“மரியா எலிசபெத்தைச் சந்தித்தது உண்மையில் இயேசுவின் நற்செய்தி அறிவிப்புப் பணிக்கான தொடக்கமாகும். அவரது தாய்மையின் தொடக்கத்திலிருந்தே மகனின் மீட்புப் பணியில் ஒத்துழைப்பதில் கிறிஸ்துவின் ஒளி மற்றும் மகிழ்ச்சியை எங்கும் வாழ்கின்ற மக்களுக்கும் கொண்டு செல்பவர்களுக்கும் ஒரு முன்மாதிரியாகின்றார்.”
1. மரியா
எலிசபெத்தைச் சந்திக்கின்ற நிகழ்வில் கிறிஸ்து பிறப்பின் அருளானது மரியாவை நிரப்பிய பிறகு, எலிசபெத்தின் இல்லத்தையும் நிரப்பியது என்று காட்டுகின்றது. அவரது தாயின் கருவில் சுமக்கப்பட்ட மனுக்குல மீட்பர், உலகிற்கு அவர் வந்த தன் தொடக்கத்திலிருந்தே அவரை வெளிப்படுத்தி தூய ஆவியைப் பொழிகின்றார்.
மரியா
யூதேயாவிற்குப் புறப்பட்டுச் சென்றதை விவரிக்கையில் நற்செய்தியாளர் ‘எழுதல்’ அல்லது ‘புறப்படுதல்’ என்று
பொருள்படுகின்ற ‘anístemi’ என்ற கிரேக்க வினைச்சொல்லைப் பயன்படுத்துகிறார். இந்த வினைச்சொல்லானது இயேசுவின் உயிர்ப்பை (மாற் 8:31; 9:9,31; லூக் 24:7,46) அல்லது ஆன்மிக முயற்சியைக் குறிக்கின்ற உடல்சார் செயல்களைக் (லூக் 5:27-28; 15:18,20) குறிப்பதற்கும், நற்செய்திகளில் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது என்பதைக் கருத்தில் கொண்டு நற்செய்தியாளர் லூக்கா, தூய ஆவியாரின் உந்துதலின் கீழ் உலகத்திற்கு அதன் மீட்பரைக் கொடுப்பதற்காக மரியாவைச் செயல்புரியத் தூண்டிய உறுதியானதோர் ஆர்வத்தைக் கோடிட்டுக்காட்ட விரும்பி இந்தச் சொற்றொடரைப் பயன்படுத்துகின்றார் என்பதை நாம் யூகிக்க முடியும்.
மரியா எலிசபெத்தைச்
சந்தித்தது
மகிழ்ச்சிமிக்கதொரு
மீட்பின்
நிகழ்வாகும்
2. லூக்கா
நற்செய்தியானது மரியா புறப்பட்டு யூதேய மலைநாட்டிலுள்ள ஓர் ஊருக்கு ‘விரைந்து சென்றார்’
என்று கூறுகின்றது (லூக் 1:39). லூக்கா நற்செய்தியின் சூழலில் ‘மலைநாட்டிலுள்ள’ என்ற
குறிப்பும் கூட, இது எசாயா புத்தகத்தில் குறிப்பிடப்பட்ட நற்செய்திகளின் தூதுவரை நினைவிற்குக் கொண்டுவர
அழைப்பதால், ஒரு சாதாரண இட அமைப்பு விவரக்
குறிப்பு (topogrphical indication) என்பதையும் தாண்டி, அதற்கு மேலானதொன்றாகத் தோன்றுகின்றது: “நற்செய்தியை அறிவிக்கவும், நல் வாழ்வைப் பலப்படுத்தவும், நலம்தரும் செய்தியை உரைக்கவும், விடுதலையைப் பறைசாற்றவும் சீயோனை நோக்கி, ‘உன் கடவுள் அரசாள்கின்றார்’ என்று
கூறவும் வருவோரின் பாதங்கள் மலைகள் மேல் எத்துணை அழகாய் இருக்கின்றன” (எசா
52:7).
நற்செய்தி
அறிவிப்பில் இந்த இறைவாக்கு ஏடானது நிறைவேறியதைக் கண்டுகொண்ட புனித பவுலடியாரைப் போன்று, புனித லூக்காவும் மரியாவின் இறைமகனது மறைப்பயணத்தைத் தொடங்கி வைத்து நற்செய்தியைப் பரப்புகின்ற முதல் நற்செய்தியாளராக மரியாவைக் காண்பதற்கு நம்மை அழைப்பதாகத் தோன்றுகின்றது.
இறுதியாக,
கன்னி மரியாவின் பயணத்தின் திசையானது குறிப்பிடத்தக்க ஒன்றாக இருக்கிறது. அதாவது, இயேசுவின் மறைப்பணியைப் போன்றே இதுவும் கலிலேயாவிலிருந்து யூதேயாவை நோக்கியதொரு பயணமாக இருக்கின்றது (ஒப்பிடுக. 9:51).
உண்மையில்,
மரியா எலிசபெத்தைச் சந்தித்தது இயேசுவின் பணிக்கானதொரு தொடக்கமாக இருந்தது. அவரது தாய்மையின் தொடக்கத்திலிருந்தே மகனது மீட்புப் பணியில் பங்கெடுப்பதில், அவர் திரு அவையில் ஒவ்வொரு காலத்தின் மற்றும் இடத்தின் மக்களுக்கும் கிறிஸ்துவின் ஒளி மற்றும் மகிழ்ச்சியைக் கொண்டு செல்ல குறிக்கப்பட்டுள்ளோருக்கு ஒரு முன்மாதிரியாகின்றார்.
3. மரியா
எலிசபெத்தைச் சந்திக்கும் நிகழ்வானது குடும்ப உணர்வின் இயல்பான உணர்ச்சிகளுக்கு அப்பால் செல்கின்ற மகிழ்ச்சியான மீட்பு நிகழ்வின் தன்மையைக் கொண்டுள்ளது. அவநம்பிக்கையின் குழப்பமானது சக்கரியாவின் பேச முடியாத தன்மையில் வெளிப்படுத்தப்படுவதாகத் தோன்றுகையில், மரியா அவரது உயிரோட்டமான மற்றும் உடனடியான நம்பிக்கையின் மகிழ்வோடு இவ்வாறு ஆர்ப்பரிக்கின்றார்: “அவர் செக்கரியாவின் வீட்டை அடைந்து எலிசபெத்தை வாழ்த்தினார்” (லூக்
1:40).
தூய
லூக்கா, “மரியாவின் வாழ்த்தை எலிசபெத்து கேட்டபொழுது, அவர் வயிற்றிலிருந்த குழந்தை மகிழ்ச்சியால் துள்ளிற்று” (லூக்
1:41) என்று விவரிக்கின்றார். மரியாவின் வாழ்த்தொலியானது எலிசபெத்தின் மகன் மகிழ்ச்சியினால் துள்ளக் காரணமாயிற்று. மரியாவின் செயலால், எலிசபெத்தின் இல்லத்தில் இயேசுவின் வருகை, பழைய ஏற்பாடு மெசியாவின் உடனிருத்தலின் அடையாளமாக முன்னறிவிக்கின்ற அந்த மகிழ்ச்சியை, இன்னும் பிறக்காத அந்த இறைவாக்கினர் (திருமுழுக்கு யோவான்) கொண்டு வந்துள்ளது என்றும் பொருள் கொள்ளலாம்.
மரியாவின்
வாழ்த்தில், மீட்பின் மகிழ்ச்சியானது எலிசபெத்திற்கும் வருகின்றது. “எலிசபெத்து தூய ஆவியாரால் முற்றிலும் ஆட்கொள்ளப்பட்டார். அப்போது அவர் உரத்த குரலில், ‘பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர்; உம் வயிற்றில் வளரும் குழந்தையும் ஆசி பெற்றதே!” (லூக் 1:41-42) என்றுரைத்தார். அச்சந்திப்பின்பொழுது
இறையொளியால் எலிசபெத்து மரியாவின் மகத்துவத்தைப் புரிந்துகொள்கின்றார். பழைய ஏற்பாட்டில் மரியாவை முன் குறித்து உணர்த்திய எஸ்தர் மற்றும் யூதித் இவ்விருவரைவிட, அவரது வயிற்றின் கனியாகிய இயேசு என்னும் மெசியாவின் பொருட்டு அவர் பெண்களுக்குள் பேறுபெற்றவராக இருக்கின்றார்.
4. உரத்த
குரலில் எழுப்பப்பட்ட எலிசபெத்தின் வியப்பொலி (exclamation) இன்றும் நம்பிக்கையுள்ளோரின் உதடுகளால் செபத்தில் மீண்டும் மீண்டும் மிகவும் உயர்ந்தவரான அந்த இறைவனது மகனின் தாயில் நிறைவேற்றப்பட்ட அரும்பெரும் செயல்களுக்காகத் திரு அவையின் புகழ்பாடலாக ‘அருள்நிறை மரியே’ என்று தொடர்ந்து ஒலிக்கக் கூடிய, உண்மையான ஓர் ஆன்மிக ஆர்வத்தைக் காட்டுகின்றது.
‘பெண்களுக்குள் பேறுபெற்றவர்’ என்று
அவரை அழைப்பதில், எலிசபெத்து மரியாவின் நிறைவளத்திற்கான (blessedness) காரணமாக அவரது நம்பிக்கையைச் சுட்டிக்காட்டுகின்றார்: “ஆண்டவர் உமக்குச் சொன்னவை நிறைவேறும் என்று நம்பிய நீர் பேறுபெற்றவர்” (லூக்
1:45). இவ்வாறு, மரியாவின் பெருமையும் மகிழ்ச்சியும் அவர் ‘நம்பிக்கை கொண்டவர்’
என்ற உண்மையிலிருந்து எழுகின்றன.
மரியாவின்
தனித் தகுதியினிமித்தம், அவரது சந்திப்பின் பெருமையானது எத்தகையது என்பதை எலிசபெத்தும் புரிந்துகொள்கின்றார்: “என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்?”
(லூக் 1:43). ‘என் ஆண்டவர்’ என்ற சொல்லாடல் வழியாக எலிசபெத்து அரசருக்குரிய மற்றும் மெசியாவிற்குரிய மாண்பை மரியாவின் மகனில் கண்டுகொள்கின்றார். பழைய ஏற்பாட்டில் இந்தச் சொல்லாடலானது உண்மையில் அரசனை அழைப்பதற்கு (ஒப்பிடுக. 1அர 1:13,20,21) மேலும், மெசியாவாகிய அரசரை அழைப்பதற்குப் (திபா 10:1) பயன்படுத்தப்பட்டது. கபிரியேல் தூதர் இயேசுவைப் பற்றிக் கூறியது: “அவர் பெரியவராயிருப்பார்; உன்னதக் கடவுளின் மகன் எனப்படுவார். அவருடைய தந்தை தாவீதின் அரியணையை ஆண்டவராகிய கடவுள் அவருக்கு அளிப்பார்”
(லூக் 1:32). ‘ஆவியானவரால் நிரப்பப்பட்டு’ எலிசபெத்தும்
அதே உள்ளுணர்வைப் (insight) பெற்றிருக்கிறார். இவ்வாறு, ஆழ்நிலை புலனுணர்வின் அடிப்படையில் (transcendent sense) இந்தச் சிறப்புப்
பட்டமானது எவ்வாறு புரிந்துகொள்ளப்படவேண்டும் என்பதைக் கிறிஸ்துவின் பாஸ்கா மகிழ்ச்சியானது வெளிப்படுத்துகின்றது (ஒப்பிடுக. யோவா 20:28; திப 2:34-36).
தெய்வீக மீட்பின்
அனைத்துப்
பணியிலும்
மரியா
உடனிருக்கின்றார்
ஆச்சரியத்துடன்
வியந்து பாராட்டுகிற எலிசபெத்து, கன்னியின் உடனிருப்பானது ஒவ்வொரு நம்பிக்கையாளரின் வாழ்க்கைக்கும் ஒரு பரிசாகக் கொண்டுவரும் அனைத்தையும் பாராட்ட நம்மை அழைக்கிறார். மரியாவின் சந்திப்பில், தூய ஆவியாரைப் பொழியும் கிறிஸ்துவைத் திருமுழுக்கு யோவானின் தாயிடம் அவர் கொண்டுவருகிறார். இந்த இடைமீட்பாளர் பங்கானது (role of mediatrix) எலிசபெத்தின் வார்த்தைகளினால் கொண்டு வரப்படுகின்றது: “உம் வாழ்த்துரை என் காதில் விழுந்ததும் என் வயிற்றினுள்ளே குழந்தை பேருவகையால் துள்ளிற்று” (லூக்
1:44). தூய ஆவியாரின் கொடையால், மரியாவின் உடனிருப்பானது தூய ஆவியாரின் வருகைக்கான தொடக்கமாகப் (prelude to Pentecost)
பயன்படுகிறது. இவ்வாறு, மரியாவின் பங்கானது இயேசுவின் பிறப்பில் தொடங்கிய ஒத்துழைப்பை உறுதிசெய்து, இறை மீட்பின் ஒட்டுமொத்த செயலிலும் வெளிப்படுத்தப்படுவது முன்பே தீர்மானிக்கப்படுகிறது.
மூலம்:
John Paul II, Visitation is prelude to Jesus’ mission, in
«L’Osservatore Romano», Weekly Edition in English, 9 October 1996, p.11.