news-details
வத்திக்கான் செய்திகள்
“சிறுவர்களைப் பாதுகாப்பது திரு அவையின் தலையாய கடமை”

சிறுவர்களைப் பாதுகாப்பதற்கான இலத்தீன் அமெரிக்க ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையத்தின் (CEPROME) பிரதிநிதிகளைச் சந்தித்த திருத்தந்தை லியோ, “சிறுவர் மற்றும் பலவீனமானவர்களைப் பாதுகாப்பது திரு அவையில் உள்ள ஒவ்வொருவருக்குமான கட்டாயக் கடமையாகும்என்று வலியுறுத்தியுள்ளார். கிறிஸ்துவைச் சந்திப்பது ஒரு மனிதனை அன்பை நோக்கி வழிநடத்துகிறது; ஆனால், பாலியல் தொந்தரவுகள் ஒருவரது ஆன்மிக மற்றும் மனித வளர்ச்சியைச் சிதைக்கும் ஆழமான காயங்களை ஏற்படுத்துகின்றன என்று திருத்தந்தை கவலை தெரிவித்தார். எனவே, திரு அவைச் சமூகம் அனைத்தும் அச்சமும் சந்தேகமுமற்ற, இயேசுவைச் சந்திக்கும் பாதுகாப்பான இடங்களாக மாறுவது அவசியம் என்றார். கடந்த வாரம் ஸ்பெயின் நாட்டிற்கு மேற்கொண்ட திருத்தூதுப் பயணத்தின்போது அந்நாட்டு ஆயர்களிடம் விவரித்ததைக் குறிப்பிட்ட அவர், பாலியல் தொந்தரவுகளால் பாதிக்கப்பட்டவர்களின் வேதனைக்குத் திரு அவைச் சமூகம் எப்போதும்செவிமடுத்தல், உண்மை, நீதி மற்றும் தடுப்பு நடவடிக்கைகள்மூலம் பதிலளிக்கவேண்டும் என்றார். இறுதியில், தலத்திரு அவைகளும் குடிமை அமைப்புகளும் இணைந்து முதியோர், சிறுவர் போன்ற பலவீனமானவர்களைப் பாதுகாக்கும் கலாச்சாரத்தை வளர்க்கவேண்டும் என்றும்  தெரிவித்துள்ளார்.