நவீன காலத்தில் மனிதநேயம் குறைந்து வரும் நிலையில், அதனை மீண்டும் உயிர்ப்பிக்கவும், அலட்சியத்தைப் போக்கி ஒருமைப்பாட்டை வளர்க்கவும் கிறித்தவரும் இசுலாமியரும் கைகோர்க்கவேண்டும் என்று திருத்தந்தை லியோ அழைப்பு விடுத்துள்ளார். மேலும், இஸ்லாமிய மரபில் ‘ரஃபா’ (ra’fa) எனப்படும் இரக்கம் என்பது கடவுளால் இறைப்பற்றாளர்களின் இதயங்களில் வழங்கப்படும் ஒரு பரிசு. இறைவனின் 99 திருப்பெயர்களில் ஒன்றான ‘அல்-ரவூப்’ (al-Ra’uf) என்பது, இரக்கத்தின் ஊற்றுக்கண் கடவுளே என்பதை நமக்கு நினைவூட்டுகிறது. கிறித்தவ மரபில் இந்தத் தெய்வீக இரக்கம் இயேசுவின் வழியாக உருவம் பெற்று, மனிதத் துன்பங்களை அவரே அனுபவிப்பதன் மூலம் வெளிப்படுகிறது. ஏழை எளியோர் மீதான அன்பு என்பது ஒரு விருப்பத்தேர்வு அல்ல; மாறாக, அது நமது கடமை என்று வலியுறுத்திய திருத்தந்தை, அகதிகளை வரவேற்கும் ஜோர்டான் நாட்டின் தாராளமான முயற்சிகளையும் பாராட்டினார்.