news-details
சிறப்புக்கட்டுரை
எல்லாமே சினிமாதான்!

நாஜி ஹிட்லரின் அமைச்சர்  கோயபல்ஸ், “ஒரு பொய்யைத் மீண்டும் மீண்டும் சொல்; அதை உண்மை என நம்ப வை; கேட்பவரின் மூளையைச் சலவை செய்; மனிதரின் ஆழ்மனதைப் பாழ்படுத்தி, அவர்களின் எண்ணங்கள், நம்பிக்கைகள் மற்றும் நடத்தைகளை மாற்றும் புதிய  மனித உளவியலை  உருவாக்குஎன்றார். அப்படி மாறுபவர்கள் திரைப்படங்களில் காட்டப்படும் பிணவுரு (ஜோம்பி) போன்றவர்கள். சிந்திக்கும் திறனற்ற இவர்கள் எக்காரணமுமின்றி மனிதர்களைத் தாக்கிக்கொல்லும் இறக்காத, அழிக்க முடியாத அரக்கர்களாக இருப்பார்கள்.

1978 - அமெரிக்காவின் கயானா பகுதியில், ஜிம் ஜோன்ஸ் என்பவர்மக்கள் ஆலயம்எனும் பெயரில் புரட்சிகர சபை ஒன்றை நடத்தி வந்தார். பின் சித்தப்பிரமை பிடித்து, சர்வாதிகாரத் தலைவராக மாறினார். தன் சபை மக்களை ஒரு தொலைதூரக் காட்டுச் சமூகத்திற்குள் உட்படுத்தி, முழுமையான நம்பிக்கை வேண்டினார். உச்சகட்டமாகஅனைவரும் சயனைடு அருந்தி மரிக்கலாம்என்றார். மறுத்தவர்களை, தப்பிக்க முயன்றவர்களை அவரது ஆதரவாளர்கள் கட்டாயப்படுத்தி சயனைடு கொடுத்தனர். 300 குழந்தைகள் உள்பட 918 பேர் மரித்துப் போயினர். இது உலகிலேயே தனிமனித வழிபாட்டுக் குழுக்களின் அவர்களின் நடத்தையில் உள்ள ஆபத்தைப் பேசும் வரலாற்று நிகழ்வாகப் பதிந்துள்ளது.

இதுபோன்றே 1997 - கலிபோர்னியாவில் ரென்சோ சாண்டோஃபேவில், ‘சொர்க்கத்தைக் காட்டுகிறேன், சொர்க்க வாசல்என்ற பெயரில் ஒரு நிகழ்வும் நடந்தது. இதன் தலைவர் மார்சல் ஆப்பிள் வைட் உள்பட 39 பேரும் ஹேல்-பாப்  வால்மீனைப் பின்தொடர்வதாக, தாங்கள் நம்பிய விண்கலத் தில் பயணம் செய்ய விஷம் அருந்தியும், பிளாஸ்டிக் பைகளில் மூச்சுமுட்ட வைத்தும் தற்கொலை செய்தனர். குழுத் தலைவன் என்ற பெயரில் குழு உளவியலை உருவாக்குவதில் இவர்கள் வெற்றி பெறுகிறார்கள். ஒரு தலைவரைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றுதலில் உள்ள அபாயம் புவிப்பந்தின் எல்லாத் திசைகளிலும் வியாபித்திருக்கிறது.

நம் சமூக அமைப்பிலும் இதுபோன்ற மனிதர்களைக் காண்கிறோம். அவர்கள் சிந்திக்கும் திறனின்றி இருக்கிறார்கள். குறைந்த கல்வி அறிவே அடையாளமாக உள்ளது. அவர்கள் உலகில் அவர்கள் மட்டுமே இயந்திரத்தனமாக வாழ்கிறார்கள். மிரட்டி காரியம் சாதிப்பதில் வல்லவர்களாக வலம் வருகின்றார்கள். சமூகம் குறித்து, சட்டதிட்டங்கள் குறித்துக் கவலை கொள்வதில்லை. கூட்டுப் புழுக்களாக அடைந்துகொள்கிறார்கள். எடுப்பார் கை பிள்ளைகளாக நடுங்குகிறார்கள். ஆனால், ‘தான்என்ற அகந்தையில் தலைவனாக அடம் பிடிக்கிறார்கள். ஒவ்வொரு  மனிதர்களாக இருந்த அவர்கள் குழுவாகி, தலைவன் என்ற அடையாளமும் கொண்டு, பொது அமைதியைக் கெடுக்கிறார்கள். சமூக ஊடகங்களில் அடாவடி, குழாயடி யுத்தத்தில் அட்டைக்கத்தி வீசுகிறார்கள். அதற்குத் தேவையானரீல்ஸ்திட்டமிட்டு எடுக்கப்படுகிறது.

ஒரு பொதுக் கூட்டம் கூட்டப்படுகிறது. ஆயிரம் துணை நடிகர்கள் நிற்கிறார்கள். சிலருக்கு மட்டும் கேமிரா ஆங்கிளில் நிற்க, நடிக்க வழிவகை கூறப்பட்டுள்ளது. ஓர் இரசிகை என்ற போர்வையில் அவர் தன் பிம்ப நாயகனைப் பார்த்துக் கதறுகிறார்.

நடிப்பு பிரமாதமாக அமைகிறது. இயக்குநருக்கு அவரைவிட மனமில்லை. உடை, சிகை அலங்காரம், கண்ணாடி, நிறம், முக அமைப்பு மாற்றப்படுகிறது. அடுத்தக் கூட்ட காட்சியிலும் அவர் அற்புதமாக நடிக்கிறார். ஆனால், அவர் விரலில் அணிந்திருந்த மோதிரத்தை மாற்ற மறந்துவிட்டார். அனைத்தும் நாடகம் என, பின் அடையாளம் காணப்பட்டார்.

தேர்தல் விளம்பரம் ஒன்று இவர்களிடமிருந்து வருகிறது. அதில் அய்யங்காராக நடித்தவரின்வந்துக்கின்னு, போய்க்கின்னுசென்னை தமிழ் இவர் யாரென அடையாளம் காட்டியது. இவர்களது திட்டக் குழு, சில மாதிரி விடியோக்களை வெளியிடும். இரசிக, இரசிகைகள்கப்பெனப் பிடித்து, பின்தொடர வேண்டியதுதான். சில சின்னக்  குழந்தைகளின் வீடியோக்களும் இதே இரகம்தான். மறு வடிவாக இவர்களது  தலைவரின் ஓடாத படத்தைப்பில்டப்செய்து ஓடவைத்ததும், பிற போட்டி நடிகர்களைத் தாக்குவதும் காலங்காலமாக இவர்கள் செய்யும் வெறிச்செயலாகும்.

குறிப்பாக, ‘சனநாயகனுக்குபோட்டியாகபராசக்திபடம் எனப் பொங்கிய பொங்கல், அப்படக் கதாநாயகன் சிவகார்த்திகேயன்மீது நடந்த இரசிக, இரசிகைகளின் ஆபாசத் தாக்குதல்கள் இவர்களின் கேவலத்தின் உச்சம்.

தமிழ்நாட்டுத் தலைவர்களான பெருந்தலைவர் காமராசர், பேரறிஞர் அண்ணா, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., கலைஞர் கருணாநிதி போன்றோர் பல வேளைகளில் கல்லூரி மாணவர்களைச் சந்திக்கும் போது கூறுவார்கள்: “நீங்கள் முதலில் நன்றாகப் படியுங்கள்; நல்ல வேலைக்குச் செல்லுங்கள்; உங்கள் பெற்றோர், குடும்பத்தைக் கவனியுங்கள்; நல்ல நிலைக்கு வந்தபின்பு அரசியலுக்கு வாருங்கள்.”

இந்தப் புதிய தலைவர் பொறுப்பற்றுக் கூறுகிறார்: “குழந்தைகளே, நீங்கள் சாக்லேட், கிண்டர் ஜாய்க்கு அடம்பிடிப்பதுபோல அடம்பிடித்து, எனக்கு  வாக்களிக்கச் சொல்லவேண்டும்.” இது தேர்தல்களில் சிறுவர்-சிறுமிகளைப் பயன்படுத்தக் கூடாது  என்பதற்கான அப்பட்டமான விதிமுறை மீறல் என்பதாம். எத்தனை சின்னக் குழந்தைகள் அடம்பிடிக்கும் ரீல்ஸ் பெற்றோரை வாக்களிக்கத் தூண்டும் மிரட்டல்கள், எந்த விதியும் கடைப்பிடிக்காத ஜோம்பிகளின் அலப்பறைகளாகவும் அட்ராசிட்டியாகவும் அமைந்தது.

உலகிலே எந்தக் கட்சிக்கும் சிறு குழந்தைகளுக்கான அணி இல்லை. ஏனெனில், குழந்தைகள் பகுத்தறியும் பண்பு குறைந்தவர்கள். அவர்களை அரசியலுக்கு இழுத்துகுட்டி நண்பா, நண்பிகளுக்கு நன்றிஎனும் சினிமா நாடகம் அருவருப்பானது. இதனால் தன் குழந்தையிடம் பொய் பேசி, மன உளைச்சலுக்கான தந்தை ஒருவர் கோவை மாநகர ஆணையாளரிடம் புகார் கொடுத்துள்ளார். புகார்மீது நடவடிக்கை எடுக்காவிடில் நீதிமன்றம் செல்லவும் முன்வந்துள்ளார்.

நாம் சிறு வயதில் இருந்தபோது, நாம் சாப்பிட மறுத்தால் நிலா, ஆடு, மாடு, கோழி, சைக்கிள் என வேடிக்கை காட்டுவார்கள். இன்று ஒரே மாற்று அலைப்பேசிதான். மூன்று வயதில் குழந்தை அலைப்பேசிக்கு அடிமையாகி விடுகிறது. அதில்  உள்ளஅல்காரிதம்தொழில்நுட்பம் ஸ்வைப், ஸ்கோரல், ரிப்பிட் எனக் குழந்தைகளைக் கூடரீல்பைத்தியமாக்கி விடுகிறது. அதன் அடிப்படையில் நடிகரின் பிம்ப அரசியல் திட்டமிட்டுக் கட்டமைக்கப்பட்டது.

12 முதல் 16-வது வயது வரையிலான மற்றும் 16 முதல் 18 வயது வரை குழந்தைகளின் சமூக ஊடகப்  பயன்பாடு குறித்தும், ஆஸ்திரேலியா, மலேசியா, இந்தோனேசியா போன்ற நாடுகள் கடுமையாகச் சட்டங்களைக் கொண்டு வந்துள்ளது. இந்தியாவில் விரைவில் கர்நாடகா அரசு இது போன்ற சட்டத்தைக் கொண்டுவர முடிவு செய்துள்ளது. இணையவழிக் குற்றங்களில், பொறுப்பற்ற பதிவுகளும் சேர்க்கவேண்டும். வேற்றுக் கிரகவாசிகள்போல் செயல்படும் சமூகப் பொறுப்பற்றவர்களின் இரசிக மனப்பான்மைக்கு  முற்றுப்புள்ளி  வைக்கவேண்டும்.

இணையம் மட்டுமல்ல, தமிழ்நாட்டின் நான்கு செய்தி தொலைக்காட்சிகள் பொய் செய்தி, வீண் புரளி கிளப்பி, பொது அமைதியைக் கெடுத்தன. இவர்களது பிம்ப அரசியல் நனவானால் நாடு இரசிகக் கூட்டத்தால் கம்போடியாபோல் மாறிவிடும் என மலேசியாவைச் சார்ந்த ஒருவர் எச்சரிக்கிறார். அங்கு நடைபெற்ற இது போன்ற சுயசிந்தனையற்ற பிம்ப வெறியர்களால் ஒரு மில்லியன் (10 இலட்சம்) பேர் கொல்லப்பட்டார்கள்  என்பது வரலாறு. காரணம், கொல்லப்பட்டவர்கள் அனைவரும் படித்தவர்கள், அறிவாளிகள் என்பதே. இங்கு சினிமா என்பது சினிமாதான். அது சினிமா அரசியல் அல்ல; மேலும், அது பிம்ப அரசியலும் அல்ல!