news-details
இந்திய செய்திகள்
சமூகக் குரல்கள்

டெல்லியில் பா... ஆட்சிக்கு வந்தபிறகு, நாங்கள் செய்த அனைத்து நல்ல பணிகளையும் அவர்கள் முழுமையாகச் சிதைத்துவிட்டனர். மத்தியில் இருக்கும் பா... அரசு, மாநில அரசுகளை ஒடுக்குவதற்கும், எல்லா இடங்களிலும் சனநாயகத்தைப் படுகொலை செய்வதற்கும் முயற்சி செய்கிறது. ஒன்றிய அரசின் இந்தச் சர்வாதிகாரப் போக்கை எதிர்த்து நிற்கும் ஒருசில எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. ஸ்டாலின், ஒன்றிய அரசின் இந்தச் சர்வாதிகாரப் போக்கை வலுவாக எதிர்ப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. தொகுதி மறுவரையறை மசோதா (Delimitation Bill) என்பது சனநாயகத்தின்மீது நடத்தப்பட்ட ஒரு தாக்குதல். அது இப்போது தோற்கடிக்கப்பட்டிருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இது மத்தியில் உள்ள மோடி அரசுக்குக் கிடைத்த மிகப்பெரிய தோல்வி. மோடி அரசின் நாள்கள் எண்ணப்பட்டு வருகின்றன என்று நான் நினைக்கிறேன்.”

திருமிகு. அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி மேனாள் முதல்வர், ஆம் ஆத்மி கட்சித் தலைவர்

நம்முடையஇந்தியாகூட்டணி, திராவிட முன்னேற்றக் கழகத் தலைமையில் உள்ள மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் 39 நாடாளுமன்ற உறுப்பினர்களும் டெல்லிக்குச் சென்று இந்த மசோதாவைத் தோற்கடித்திருக்கிறார்கள். இதனால் அரசியல் சாசனம் காப்பாற்றப்பட்டது, அண்ணல் அம்பேத்கர் அவர்கள் வடித்துத் தந்த அரசியல் சாசனம் காப்பாற்றப்பட்டது. இந்த அரசியல் சாசனத் திருத்தம் மட்டும் நிறைவேறி இருந்தால், மேலும் மேலும் அரசியல் சாசனங்களைத் திருத்தியிருப்பார்கள். சிறுபான்மை உரிமைகளைப் பறித்திருப்பார்கள். இசுலாமியர்கள் வக்ஃபு சட்டத்தைச் சட்டமாக்கி இருப்பார்கள். எஃப்.சி.ஆர்.. திட்டத்தைச் சட்டமாக்கி நடைமுறைப்படுத்தியிருப்பார்கள். பேச்சுரிமையைக் குறைத்திருப்பார்கள், எழுத்துரிமையைக் குறைத்திருப்பார்கள், அரசியல் சாசனத்தைத் திருத்தாமல் இதையெல்லாம் செய்ய முடியாது. இந்த அரசியல் சாசனத் திருத்தத்தை அனுமதித்திருந்தால், அடுத்தடுத்து அரசியல் சாசனங்கள் திருத்தப்படும். அதைத் தடுத்தது நாடாளுமன்ற உறுப்பினர்கள். அந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எனது பாராட்டுகள்.”

திருமிகு. .சிதம்பரம், மேனாள் ஒன்றிய நிதி அமைச்சர், மூத்த காங்கிரஸ் தலைவர்

தமிழ்நாட்டில் பல இடங்களில் மக்கள் ஒன்றாக வாழ்கின்றனர். இந்த ஒற்றுமையை உடைக்க முயற்சிகள் நடைபெறுகின்றன. மத அடிப்படையில் பிரித்து, சமூகத்தைச் சிதைக்கும் முயற்சிகள் மிகவும் ஆபத்தானவை. இதுவரை மேற்கொண்ட முயற்சிகள் தமிழ்நாட்டில் வெற்றி பெறவில்லை. பல இடங்களில் இந்துகள், முசுலிம்கள், கிறித்தவர்கள் என அனைவரும் இணைந்து இந்தப் பிரச்சினைகளை நிர்மூலமாக்கி உள்ளனர். நாம் ஒரு முக்கியமான கட்டத்தில் இருக்கிறோம். வெறுப்பு அரசியலை எப்படிக் கையாளப் போகிறோம்? என்ன வீச்சில் விரட்டி அடிக்கப் போகின்றோம்? என்பதே! மதம் என்னும் கோடாரி கொண்டு மனித இதயங்களைப் பிளக்கும் சக்திகளை முழு மூச்சில் முழுவதும் விரட்டி அடிக்கவேண் டும்.”

திருமிகு. நா. மணி பேராசிரியர், மேனாள் தலைவர், தமிழ்நாடு அறிவியல் இயக்கம்