அதிகாலை மூன்று மணியளவில் வழக்கம் போல மாணிக்கம் தனக்குக் கொடுக்கப்பட்டுள்ள திரைப்படப் போஸ்டர்களை எடுத்துக்கொண்டு சாலையோர சுவர்களில் ஒட்டுவதற்காகச் சென்றான். தனக்குப் பிடித்த நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘படையப்பா’ போஸ்டர்கள் என்பதால் அப்படப் போஸ்டர்களை ஒட்டுவதில் அவனுக்குக் கூடுதல் ஆர்வமும் பொறுப்பும் இருந்தது.
“டேய் மாணிக்கம்! தலைவர் படமாக்கும். நீ பாட்டுக்குக் கழிவறை
சுவற்றிலெல்லாம் ஒட்டி வைக்காத. ஆள் நடமாட்டமுள்ள முக்கியமான இடத்தப் பார்த்து ஒட்டு. காலையில பஸ்ல போறவன், நடந்துபோறவன் எல்லார் கண்ணிலயும் அது படணும்.” சக்தி தியேட்டர் ஓனர் நாகேந்திரன் ரொம்பவே கறாராகச் சொல்லிச் சென்றது மாணிக்கத்தின் நினைவிற்கு வந்தது.
சென்னை
நாகேஸ்வரா பார்க் எதிர்புறமிருந்த அந்த முக்கியமான சுவருக்குப் பெரும் போட்டியிருக்கும். அன்று என்னவோ ஆச்சரியமாக யாரும் அந்தச் சுவற்றில் புதிதாகப் போஸ்டர் ஒட்டியதாகத் தெரியவில்லை. மாணிக்கம் தன் பஜாஜ் எம் 80 பைக்கை ஓரமாகச் சாய்த்து நிற்கவைத்தான். சாலையோரத் தெருவிளக்கின் வெளிச்சத்தில் ஒன்றிரெண்டு துப்புரவுத் தொழிலாளர்கள் எங்கோ தொலைவில் வேலை செய்துகொண்டிருந்தது தெரிந்தது. போர்வைக்குள் உடல் முழுவதையும் திணித்துக்கொண்டு படுத்துறங்கும் சில பிளாட் பார வாசிகளையும் பார்க்க முடிந்தது.
இளம்பெண்
தன் நாட்டிய நாடகத்தின் முடிவில் தன் அலங்காரங்களைக் கழற்றியெடுப்பதுபோலப் பழைய போஸ்டர்களைக் கவனமாகக் கிழித்து அப்புறப்படுத்தினான். ஏற்கெனவே காய்ச்சி கூழாக்கி வைக்கப்பட்டிருந்த மைதா மாவினைக் கையிலே வாரி சுவற்றிலே ஓவியன் படம் வரைவதுபோலக் கவனமாகப் பூசினான். துண்டு துண்டாக இருந்த ‘படையப்பா’
போஸ்டர் ஒன்றையெடுத்து மனித முகத்தை ஒன்றிணைத்தால் அடுத்தப் பக்கத்திலிருக்கும் இந்திய மேப் ஒன்றிணைக்கப் போராடும் பள்ளிக் குழந்தைகளைப்போல மிக ஆர்வமாக அப்போஸ்டரை இணைத்து அச்சுவற்றில் ஒட்டினான்.
கொஞ்சம்
தூரமாக நின்றுகொண்டு தான் ஒட்டிய தன் தலைவன் ரஜினிகாந்தின் சுவரொட்டியைப் பிரமிப்பாகப் பார்த்துக்கொண்டே சில நிமிடங்கள் அங்கேயே நின்று கொண்டிருந்தான்.
அன்று
காலையிலேயே சக்தி தியேட்டர் ஓனர் நாகேந்திரன் மாணிக்கத்தைக் கூப்பிட்டுத் தன் அலுவலகத்தில் சரமாரியாகத் திட்டிக் கொண்டிருந்தார். “உங்கிட்ட ஒரு வேல கொடுத்தா உருப்படியா செய்றியா? நாகேஸ்வரா பார்க் சுவர் எவ்வளவு முக்கியமான இடமுணு உனக்குத் தெரியுமுல்ல. பிறகு ஏன் அங்கப் படையப்பா போஸ்டர் ஒட்டல?”
அங்கு
வேலைசெய்து கொண்டிருந்தவர்கள் முன்பாக மோசமாகத் திட்டியது மாணிக்கத்திற்கு அவமானமாய் இருந்தது. மாணிக்கம் எவ்வளவோ சொல்லிப் பார்த்தான். ஆனால், நாகேந்திரன் நம்புவதாகத் தெரியவில்லை. திட்டையும் வாங்கி, தினக்கூலியையும் வாங்கிக்கொண்டு மாணிக்கம் வெளியேறினான்.
நேராகச்
சென்று நாகேஸ்வரா பார்க் எதிர்புறச் சுவற்றின் முன்பாகப் பைக்கை நிறுத்தினான். தியேட்டர் ஓனர் சொன்னதுபோல அங்கு படையப்பா போஸ்டரைக் காணவில்லை. மாணிக்கத்தால் நம்பவே முடியவில்லை. போஸ்டர் கிழிக்கப்பட்டதற்கான அறிகுறிகூட இல்லை. ‘நான்தான் ஒட்டினேனே, பிறகு எப்படிச் சுவற்றில் போஸ்டர் இல்லாமல் போகும்? ஒருவேளை பீச் சாலையில் போஸ்டர் ஒட்டக்கூடிய ரகு காழ்ப் புணர்ச்சியில தியேட்டர் ஓனரிடம் பொய் சொல்லியிருப்பானோ? இல்லை, அந்தத் துப்புரவு வேலை செய்த பொம்பளைங்க கிழித்தெடுத்திருப்பார்களோ?’
என்று பல்வேறு எண்ணங்கள் தேனீக்கள் விரட்டியடிப்பதுபோல பஜாஜ் எம் 80 பைக்கில் பயணித்துக் கொண்டிருந்த மாணிக்கத்தை விரட்டியடித்துக் கொண்டிருந்தன.
கொஞ்சம்
தூரம் சென்று கொண்டிருந்தபோது கருஞ்சிவலைப் பசுமாடு ஒன்று படையப்பா சுவரொட்டி ஒன்றைத் தன் நீண்ட நாக்கால் சுரண்டியெடுத்துக் கொண்டிருந்ததை மாணிக்கம் பார்த்துக்கொண்டே போகும்போது, எதிரே வந்த லாரி ஒன்றில் மோதி இறந்துபோனான்.
நாகேஸ்வரா
பார்க் எதிர்புறச் சுவரில் மாணிக்கத்தின் பெரிய புகைப்படத்துடன் ‘பிறப்பு: 11.12.1959 இறப்பு: 10.4.1999’ என்ற போஸ்டர் இடம்பெற்றிருந்தது.
திரையரங்குகளின்
நவீனத்தன்மையும் அளவும் மாறியிருந்தாலும், திரைப்படங்களின் மீது மக்கள் கொண்டிருக்கின்ற மோகம் மட்டும் இன்னும் மாறாமல் அப்படியே இருக்கின்றது. பெரிய வெள்ளித்திரையிலிருந்து கைப்பேசித் திரைக்குத் திரைப்படங்கள் வடிவமைக்கப்பட்டிருந்தாலும்
யாரும் திரைப்படங்களைப் பார்க்காமல் இருக்கப் போவதில்லை. திரைமொழியும் திரைக்கதையும் திரைநாயகர்களும் அதற்கு மிக முக்கியமான காரணம் எனலாம். ஆனால், மாறிவரும் டிஜிட்டல் உலகிலே இன்று திரைப்படத்தின் மீது கொண்ட அதீத மோகத்தாலும், தந்திரப் புத்தியினாலும் மனிதர்கள் இலவச இணையத் தளங்களிலிருந்தும், டெலிகிராம் பாட்டுகள் வழியாகவும் சட்டத்திற்குப் புறம்பாகத் திரைப்படங்களைத் தங்கள் சுமார்ட் போனில் அல்லது கணினியில் பதிவிறக்கம் செய்து கண்டு களிக்கின்றனர்.
இந்திய
அரசு 2026-இல் சினிமாட்டோகிராப் சட்டத்தில் (Cinematograph Act) கடுமையான
திருத்தங்களைக் கொண்டு வந்துள்ளது. அதாவது, எவரேனும் அனுமதியின்றித் திரைப்படங்களை வெளியிடுவது அல்லது பதிவிறக்கம் செய்வது நிரூபிக்கப்பட்டால், மூன்று மாதங்கள் முதல் மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது. அது மட்டுமல்லாமல், சட்டவிரோத இணையத்தளங்கள், டெலிகிராம் பாட்டுகள் மற்றும் இலவச ஓ.டி.டி.
தளங்கள் மூலம் திரைப்படங்கள் பதிவிறக்கம் செய்யப்படும்போது, சில கொடிய வைரஸ்கள் திரைப்படத்தோடு இணைந்து பயனர்களின் கணினி அல்லது மொபைலுக்குள் நுழைவதால், பல்வேறு சைபர் கிரிமினல்வாதிகளின் வலையில் சிக்கித் தங்கள் பணத்தையும் தனிப்பட்ட தரவுகளையும் இழக்கின்ற ஆபத்து நேரிடுகின்றது.
தமிழ்நாடு
சைபர் கிரைம் பிரிவு, அங்கீகரிக்கப்படாத செயலிகள் மூன்றாம் தரப்பு இணைய தளங்கள் (Third-party websites),
டெலிகிராம் குழுக்கள் மற்றும் சமூக ஊடகத் தளங்கள் மூலம் திரைப்படங்களைப் பதிவிறக்கம் செய்யவேண்டாம் என்று எச்சரித்திருக்கின்றது. மேலும், பயனர்களின் மொபைல் போன்களில் அல்லது கணினிகளில் சேமித்து வைக்கப்பட்டுள்ள தொடர்புகள் (Contacts), புகைப்படங்கள்
மற்றும் குறுஞ்செய்திகள் போன்ற தனிப்பட்ட தகவல்களை இந்தச் சட்டவிரோதச் செயலிகள் திருடக்கூடும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இவ்வாறு திருடப்படுகின்ற தரவுகளைப் பயன்படுத்தி, சைபர் குற்றவாளிகள் ‘டிஜிட்டல் கைது’
(Digital Arrest) மோசடிகள்,
போலி முதலீட்டுத் திட்டங்கள் மற்றும் போலி வேலைவாய்ப்புச் செய்திகள் போன்ற மோசடி நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடும் என்றும் எச்சரித்துள்ளனர்.
ஆன்லைன்
உலகில் இலவசமாகக் கிடைக்கும் எதுவும் உண்மையில் இலவசம் அல்ல; உங்கள் தனிப்பட்ட தரவுகளே (Data) அங்கு
விலையாகக் கேட்கப்படுகின்றன.
‘If you are
not Paying for the Product, then You are the Product.’