news-details
திருத்தந்தையின் முழக்கம்
திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள் (21.06.2026)

வெறும் எண்களும் தரவுகளும் மட்டுமே ஒரு சமுதாயத்தை உருவாக்கிவிட முடியாது; மக்களின் இதயங்கள் ஒன்றிணைந்து பாடுபடும்போதுதான் உண்மையான ஆன்மிகக் குடும்பம் உருவாகும்.”

ஜூன் 09, ‘IFEMA Madridகண்காட்சி மையத்தில்  கத்தோலிக்கத் தன்னார்வலர்கள் மற்றும் ஆன்மிகப் பணியாளர்களுடன் சந்திப்பு

வலுவான கிறித்தவச் சமூகங்கள், மகிழ்ச்சியான அருள்பணியாளர்கள், நம்பிக்கையுள்ள குடும்பங்கள் மற்றும் உண்மையான சான்று வாழ்வு ஆகியவை புதிய அழைத்தல்கள் வளர சிறந்த மண்ணாகத் திகழ்கின்றன.”

ஜூன் 08, ஸ்பெயின் நாட்டு ஆயர்களுடன் சந்திப்பு

கருணையே கடவுளின் உண்மையான முகத்தைப் பிரதிபலிக்கிறது. மேலும், நம்பிக்கையாளர்களை அமைதியையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தும் கருவிகளாக மாற்றுகிறது.”

ஜூன் 07, 6-வது உலகக் கருணை திருத்தூது மாநாட்டின் தொடக்கச் செய்தி

உண்மையான பாதுகாப்பு என்பது சுவர்களாலும் ஆயுதங்களாலும் கட்டமைக்கப்படுவதில்லை; மாறாக, ஒற்றுமையிலும் ஒருவரையொருவர் நம்புவதிலும் நாம் இணைந்து வளர்வதன் மூலமே உருவாக்கப்படுகிறது.”

ஜூன் 06, மாட்ரிட்டில் உள்ள அரசு அதிகாரிகளுடன் சந்திப்பு

கல்வி என்பது வெறும் உலகியல் அறிவை மட்டும் தராமல், நம்பிக்கையின் அடிப்படையில் மாணவர்களை ஆன்மிகப் பாதையிலும், நல்வாழ்விலும் வழிநடத்தவேண்டும்.”

ஜூன் 03,  உரோம் 2026-ஆம் ஆண்டு கருத்தரங்கில் பங்கேற்ற கல்லூரி மற்றும் பல்கலைக்கழகப் பிரதிநிதிகளுடன் சந்திப்பு