news-details
திருத்தந்தையின் முழக்கம்
திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள் (28.06.2026)

திரு அவையின் அனைத்து இடங்களும் உடல்ரீதியாகவும் இணைய வழியிலும் அச்சம், சந்தேகம் மற்றும் அவநம்பிக்கை இன்றி இயேசு கிறிஸ்துவை அனுபவிக்கும் பாதுகாப்பான சூழல்களாக இருக்கவேண்டும்.”

ஜூன் 17, அமெரிக்கச் சிறார்கள் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மைய உறுப்பினர்களுடன் சந்திப்பு

அரசியல், பொருளாதார மற்றும் கலாச்சாரத் தலைவர்கள் இலாபத்தைவிட, பொதுநலனுக்கு முன்னுரிமை அளித்து, அன்பின் நாகரிகம் உருவாகப் பாடுபடவேண்டும்.”

ஜூன் 16, ஆஸ்திரிய உலக உச்சி மாநாட்டுக் காணொளிச் செய்தி

முதுமை என்பது ஆன்மிக வளர்ச்சிக்கும், இறைவனின் அன்பைப் புதிதாகக் கண்டறிவதற்கும், நம்பிக்கையை ஆழப்படுத்துவதற்குமான அருள் நிறைந்த காலம்.”

ஜூன் 15, உலக தாத்தா-பாட்டியர் மற்றும் முதியோர் தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள செய்தி

இயேசுவின் இரக்கம் என்பது வெறும் அனுதாப உணர்வு மட்டுமல்ல; அது மனிதர்களை மீட்டு புதிய வாழ்வை அளிக்கும் அன்பின் வெளிப்பாடாகும்.” 

ஜூன் 14, நண்பகல் மூவேளை இறைவேண்டல் உரை

அருள்பணித்துவப் புனிதத்துவம் என்பது தனிமை அல்லது அதிகப்படியான செயல்பாடுகளில் அல்ல; மாறாக, அருகாமை, கருணை, செவிமடுத்தல் மற்றும் சகோதரத்துவத்தின் மூலம் வெளிப்படுகிறது

ஜூன் 12, அருள்பணியாளர் புனிதப்படுத்துதலுக்கான உலக செப நாள் செய்தி