்டும்என்றும் திருத்தந்தை குறிப்பிட்டுள்ளார்.