news-details
திருத்தந்தையின் முழக்கம்
திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள் (05.04.2026)

சிறார் பாதுகாப்பு மற்றும் பராமரிப்புப் பண்பாட்டினைத் திரு அவை வாழ்வின் அனைத்து நிலைகளிலும் உறுதிப்படுத்தவேண்டும்.”

மார்ச் 16, சிறார் பாதுகாப்பிற்கான பாப்பிறை ஆணைய உரை

அமேசான் சமூகங்களின் கலாச்சாரப் பாதுகாப்பும், நற்செய்தி ஒருங்கிணைப்புமே திரு அவையின் நீடித்த வளர்ச்சி.”

மார்ச் 17, அமேசான் தலத்திரு அவை ஒன்றிப்புச் செய்தி

திருமுழுக்கின் வழியாக இறைமக்கள் அனைவரும் கிறிஸ்துவின் அரசத்துவ, குருத்துவ மற்றும் இறைவாக்குப் பணிகளில் பங்கேற்று, நற்செய்தியின் சாட்சிகளாகத் திகழ்கின்றனர்.”

மார்ச் 18, புதன் மறைக்கல்வி உரை

நலவாழ்வு என்பது ஆடம்பரமல்ல; அது ஓர் அடிப்படை உரிமை; ஏற்றத்தாழ்வுகளைக் களைந்து, ஒருங்கிணைந்த பராமரிப்பை உறுதிப்படுத்தவேண்டும்.”

மார்ச் 18, ஐரோப்பிய நலவாழ்வு மாநாடு

குடும்பங்களைஇல்லறத் திரு அவையாகமதித்து, நவீன சவால்களுக்கேற்ப அவர்களுக்கு இரக்கத்துடன் வழிகாட்டவேண்டும்.”

மார்ச் 19, புனித வளனார் பெருவிழா செய்தி

சுயநலக் கல்லறைகளிலிருந்து விடுபட்டு, கிறிஸ்துவின் உயிர்ப்பில் நிலைவாழ்வு எனும் நம்பிக்கையைப் பெற்று வாழவேண்டும்.”

மார்ச் 22, மூவேளைச் செப உரை