ஒரே பரபரப்பான சூழல்! ஒருபுறம் தேர்வு, மறுபுறம் தேர்தல். சில நேரங்களில் வாழ்க்கை நம்மை அமைதியாக நிறுத்தி வைக்கிறது. அந்த நேரங்களில், நாமே நம்மைக் கேட்டுக்கொள்ளும் கேள்வி: “நான் எடுக்கும் முடிவுகள் சரியானவையா?”
பெரிய
முடிவுகள் மட்டுமல்ல; சிறிய தேர்வுகளும்கூட நம்மை வடிவமைக்கின்றன. ஒரு வார்த்தை பேசுவதா? மௌனமாக இருப்பதா?… ஒரு வழியைத் தேர்வு செய்வதா? திரும்பிப் போவதா? இவ்வளவு சாதாரணமாகத் தோன்றும் சிறிய முடிவுகளில்தான் நம்முடைய வாழ்க்கையின் உண்மையான வாழ்வு வடிவமைக்கப்படுகிறது.
ஒவ்வொருவருடைய
வாழ்க்கையும் ஓர் அழைப்பு. அதை நாம் சில நேரங்களில் ‘பணி’ என்று நினைப்போம். ஆனால், அது அதைவிட ஆழமானது.
கடவுள்
நமக்குக் கொடுத்த வாழ்க்கை, ஓர் அர்த்தமுள்ள பதிலை எதிர்பார்க்கிறது. ஒரு மாணவன் படிக்கிறான், முயற்சிக்கிறான், தவறுகளைச் சரிசெய்கிறான். அவன் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக மட்டுமல்ல; அவனுக்குக் கொடுக்கப்பட்ட திறமைகளை நம்பிக்கையுடன் வாழ்வதற்காக. அதேபோல், நாம் எடுக்கும் ஒவ்வொரு முடிவும், நம்முடைய வாழ்க்கை அழைப்பிற்கு நாம் தரும் பதிலாக மாறுகிறது.
மனசாட்சி - அமைதியாகப்
பேசும்
குரல்
நம்முள்
ஒரு குரல் இருக்கிறது. அது சத்தமாகப் பேசாது;… ஆனால், அது உண்மையை மட்டும் பேசும். சில நேரங்களில் அது நம்மைக் கடினமான பாதைக்கு அழைக்கும். ஆனால், அந்தப் பாதைதான் நிம்மதியைத் தரும்.
திருவிவிலியம்
மெதுவாக நினைவூட்டுகிறது: “மனிதர் முகத்தைப் பார்க்கின்றனர்; ஆண்டவரோ அகத்தைப் பார்க்கின்றார்” (1சாமுவேல்
16:7). அதனால்தான் வெளியில் நல்லதாகத் தோன்றுவது எல்லாம் சரியானதல்ல; உள்ளத்தில் அமைதியைத் தருவதுதான் உண்மையானது.
சுதந்திரம் -
ஒரு
பரிசும்,
ஒரு
பொறுப்பும்
நமக்குச்
சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அது எதை வேண்டுமானாலும் செய்யும் உரிமை மட்டுமல்ல; சரியானதைத் தேர்வு செய்யும் வாய்ப்பு. சில நேரங்களில், எளிதானதைத் தேர்வு செய்வது எளிதாக இருக்கும். ஆனால், நல்லதைத் தேர்வு செய்வதற்குத் தைரியம் தேவை. அந்தத் தைரியம்தான் ஒரு மனிதனை உள்ளிருந்து வலுப்படுத்துகிறது.
சிறிய முடிவுகள்
- பெரிய
தாக்கம்
நாம்
எடுக்கும் சில முடிவுகள் சிறியதாகத் தோன்றலாம். ‘இதில் என்ன இருக்கிறது?’ என்று நாமே நினைக்கலாம். ஆனால், வாழ்க்கை அப்படியில்லை. சிறிய விதைகள்தான் பெரிய மரங்களாக வளர்கின்றன.
திருவிவிலியம்
கூறுகிறது: “மிகச் சிறியவற்றில் நம்பத்தகுந்தவர் பெரியவற்றிலும் நம்பத் தகுந்தவராய் இருப்பார்”
(லூக்கா 16:10).
நம்முடைய
சிறிய நேர்மைகள் ஒருநாள் பெரிய நம்பிக்கையாக மாறும். நாம்
எடுக்கும் முடிவுகள், நம்மை மட்டும் பாதிக்காது. அவை நம்மைச் சுற்றியுள்ளவர்களையும் தொடும்.
ஒரு
குடும்பம்… அல்லது
ஒரு சமூகமும் கூட, ஒரு மனிதனின் சரியான முடிவால் வளம் பெற முடியும். அதனால்தான், நாம் எடுக்கும் ஒவ்வொரு தேர்வும் ஒரு தனிப்பட்ட செயல் மட்டுமல்ல; ஒரு சமூகப் பொறுப்பும்கூட.
வாழ்க்கை
எப்போதும் நமக்கு வாய்ப்புகளை அளிக்கிறது. சில நேரங்களில் அவை பெரியதாக இருக்கும்; சில நேரங்களில் மிகவும் சாதாரணமாக இருக்கும். ஆனால், ஒவ்வொரு தருணமும் ஒரு கேள்வியை நம்மிடம் கேட்கிறது: “நீ எதைத் தேர்வு
செய்கிறாய்?”
இந்தக்
கேள்விக்கான பதில்தான் நம் வாழ்க்கையின் பாதையை உருவாக்குகிறது. சரியானதைத்
தேர்வு செய்வது எப்போதும் எளிதாக இருக்காது; ஆனால், அந்த ஒரு நேர்மையான தேர்வு, நம்முள் ஒரு நல்ல மனிதனையும், நம்மைச் சுற்றி ஒரு நல்ல உலகத்தையும் உருவாக்கும்.