news-details
வத்திக்கான் செய்திகள்
திருத்தந்தையின் புதிய நூல்!

திருத்தந்தை லியோ, புனித அகுஸ்தின் சபையின் தலைவராகப் (2001-2013) பணியாற்றிய காலத்தில் எழுதிய தொகுப்புகளின் முதல் இத்தாலியப் பதிப்பு அவரிடம் சமர்ப்பிக்கப்பட்டது. ‘Free Under Graceஎன்று பெயரிடப்பட்டுள்ள இந்நூலை, வத்திக்கான் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. மே 4 முதல் விற்பனைக்கு வந்துள்ள இந்நூலின் முதல் பிரதியை புனித அகுஸ்தின் சபையின் தற்போதைய தலைவர் தந்தை ஜோசப் ஃபாரல் திருத்தந்தையிடம் வழங்கினார். வத்திக்கான் ஆவணக்காப்பகத்தின் பொறுப்பாளர் தந்தை ரோக்கோ ரொன்சானி மற்றும் வத்திக்கான் பதிப்பக இயக்குநர் லோரென்சோ ஃபாசினி ஆகியோர் உடனிருந்தனர்.

இந்நூல் திருத்தந்தை லியோவின் ஆன்மிகச் சிந்தனைகள், உரைகள் மற்றும் கடிதங்களின் தொகுப்பாகும். அக்டோபர் 2025-இல் பிராங்பேர்ட் புத்தகக் கண்காட்சியில் அறிவிக்கப்பட்டப்படி, இது தற்போது உலகின் 30 நாடுகளில் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வருகிறது. மே 6 அன்று உரோமையில் நடைபெற்ற விழாவில், வத்திக்கான் வெளியுறவுத்துறைச் செயலர் கர்தினால் பியத்ரோ பரோலின் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் முன்னிலையில் இந்நூல் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது.